அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

சிலுவை இல்லாமல் கத்தோலிக்க கிறிஸ்தவம் இல்லவே இல்லை

சிலுவை : சிலுவை இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. அதிலும் சிலுவை இல்லாமல் கத்தோலிக்க கிறிஸ்தவம் இல்லவே இல்லை. சிலுவையே கிறிஸ்துவத்தின் அச்சு, ஆதாரம், ஆதாயம். சிலுவையே நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

இன்னும் சொல்லப்போனால் சிலுவைதான் நமது மோட்சவீட்டின் கதவை திறக்கும் சாவி. முதல் சாவி நம் இயேசு தெய்வத்தினுடைய சிலுவை. நமக்கு மீட்பு தேடித்தந்த சிலுவை. நம்மை மீட்ட சிலுவை. இது ஆண்டவராகிய இயேசுவினுடைய சிலுவை, அதனால்தான் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.

இரண்டாவது சாவி இந்த உலகத்தில் நமது பாவங்களுக்காக நாம் செய்யும் பரிகாரங்கள் என்னும் துன்ப சிலுவை. இந்த சிலுவையே நம்மை ஆண்டவராகிய இயேசுவிடம் ஒப்புரவாக்கும் சிலுவை. அவரிடம் நம்மை கொண்டு சேர்க்கும் சிலுவை; சிலுவைகள் வேண்டாம் என்றால் பரலோகம் இல்லை.சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை என்று இயேசுவே சொல்லிவிட்டார்.

முதல் சிலுவையின் சாவி நாம் சம்பாதிக்காத்து. ஆண்டவர் இயேசு நமக்காக சம்பாதித்து கொடுத்தது. நமக்கு எளிமையாக கிடைத்து விட்டது. இரண்டாவது சிலுவையின் சாவி நாம் சம்பாதிக்க வேண்டியது. துன்பங்களை கண்டு பயந்து நடுங்கி ஓடிவிட்டால் சம்பாதிக்க முடியாது. நம்முடைய துன்பங்கள் என்னும் சிலுவைகள். அன்றாடம் நமக்கு கடவுளால் கொடுக்கப்படும் வரப்பிரச்சாதம் என்னும் துன்பச் சிலுவைகள். இந்த சிலுவைகளை முழுமையாக முனுமுனுக்காமல் சுமந்ததால்தான் அவர்கள் புனிதர்கள் ஆனார்கள்.

சிலுவைகளை சுமக்க வேண்டிய சக்தியை நாம் ஆண்டவரிடம் கேட்கலாம். புனித சின்னப்பரைப்போன்று அதை நீக்கவும் கேட்கலாம். ஆனால் அதை எடுப்பதும் அப்படியே வைத்திருப்பதும் நம் சர்வேசுவரனின் விருப்பம்.
ஆனால் “ இயேசு சிலுவை சுமந்து விட்டார். இனி நான் சுமக்கத் தேவையில்லை. எனக்கு சிலுவை வேண்டாம், துன்பம் வேண்டாம். நான் எப்பவும் சவுகரீகமாக; சவுபாக்கியமாக எந்தக் கஷ்ட்டமும் இல்லாமல் அங்கு அது நடக்கிறது இங்கு அற்புதம் நடக்கிறது என்று திவ்ய நற்கருணை நாதரும், நம் பரிசுத்த அன்னை மாமரியும் இல்லாத இட்த்தை தேடி ஓடினால் அவர்களுக்கு பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

சிலுவைகள் சுமக்காத எந்த புனிதர்களும் இல்லை. எந்தப்புனிதரும் சிலுவைகள் சுமக்காமல் இருந்ததும் இல்லை. சிலுவையைக் கண்டுபிடிப்பவன் ஆண்டவர் இயேசுவை எளிதாக கண்டு பிடித்துவிடுவான். ஆண்டவர் இயேசுவைக் கண்டுபிடித்தவன் சிலுவைகள் இல்லாமல் ஒரு நாளும் தூங்க மாட்டான்.

நமதாண்டவர் சிலுவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும் “
லூக்காஸ் 9 : 23
“ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது “
லூக்காஸ் 14 : 27

(குறிப்பு : உங்களிடம் பைபிளை கையில் வைத்துக்கொண்டு வருபவர்கள் மாதாவைப்பற்றியும், சிலுவையைப் பற்றியும் பேசவில்லையென்றால் அல்லது அவதூறாக பேசுகிறார்கள் என்றால் அவர்கள் பக்கம் இருப்பது யார் என்று எளிதாக கண்டு கொள்ளலாம்)

ஆகையினால் கடவுள் கொடுக்கும் சிலுவை வாய்ப்புகளை நாம் வீணடிக்கக்கூடாது. அது கைவலி, கால்வலி, நோயாக இருக்கலாம், இல்லை அசவுகரீகங்களாக இருக்கலாம். மழை, வெயில், குளிராக இருக்கலாம், ஏன் சமையல், படிப்பு நம் வேலையாகக்கூட இருக்கலாம். அதை நாம் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். நோயாளிகள் மருத்துவம் செய்யவேண்டும். நம் நோய்கள் குணமாகும்வரை உள்ள வேதனைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும். சில நேரங்களில் அந்த நோயை அவரே குணமாக்கவும் செய்யலாம்.
. “ சிலுவையிலேதான் மீட்சியுண்டு; தேடும் வானக மாட்சியுண்டு”

ஆகையினால் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுப்போம்; நாம் சிலுவை என்ற ஆயுதத்தை பயன்படுத்துவோம். நம்மிடம் சிலுவை இருந்தால் நம் பக்கம் சாத்தான் வர மாட்டான். வரவே மாட்டான்.
ஆக ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கட்டாய தேவை சிலுவை...சிலுவை..சிலுவை....

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க⁠⁠⁠⁠

No comments:

Post a Comment