ஏக பரிசுத்த அப்போஸ்தலிக்க கத்தோலிக்க திருச்சபையின் போதனைக்கு எதிராக அருள் நிறை மந்திரத்தை மாற்றி சொல்ல மக்களை வலியுறுத்தி வரும்
சில தமிழக
ஆயர்கள்/ குருக்களின் கவனத்திற்கு :
மாதா ஜென்மப்பாவம்
இல்லாதவர்கள். கடவுளது அருளைப் பெற்ற படைப்புக்களில் குறைவற்றவர்கள். எனவே அவர்கள் அருள் மிகப்பெற்றவர்கள் அல்ல. அருள் நிறைந்தவர்கள். ஏனெனில் புனிதர்கள் எல்லோருமே அருள் மிக மிகப் பெற்றவர்கள்.
நீங்கள், ஆயர், திருத்தந்தை எல்லோருமே அருள் மிகப்பெற்றவர்கள்
தான். ஆனால் மாதா ஒருவர்தான் ஜென்மப்பாவம் இல்லாதவர்கள். அருள் நிறைந்தவர்கள்.
உலகம் முழுவதும் ஜெபமாலையில் மாதாவை " அருள் நிறைந்த மரியே வாழ்க " என்றுதான் வாழ்த்துகிறார்கள். நம் திருத்தந்தையும் ஜெபமாலை ஜெபிக்கும்போது "அருள் நிறைந்தவளே வாழ்க ! " ( Full of grace) என்றுதான் ஜெபிக்கிறார்.
மேலும் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி ( CCC Original ) 490, 491, 2676 ஆகியவை மாதாவை அருள் நிறைந்தவர்கள் என்றே கூறுகின்றன. எனவே தமிழகத்தில் மட்டும் திருச்சபை மாறுபட்டு ஜெபிக்க இயலாது....கூடாது.
கத்தோலிக்க திருச்சபை முழுவதிலும் ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கைதான் இருக்க முடியும். மாறுபட்டால் அது பிரிவினைசபையாகிவிடும்.
அருள் மிகப்பெற்றவரே என்பதை ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ மொழி பெயர்த்துப் பாருங்கள். நிச்சயமாக அந்த அந்த மொழி பேசும் மக்கள் ஜெபமாலையில் அவ்வாறு ஜெபிக்க மாட்டார்கள் என்பது புரியும்.
நல்ல தமிழ் என்று பார்த்தாலும் கூட " அருள் நிறைந்தவள் " என்பதே நல்ல தமிழ். கத்தோலிக்க DOGMA அடிப்படையிலானது.
எனவே, நல்ல தமிழ் என்ற போர்வையில் எதை மாற்றினாலும் " அருள் நிறைந்தவள் " என்ற வார்த்தை மாற்றப்படக்கூடாது.
தயவு செய்து தங்கள் ஆளுகையில் மக்கள் மீண்டும் ஜெபமாலையில் " அருள் நிறைந்த மரியே வாழ்க " என்று ஜெபிக்க ஆவன செய்து, சமீபத்தில் புகுத்தப்பட்ட...
அமல உற்பவத்திற்கு எதிரான தப்பறையில் இருந்து கத்தோலிக்க தமிழக மக்களைக் காக்க ஆவன செய்யுமாறு தங்களை பணிவன்புடன் வேண்டுகிறேன்..🙏
சில தமிழக
ஆயர்கள்/ குருக்களின் கவனத்திற்கு :
மாதா ஜென்மப்பாவம்
இல்லாதவர்கள். கடவுளது அருளைப் பெற்ற படைப்புக்களில் குறைவற்றவர்கள். எனவே அவர்கள் அருள் மிகப்பெற்றவர்கள் அல்ல. அருள் நிறைந்தவர்கள். ஏனெனில் புனிதர்கள் எல்லோருமே அருள் மிக மிகப் பெற்றவர்கள்.
நீங்கள், ஆயர், திருத்தந்தை எல்லோருமே அருள் மிகப்பெற்றவர்கள்
தான். ஆனால் மாதா ஒருவர்தான் ஜென்மப்பாவம் இல்லாதவர்கள். அருள் நிறைந்தவர்கள்.
உலகம் முழுவதும் ஜெபமாலையில் மாதாவை " அருள் நிறைந்த மரியே வாழ்க " என்றுதான் வாழ்த்துகிறார்கள். நம் திருத்தந்தையும் ஜெபமாலை ஜெபிக்கும்போது "அருள் நிறைந்தவளே வாழ்க ! " ( Full of grace) என்றுதான் ஜெபிக்கிறார்.
மேலும் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி ( CCC Original ) 490, 491, 2676 ஆகியவை மாதாவை அருள் நிறைந்தவர்கள் என்றே கூறுகின்றன. எனவே தமிழகத்தில் மட்டும் திருச்சபை மாறுபட்டு ஜெபிக்க இயலாது....கூடாது.
கத்தோலிக்க திருச்சபை முழுவதிலும் ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கைதான் இருக்க முடியும். மாறுபட்டால் அது பிரிவினைசபையாகிவிடும்.
அருள் மிகப்பெற்றவரே என்பதை ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ மொழி பெயர்த்துப் பாருங்கள். நிச்சயமாக அந்த அந்த மொழி பேசும் மக்கள் ஜெபமாலையில் அவ்வாறு ஜெபிக்க மாட்டார்கள் என்பது புரியும்.
நல்ல தமிழ் என்று பார்த்தாலும் கூட " அருள் நிறைந்தவள் " என்பதே நல்ல தமிழ். கத்தோலிக்க DOGMA அடிப்படையிலானது.
எனவே, நல்ல தமிழ் என்ற போர்வையில் எதை மாற்றினாலும் " அருள் நிறைந்தவள் " என்ற வார்த்தை மாற்றப்படக்கூடாது.
தயவு செய்து தங்கள் ஆளுகையில் மக்கள் மீண்டும் ஜெபமாலையில் " அருள் நிறைந்த மரியே வாழ்க " என்று ஜெபிக்க ஆவன செய்து, சமீபத்தில் புகுத்தப்பட்ட...
அமல உற்பவத்திற்கு எதிரான தப்பறையில் இருந்து கத்தோலிக்க தமிழக மக்களைக் காக்க ஆவன செய்யுமாறு தங்களை பணிவன்புடன் வேண்டுகிறேன்..🙏
No comments:
Post a Comment