எழுநூறு ஆண்டுகள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்க தீர்ப்பிடப்பட்ட ஒரு ஆன்மா, செபமாலை வழியாக விண்ணக வாழ்வை அடைந்தது
அலெக்ஸாண்ட்ரியா என்ற புண்ணிய தலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புனித சாமிநாதரால் எவ்வாறு அற்புதமாக மனமாற்றம் அடைந்து, செபமாலை சபையினில் சேர்ந்தார் என்பதனைக் குறித்து எழுத்தாளர் ப்ளம்மின் மற்றும் பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவளது இறப்பிற்குப் பின்னர், அவள் ஒருநாள் புனித சாமிநாதருக்குத் தோன்றி, இவ்வுலகில் அவள் புரிந்த பாவங்களுக்காகவும், அவளது உலக போக்கில் உள்ள நடத்தையினால் பலருக்கு துன்மாதிரியாக இருந்து அவர்கள் பாவங்களில் விழ காரணமாக இருந்ததாலும், தனக்கு எழுநூறு வருடங்களுக்கு உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து சுத்திகரணம் செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பிடப்படுள்ளது என்று கூறினார்.
ஆகையினால் அவள், புனிதரை அவரது செபங்களினாலும் செபமாலை சபையில் உள்ள உறுப்பினர்களின் செபங்களினாலும் தனது உத்தரிக்க ஸ்தல வேதனைகளை குறைவதற்காக மன்றாடுமாறு வேண்டிக்கொண்டாள். புனிதரும் அவ்விதமே செய்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவள் மீண்டும் புனிதருக்குத் தோன்றியபோது, சூரியனை விட பிரகாசமாக காணப்பட்டாள். புனிதர் மற்றும் செபமாலை சபையின் உறுப்பினர்களின் செபங்களினால் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து மிகவும் விரைவாக விடுவிக்கப்பட்டாள்.
அவள் மேலும் புனித சாமிநாதரிடம், உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களின் சார்பாக வந்ததாகவும், இன்னும் அதிகமாக செபமாலையைக் குறித்து போதிக்கவும் வேண்டிக்கொண்டாள். உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மக்களின் செபமாலைகளை ஒப்புக்கொடுக்க வேண்டியும், அதன் மூலம் அந்த ஆன்மாக்கள் விண்ணக வாழ்வை அடையும் போது, தனக்காக வேண்டிக்கொண்டவர்களுக்கு அபரிமிதமான கொடைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து பெற்றுத்தருவார்கள் என்றும் கூறினாள்.
*சிந்தனை*
மோட்சத்திற்கு ஆரோபணமான இராக்கினியே!!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்கள் தங்களுக்காக செபிக்க முடியாது, ஆனால் இப்புவியில் வாழும் நாம் அவர்களுக்காக பல ஒறுத்தல் முயற்சிகள், செபங்கள் செய்யலாம். தனக்காக செபிக்க முடியாத நமது சகோதர சகோதரிகளுக்காக நாம் இறைவனிடம் இறைஞ்சி வேண்டும் பொழுது, நமது செபங்களுக்காக, அவற்றின் வாயிலாக அவர்கள் விண்ணக வாழ்வை அடைவார்கள்.
நாம் அவர்களுக்காக செய்யக்கூடியவை, 1, திருப்பலி ஒப்புக்கொடுத்தல், 2, நமாதண்டவரின் சிலுவைப்பாடுகளின் தியானம், 3, செபமாலை செபிப்பது.
இவ்வுலகில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திருப்பலியின் வழியாக, எண்ணற்ற ஆன்மாக்கள் ஈடேற்றம் பெறுகின்றன. நாமும் அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்தும், திருப்பலிகளில் பங்கெடுத்தும் உதவலாம். இதன் மூலம் பலன் பெரும் ஆன்மாக்கள் நமது ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல தந்தையிடம் பரிந்து பேசுவார்கள் என்பது திண்ணம்.
நமதாண்டவர், மானிடர் அனைவருக்காகவும் பாடுகள் பட்டு உயிர்த்தெழுந்து, சாவின் கொடுக்கை வென்று, நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்தார். அவரது பாடுகளை தியானித்து அவற்றை உத்தரிக்கும் ஆன்மாகளின் ஈடேற்றத்திற்கு ஒப்புக் கொடுக்கும் பொழுது, நமதாண்டவர் அவற்றை நிறைவேற்றுகின்றார்.
செபமாலை வாயிலாக நமது அன்னையின் சக்தி வாய்ந்த பரிந்துரையை நாடும் பொழுது, நமதன்னை, இறைவனின் தாய், அந்த ஆன்மாகளுக்கு தனது மைந்தனின் வழியாக விண்ணக வாழ்வைப் பெற்றுத்தருகின்றார்கள். தனது கீழ்படிதலால் எல்லாம் வல்ல தந்தைக்கு அறிய மகளாகவும், தனது கற்பினை காத்து பரிசுத்த ஆவிக்கு பாசமுள்ள மனையாட்டியாகவும், உலக மீட்பரை உலகுக்கு தந்து அவரது பாடுகளில் பங்கேற்றதால் இணை இரட்சகியாகவும் இருக்கும் நமதன்னையின் பரிந்துரையை பரிசுத்த தமத்திருத்துவம் உடனடியாக நிறைவேற்றுவார்கள்.
ஒவ்வொரு பத்து மணி முடிவிலும் நாம்,” சகல ஆன்மாக்களையும் குறிப்பாக உமது இரக்கம் யார் யாருக்குத் தேவையோ அவர்களை மோட்ச இராட்சியதிற்கு சேர்த்தருளும்” என்று நமதாண்டவரிடம் அன்னையின் வழியாக மன்றாடுகிறோம்.
உத்தரிக்க ஸ்தல ஆன்மாக்களுக்காக, நம்மால் இயன்ற அளவு திருப்பலிகளில் பங்கேற்றும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்தும், தினமும் ஒரு செபமாலையையாவது அவர்களுக்காக ஒப்புக்கொடுத்தும் அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவலாமா???
உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக மாதாவிடம் காணிக்கைச் செபம்
மிகவும் பரிசுத்த கன்னி மரியாயே!/ உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் பேரில்/ இரக்கம் மிகுந்த தேற்றரவு மாதாவே!/ அடியேன் இதோ உமது திருப்பாதத்தண்டையில்/ சாஷ்டாங்கமாக விழுந்து/ பிரார்த்தித்து ஒப்புக்கொடுக்கும்/ காணிக்கை என்னவென்றால்/ என் அனுதினக் கிரியையினாலே/ நான் அடையக் கூடிய பூரண பேறு பலன்களையும்/ என் மரணத்திற்குப் பிறகு/ எனக்காக ஒப்புக்கொடுக்கும் செபதவப் பலன்களையும்/ தேவரீருக்கு கொடுக்கிறேன்./
மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்களின் நன்மைக்காக/ தேவரீர் சித்தம் போல்/ அவைகளை பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும்./ தற்காலத்திலும் பிற்காலத்திலும் / எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களை எல்லாம்/ சுயநல நாட்டமின்றி/ தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே/ முழுவது ஒப்படைத்து விடுகிறேன்./
உமது திருக்குமாரனாகிய ஆண்டவர்/ தமது கிருபை இரக்கத்திற்கு அல்லது நீதிகேற்றவாறு/ உமது திருக்கரங்கள் வழியாய்/ அடியேனுக்கு நியமித்தனுப்பும்/ நன்மை துன்பங்களை எல்லாம்/ மனப்பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக்கொள்கிறேன்./
ஆமென்.
இயேசுவுக்கே புகழ்!!! மாமரித்தாயே வாழ்க!!!
அலெக்ஸாண்ட்ரியா என்ற புண்ணிய தலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புனித சாமிநாதரால் எவ்வாறு அற்புதமாக மனமாற்றம் அடைந்து, செபமாலை சபையினில் சேர்ந்தார் என்பதனைக் குறித்து எழுத்தாளர் ப்ளம்மின் மற்றும் பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவளது இறப்பிற்குப் பின்னர், அவள் ஒருநாள் புனித சாமிநாதருக்குத் தோன்றி, இவ்வுலகில் அவள் புரிந்த பாவங்களுக்காகவும், அவளது உலக போக்கில் உள்ள நடத்தையினால் பலருக்கு துன்மாதிரியாக இருந்து அவர்கள் பாவங்களில் விழ காரணமாக இருந்ததாலும், தனக்கு எழுநூறு வருடங்களுக்கு உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து சுத்திகரணம் செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பிடப்படுள்ளது என்று கூறினார்.
ஆகையினால் அவள், புனிதரை அவரது செபங்களினாலும் செபமாலை சபையில் உள்ள உறுப்பினர்களின் செபங்களினாலும் தனது உத்தரிக்க ஸ்தல வேதனைகளை குறைவதற்காக மன்றாடுமாறு வேண்டிக்கொண்டாள். புனிதரும் அவ்விதமே செய்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவள் மீண்டும் புனிதருக்குத் தோன்றியபோது, சூரியனை விட பிரகாசமாக காணப்பட்டாள். புனிதர் மற்றும் செபமாலை சபையின் உறுப்பினர்களின் செபங்களினால் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து மிகவும் விரைவாக விடுவிக்கப்பட்டாள்.
அவள் மேலும் புனித சாமிநாதரிடம், உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களின் சார்பாக வந்ததாகவும், இன்னும் அதிகமாக செபமாலையைக் குறித்து போதிக்கவும் வேண்டிக்கொண்டாள். உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மக்களின் செபமாலைகளை ஒப்புக்கொடுக்க வேண்டியும், அதன் மூலம் அந்த ஆன்மாக்கள் விண்ணக வாழ்வை அடையும் போது, தனக்காக வேண்டிக்கொண்டவர்களுக்கு அபரிமிதமான கொடைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து பெற்றுத்தருவார்கள் என்றும் கூறினாள்.
*சிந்தனை*
மோட்சத்திற்கு ஆரோபணமான இராக்கினியே!!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்கள் தங்களுக்காக செபிக்க முடியாது, ஆனால் இப்புவியில் வாழும் நாம் அவர்களுக்காக பல ஒறுத்தல் முயற்சிகள், செபங்கள் செய்யலாம். தனக்காக செபிக்க முடியாத நமது சகோதர சகோதரிகளுக்காக நாம் இறைவனிடம் இறைஞ்சி வேண்டும் பொழுது, நமது செபங்களுக்காக, அவற்றின் வாயிலாக அவர்கள் விண்ணக வாழ்வை அடைவார்கள்.
நாம் அவர்களுக்காக செய்யக்கூடியவை, 1, திருப்பலி ஒப்புக்கொடுத்தல், 2, நமாதண்டவரின் சிலுவைப்பாடுகளின் தியானம், 3, செபமாலை செபிப்பது.
இவ்வுலகில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திருப்பலியின் வழியாக, எண்ணற்ற ஆன்மாக்கள் ஈடேற்றம் பெறுகின்றன. நாமும் அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்தும், திருப்பலிகளில் பங்கெடுத்தும் உதவலாம். இதன் மூலம் பலன் பெரும் ஆன்மாக்கள் நமது ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல தந்தையிடம் பரிந்து பேசுவார்கள் என்பது திண்ணம்.
நமதாண்டவர், மானிடர் அனைவருக்காகவும் பாடுகள் பட்டு உயிர்த்தெழுந்து, சாவின் கொடுக்கை வென்று, நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்தார். அவரது பாடுகளை தியானித்து அவற்றை உத்தரிக்கும் ஆன்மாகளின் ஈடேற்றத்திற்கு ஒப்புக் கொடுக்கும் பொழுது, நமதாண்டவர் அவற்றை நிறைவேற்றுகின்றார்.
செபமாலை வாயிலாக நமது அன்னையின் சக்தி வாய்ந்த பரிந்துரையை நாடும் பொழுது, நமதன்னை, இறைவனின் தாய், அந்த ஆன்மாகளுக்கு தனது மைந்தனின் வழியாக விண்ணக வாழ்வைப் பெற்றுத்தருகின்றார்கள். தனது கீழ்படிதலால் எல்லாம் வல்ல தந்தைக்கு அறிய மகளாகவும், தனது கற்பினை காத்து பரிசுத்த ஆவிக்கு பாசமுள்ள மனையாட்டியாகவும், உலக மீட்பரை உலகுக்கு தந்து அவரது பாடுகளில் பங்கேற்றதால் இணை இரட்சகியாகவும் இருக்கும் நமதன்னையின் பரிந்துரையை பரிசுத்த தமத்திருத்துவம் உடனடியாக நிறைவேற்றுவார்கள்.
ஒவ்வொரு பத்து மணி முடிவிலும் நாம்,” சகல ஆன்மாக்களையும் குறிப்பாக உமது இரக்கம் யார் யாருக்குத் தேவையோ அவர்களை மோட்ச இராட்சியதிற்கு சேர்த்தருளும்” என்று நமதாண்டவரிடம் அன்னையின் வழியாக மன்றாடுகிறோம்.
உத்தரிக்க ஸ்தல ஆன்மாக்களுக்காக, நம்மால் இயன்ற அளவு திருப்பலிகளில் பங்கேற்றும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்தும், தினமும் ஒரு செபமாலையையாவது அவர்களுக்காக ஒப்புக்கொடுத்தும் அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவலாமா???
உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக மாதாவிடம் காணிக்கைச் செபம்
மிகவும் பரிசுத்த கன்னி மரியாயே!/ உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் பேரில்/ இரக்கம் மிகுந்த தேற்றரவு மாதாவே!/ அடியேன் இதோ உமது திருப்பாதத்தண்டையில்/ சாஷ்டாங்கமாக விழுந்து/ பிரார்த்தித்து ஒப்புக்கொடுக்கும்/ காணிக்கை என்னவென்றால்/ என் அனுதினக் கிரியையினாலே/ நான் அடையக் கூடிய பூரண பேறு பலன்களையும்/ என் மரணத்திற்குப் பிறகு/ எனக்காக ஒப்புக்கொடுக்கும் செபதவப் பலன்களையும்/ தேவரீருக்கு கொடுக்கிறேன்./
மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்களின் நன்மைக்காக/ தேவரீர் சித்தம் போல்/ அவைகளை பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும்./ தற்காலத்திலும் பிற்காலத்திலும் / எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களை எல்லாம்/ சுயநல நாட்டமின்றி/ தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே/ முழுவது ஒப்படைத்து விடுகிறேன்./
உமது திருக்குமாரனாகிய ஆண்டவர்/ தமது கிருபை இரக்கத்திற்கு அல்லது நீதிகேற்றவாறு/ உமது திருக்கரங்கள் வழியாய்/ அடியேனுக்கு நியமித்தனுப்பும்/ நன்மை துன்பங்களை எல்லாம்/ மனப்பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக்கொள்கிறேன்./
ஆமென்.
இயேசுவுக்கே புகழ்!!! மாமரித்தாயே வாழ்க!!!
No comments:
Post a Comment