13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருவழிபாட்டு அட்டவணை
கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது. இது இயேசுவின் பணி வாழ்வையும், பொதுவான கிறிஸ்தவ மறையுண்மைகளையும் சிந்திக்கத் தூண்டும் காலமாக அமைந்துள்ளது. இதன் முதல் பகுதி தவக் காலத்திற்கு முன்னும், இரண்டாம் பகுதி பாஸ்கா காலத்திற்கு பின்னும் சிறப்பிக்கப்படுகிறது,
பொதுக் காலம் - முதல் பகுதி என்பது திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாவது காலம் ஆகும். இது ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுடன் தொடங்கி, சாம்பல் புதனுக்கு முன்தினம் முடிவடைகிறது.
பொதுக் காலம் - இரண்டாம் பகுதி என்பது பொதுக் காலம் - முதல் பகுதியின் தொடர்ச்சியும், திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் காலமும் ஆகும். இது தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் தொடங்கி, கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.
No comments:
Post a Comment