பிதாவாகிய இறைவனின் தவ மகளே
எல்லாம் வல்லவரின் குலக் கொழுந்தே
உலகம் உண்டாக்கியோனின் உன்னத மகளே
படைத்த பரம்பொருளின் குமாரத்தியே
அருள் கடவுளின் உளங் கவர் நல் ஞானமே
இணையில்லா இறைவனின் தாயே
உலக மீட்பரின் உடன் பயணித்த அன்னையே
தன்னையே அளித்த தனயனின் மாதாவே
வாழ்வையே தந்திட்ட மாபரனின் அரசியே
வலிமறந்து சுமைதாங்கி வல்லவரை அளித்த அம்மாவே
உலகை காத்திடும் தூயாவியின் துணைவியே
பரிசுத்த ஆவியின் மாசற்ற பத்தினியே
புறாவானவரின் புண்ணிய மங்கையே
தாயே
தவித்தோரின் தடாகமே
தஞ்சமடைந்தோரின் சரணாலயமே
அம்மா மரியே வாழ்க
அன்புடன்
கஸ்மீர் ரோச்
எல்லாம் வல்லவரின் குலக் கொழுந்தே
உலகம் உண்டாக்கியோனின் உன்னத மகளே
படைத்த பரம்பொருளின் குமாரத்தியே
அருள் கடவுளின் உளங் கவர் நல் ஞானமே
இணையில்லா இறைவனின் தாயே
உலக மீட்பரின் உடன் பயணித்த அன்னையே
தன்னையே அளித்த தனயனின் மாதாவே
வாழ்வையே தந்திட்ட மாபரனின் அரசியே
வலிமறந்து சுமைதாங்கி வல்லவரை அளித்த அம்மாவே
உலகை காத்திடும் தூயாவியின் துணைவியே
பரிசுத்த ஆவியின் மாசற்ற பத்தினியே
புறாவானவரின் புண்ணிய மங்கையே
தாயே
தவித்தோரின் தடாகமே
தஞ்சமடைந்தோரின் சரணாலயமே
அம்மா மரியே வாழ்க
அன்புடன்
கஸ்மீர் ரோச்
No comments:
Post a Comment