அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

தயார் நிலையா...?

தயார் நிலையா...?

என்ன ஃபாதர், நீங்க அந்த மனிதனை மன்னிக்க மாட்டேன் என்கிறீர்கள். இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" மத்18'22 என்று சொன்னதன்மூலம், மன்னிப்பின் அளவுக்கு வரம்பு இல்லை என்பதைத் தெழிவுபடுத்துகிறார் என்றார்.

அதைத் தொடர்ந்து வருகின்ற கதையை வாசித்தீர்களா? கதையின் முடிவைப்பார்த்தீர்களா? "அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்." மத் 18'34 மன்னிக்கவில்லையே, கடும் தண்டனை அல்லவா கொடுத்துள்ளார்.

ஒப்புரவிற்கு ஐந்து காரியங்கள் தேவை என்று படித்திருக்கிறோம். 1. பாவங்களை நினைப்பது. 2 மனம் வருந்துவது. 3. தீர்மானம் செய்வது 4. குருவிடம் சொல்லுவது. 5. அபராதத்தைத் தீர்ப்பது. இன்றைக்குப் பெரும்பாலும் "குருவிடம் சொல்லுவது" மட்டும்தான் நடக்கிறது, அதுவும் அப்படி இப்படி நடக்கிறது,நடப்பதும் இல்லை. முதல் மூன்று பகுதிகளே இல்லாமல் போய்விடுகிறது. அங்கே என்ன மன்னிப்பு இருக்கிறது. இத்தகைய மனமாற்ற மனநிலை இல்லாது மன்னிப்புப் பெற்றவர்கள் திரும்பத் திரும்ப அதே தவறைச் செய்கிறார்கள்.

இத்தகைய மனமாற்ற மனநிலையோடு எத்தனை முறை தவறு செய்தாலும் அத்தகையோரை எத்தனை முறையும் மன்னிக்கலாம், மன்னிக்க வேண்டும்.

மனம் திரும்புவோம். மன்னிப்பு பெறுவோம். மன்னிப்போம்.
--அருட்திரு ஜேசப் லீயோன்

No comments:

Post a Comment