புனித ஜெர்துருத்தம்மாளின் ஜெபமாலை
1. துவக்க செபம்
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
2. நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(பிறந்தார் எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்
3. பெரிய மணியில்: இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.
4. மூன்று சிறிய மணியில்:
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே
புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த....
3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த....
5. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்: திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
6. பதக்கத்திலும் பெரிய மணிகளிலும் கர்த்தர் கற்பித்த செபத்தை சொல்லவும் .
7. ஒவ்வொரு சிறிய பத்து மணிகளிலும்
"நித்திய பிதாவே உமது திருமகனின் விலையேறப் பெற்ற இரத்தத்தோடு, இன்று உலகெங்கிலும் நிறைவேற்றப்படும் சகல திருப்பலிகளை ஒன்றித்து, எங்கள் இல்லத்திலும், குடும்பத்திலும் திருச்சபையிலும் உலகெங்கிலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் சகல ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் "
(ஒவ்வொரு முறை செபிக்கும் போதும் 1000 உத்தரிக்கிற ஆத்துமாக்களின் கடன் தீர்கிறது.)
8. ஒவ்வொரு பத்து மணி முடிவிலும்
"இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே , பாவிகளின் இருதயங்களை தேவ பிதாவின் சத்தியத்திற்கும் ஒளிக்கும் திறந்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே பாவிகள் மனந்திரும்ப மன்றாடும் ஆமென் "
மற்றும் ஒரு திரி செபம் சொல்லவும்
No comments:
Post a Comment