தவக் காலத்தில் மனமாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள், பாஸ்கா காலத்தில் இயேசுவின் உயிர்ப்பின் மாட்சியைக் கொண்டாடி, கடவுளோடு ஒப்புரவாகின்றனர். எனவே, இது ஒப்புரவின் காலம் ஆகும்.
தவக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் நான்காவது காலம் ஆகும். நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது. இது திருநீற்றுப் புதன் அன்று தொடங்கி, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்தினம் முடிவடைகிறது. இக்காலத்தின் புனித வாரத்தில் வரும் பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய மூன்று நாட்களும் பாஸ்கா முந்நாட்கள் (Paschal Triduum) என்று அழைக்கப்படுகின்றன.
பாஸ்கா காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அன்று தொடங்கி, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா அன்று முடிவடைகிறது.
லெந்து நாட்கள் கணக்கிடும் முறை :
தவ காலம் - Lenten days
தவ காலம் - Lenten என்பதற்கு வசந்த காலம் என்று பொருள். ஆங்கிலத்தில் Spring Season என்று பொருள். ஆங்கில ஆண்டுப்படி பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களும்; தமிழ் ஆண்டுப்படி மாசி, பங்குனி, சித்திரை மாதங்களும்; எபிரேயர் ஆண்டுப்படி சேபாத்( சக:1:7), ஆதார் (எஸ்:3:7), நிசான் ( நெகேமியா:2:1) மாதங்களும் வசந்த காலமாகும். நிசான் மாத்த்திற்கு பழைய பெயர் ஆபீப் (யாத்: 13:4) மாதமாகும்.
தவ நாட்கள்:
சாம்பல் புதன் கிழமையிலிருந்து ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய நாள் வரை மொத்தம் 46 நாட்கள். இதில் 6 ஞாயிற்றுக் கிழமைகள். ஞாயிற்றுக் கிழமை ஆண்டவர் உயிர்த்தெழுந்த வெற்றியின், மகிழ்ச்சியின் நாள் என்பதனால் அன்று மனம் வருந்தி நோன்பிருக்கத் தேவை இல்லை என்று திருச்சபை அந்த 6 நாட்களை உபவாச நாட்களாகச் சேர்க்கவில்லை. மீதமுள்ள 40 நாட்கள் நோன்பு நாட்கள்.
இந்த சாம்பல் புதன்கிழமை ஆனது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 இலிருந்து மார்ச் 10 வரை மாறி மாறி வரும். அதுபோலத்தான் ஈஸ்டர் ஞாயிரும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரை மாறி மாறி வரும்.
ஏன் இவ்வாறு மாறி வருகிறது?
பாஸ்கா பண்டிகை கொண்டாப்பட்டு கொண்டிருந்த வாரத்தில்தான் ஆண்டவர் இயேசு பாடுபட்டு, மரித்து, அடுத்த வாரத்தின் முதலாம் நாள் காலையில் (அதாவது இஸ்ரவேலரின் ஓய்வு நாளாகிய சனிக்கிழமைக்கு அடுத்த நாள்) உயிர்த்தெழுந்தார். ஆகவே நாம் இயேசு உயிர்தெழுந்த நாளை நினைவுகூறத்தக்கதாக ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாகி, பாஸ்கா உண்டு, புறப்பட்ட அன்று அது ஒரு முழு நிலவு நாளாக இருந்தது. ( இஸ்ரவேலரின் பண்டிகைகள் அனைத்துமே நிலவை மையமாக்க் கொண்டதாக உள்ளது. ஏனெனில் இஸ்ரவேலர் நிலவை மையமாக கொண்ட ஆண்டைப் (Lunar year) பின்பற்றறினார்கள்).
கி.பி. 125 இல் கூடிய நிசேயா பெருமன்றத்தின் தீர்மானத்தின்படி ஈஸ்டர் ஞாயிறு கணிப்பு அறிவிக்கப்பட்டது. அதாவது இரவும் பகலும் சமமாயுள்ள மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின்வரும் முழு நிலவுக்கு அடுத்த ஞாயிறுதான் ஈஸ்டர் ஞாயிறு என்று அறிவிக்கப்பட்டது. அந்த முழு நிலவு மாறி மாறி வருவதால் ஈஸ்டர் ஞாயிறும் தேதி மாறி வரும் பண்டிகையாக உள்ளது.
இவ்வாண்டும் - 2019 - மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு ஏப்ரல் 19 ஆம் தேதி வருவதனால் அதற்கு அடுத்த ஞாயிறு ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையாகும் (21-4-2019).
இவ்வாறாக ஈஸ்டர் பஸ்கா பண்டிகை முழு நிலவை வைத்துக் கணக்கிடப்படுகிறது.
ஈஸ்டருக்கு முந்தின ஞாயிறு குருத்தோலை ஞாயிறாகும். குருத்தோலை ஞாயிறிலிருந்து (14-4-2019) 40 நாட்களுக்கு முன் வரும் புதன் கிழமை சாம்பல் புதன் கிழமையாகும். ஆகவே இவ்வாண்டு 06 -03 -2019 சாம்பல் புதன் கிழமை.
லெந்து நாட்கள் கணக்கிடும் முறை :
தவ காலம் - Lenten days
தவ காலம் - Lenten என்பதற்கு வசந்த காலம் என்று பொருள். ஆங்கிலத்தில் Spring Season என்று பொருள். ஆங்கில ஆண்டுப்படி பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களும்; தமிழ் ஆண்டுப்படி மாசி, பங்குனி, சித்திரை மாதங்களும்; எபிரேயர் ஆண்டுப்படி சேபாத்( சக:1:7), ஆதார் (எஸ்:3:7), நிசான் ( நெகேமியா:2:1) மாதங்களும் வசந்த காலமாகும். நிசான் மாத்த்திற்கு பழைய பெயர் ஆபீப் (யாத்: 13:4) மாதமாகும்.
தவ நாட்கள்:
சாம்பல் புதன் கிழமையிலிருந்து ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய நாள் வரை மொத்தம் 46 நாட்கள். இதில் 6 ஞாயிற்றுக் கிழமைகள். ஞாயிற்றுக் கிழமை ஆண்டவர் உயிர்த்தெழுந்த வெற்றியின், மகிழ்ச்சியின் நாள் என்பதனால் அன்று மனம் வருந்தி நோன்பிருக்கத் தேவை இல்லை என்று திருச்சபை அந்த 6 நாட்களை உபவாச நாட்களாகச் சேர்க்கவில்லை. மீதமுள்ள 40 நாட்கள் நோன்பு நாட்கள்.
இந்த சாம்பல் புதன்கிழமை ஆனது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 இலிருந்து மார்ச் 10 வரை மாறி மாறி வரும். அதுபோலத்தான் ஈஸ்டர் ஞாயிரும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரை மாறி மாறி வரும்.
ஏன் இவ்வாறு மாறி வருகிறது?
பாஸ்கா பண்டிகை கொண்டாப்பட்டு கொண்டிருந்த வாரத்தில்தான் ஆண்டவர் இயேசு பாடுபட்டு, மரித்து, அடுத்த வாரத்தின் முதலாம் நாள் காலையில் (அதாவது இஸ்ரவேலரின் ஓய்வு நாளாகிய சனிக்கிழமைக்கு அடுத்த நாள்) உயிர்த்தெழுந்தார். ஆகவே நாம் இயேசு உயிர்தெழுந்த நாளை நினைவுகூறத்தக்கதாக ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாகி, பாஸ்கா உண்டு, புறப்பட்ட அன்று அது ஒரு முழு நிலவு நாளாக இருந்தது. ( இஸ்ரவேலரின் பண்டிகைகள் அனைத்துமே நிலவை மையமாக்க் கொண்டதாக உள்ளது. ஏனெனில் இஸ்ரவேலர் நிலவை மையமாக கொண்ட ஆண்டைப் (Lunar year) பின்பற்றறினார்கள்).
கி.பி. 125 இல் கூடிய நிசேயா பெருமன்றத்தின் தீர்மானத்தின்படி ஈஸ்டர் ஞாயிறு கணிப்பு அறிவிக்கப்பட்டது. அதாவது இரவும் பகலும் சமமாயுள்ள மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின்வரும் முழு நிலவுக்கு அடுத்த ஞாயிறுதான் ஈஸ்டர் ஞாயிறு என்று அறிவிக்கப்பட்டது. அந்த முழு நிலவு மாறி மாறி வருவதால் ஈஸ்டர் ஞாயிறும் தேதி மாறி வரும் பண்டிகையாக உள்ளது.
இவ்வாண்டும் - 2019 - மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு ஏப்ரல் 19 ஆம் தேதி வருவதனால் அதற்கு அடுத்த ஞாயிறு ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையாகும் (21-4-2019).
இவ்வாறாக ஈஸ்டர் பஸ்கா பண்டிகை முழு நிலவை வைத்துக் கணக்கிடப்படுகிறது.
ஈஸ்டருக்கு முந்தின ஞாயிறு குருத்தோலை ஞாயிறாகும். குருத்தோலை ஞாயிறிலிருந்து (14-4-2019) 40 நாட்களுக்கு முன் வரும் புதன் கிழமை சாம்பல் புதன் கிழமையாகும். ஆகவே இவ்வாண்டு 06 -03 -2019 சாம்பல் புதன் கிழமை.
No comments:
Post a Comment