அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

இயேசுவின் மனஉறுதி

இயேசுவின் மனஉறுதி

இயேச பிலிப்பு செசரியா நகருக்கு வருகிறார். இதற்கு முந்தைய பகுதிகளைப் பார்த்தால், இயேசுவின் ஏமாற்றம் நன்கு நமக்குத் தெரியவரும். ஏனென்றால், மக்கள் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ள அடையாளங்களைக் கேட்டனர். இயேசு அவர்களிடத்தில் ஏமாற்றமடைகிறார். அவர்களை விபச்சாரத் தலைமுறையினர், என தன்னுடைய ஏமாற்றத்தை, வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். அடுத்து அவருடைய சீடர்கள் அவரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகின்றனர். ஆக, தொடர் ஏமாற்றங்கள் இயேசுவுக்கு மிகுந்த சோர்வைத்தருகிறது. இவ்வளவுக்கு கடினப்பட்டு உழைக்கிறேன், அதற்கான பலன் இல்லையே என்கிற ஏக்கம், சோர்வாக வெளிப்பட்டு, சற்று தனிமையான இடத்திற்கு தன்னுடைய சீடர்களோடு செல்வதற்கு இயேசுவைத் தூண்டுகிறது.

வடகிழக்குப் பகுதியிலிருந்த கலிலேயா கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 25 மைல்கள் தூரத்தில் பிலிப்பு செசரியா நீண்டு காணப்பட்டது. கலிலேயாவின் மன்னரான ஏரோது அந்திபாசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு இந்த நகர் அமைந்திருந்தது. குறுநில மன்னனான பிலிப்பு இதனை ஆண்டு வந்தான். இங்கே இருந்த மக்களில் பெரும்பாலானோர் யூதர் அல்லாத புறவினத்து மக்கள். எனவே, நிச்சயம் இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களோடு பேசுவதற்கு சரியான இடம். மக்கள் நெருக்கடியிலிருந்து அவருக்கு பாதுகாப்பு. தனது ஏமாற்றத்தைப் புதைத்துக் கொண்டு, சீடர்களுக்கு மீண்டும் தொடக்கத்திலிருந்து பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார். தன்னை யார்? என்று மக்கள் சொல்வதாகக் கேட்கிறார். இந்த நிகழ்ச்சி, வாழ்வில் எவ்வளவுதான் ஏமாற்றங்கள் வந்தாலும், அதை இயேசு தாங்கிக்கொண்டு, அதனை சரிப்படுத்த எடுக்கக்கூடிய முயற்சிகளையும், இயேசுவின் உறுதியான மனநிலையையும் இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நமது வாழ்வில் சோதனைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கலாம். நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல், தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டிருக்கலாம். ஆனால், உறுதியான உள்ளத்தோடு நாம் வெற்றி பெற, தொடர்ச்சியாக முயற்சி எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதனை இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment