அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

மன்னித்து இறைஇயல்பை நமதாக்குவோம்

மன்னித்து இறைஇயல்பை நமதாக்குவோம்

The Greatness of Christianity is Forgiveness – என்று சொல்வார்கள். சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கக்கூடிய அந்த நிலையிலும், இயேசுவால் தன்னை சிலுவைச்சாவுக்கு கையளித்தவர்களை மன்னிக்க முடிந்ததென்றால், அதுதான் மன்னிப்பின் உச்சகட்டம். அத்தகைய மன்னிப்பை ஆண்டவர் நம்மிடமிருந்தும் எதிர்பார்க்கிறார். அதுதான் இன்றைய நற்செய்தியின் சாராம்சம்.

எதற்காக மன்னிக்க வேண்டும்? முதலில், கடவுள் நம் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்றால், நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். இதைத்தான் இயேசு கற்றுக்கொடுத்த செபத்தில் நாம் சொல்கிறோம். இரண்டாவது, நாம் மன்னிக்க மறுத்தால் மற்றவர்களை தீர்ப்பிடுவதாக அர்த்தம். தீர்ப்பிடுவது கடவுளின் பணி. அதை நான் செய்ய முடியாது. மனிதர்களாகிய நம்மால் ஒருவரின் உள்ளத்தை ஊடுருவிப்பார்க்க முடியாது. கடவுளால் மட்டும்தான் முடியும். மூன்றாவது, மன்னிப்பதுதான் நமது இயல்பு. தொடக்கநூலில் வாசிக்கிறோம்.: கடவுள் மனிதனை தனது சாயலில் படைத்தார். தனது உருவத்தில் படைத்தார். தனது உயிர்மூச்சை ஆவியாகக்கொடுத்தார். அப்படியென்றால், கடவுளின் இயல்பு தான் நமது இயல்பு. கடவுள் மன்னிக்கிறார் என்றால், நாமும் மன்னிக்க முடியும். மன்னிக்க வேண்டும்.

கடவுளிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிற நாம், மற்றவர்களை மன்னிக்காமல் இருப்பது கேள்விக்குறியது, கேலிக்குறியது. இறைவனின் மன்னிப்பு நமக்கு கிடைக்க நாம் மற்றவர்களை மன்னித்தே ஆக வேண்டும். அந்த மன்னிப்பை மற்றவர்களுக்கு வழங்க கடவுளிடம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment