அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

இயேசு எனக்கு யார்?

இயேசு எனக்கு யார்?

இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள்.

எரேமியாவும் இஸ்ரயேல் மக்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தார். இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு எரேமியா உடன்படிக்கைப்பேழையையும், தூப பீடத்தையும் நெபோ மலையில் இருக்கிற ஒரு குகையில் வைத்து வாயிலை மூடி முத்திரையிட்டார். மெசியா வருவதற்கு முன்பு, அவர் அந்த குகையைத்திறந்து அவற்றை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பார் என்று மக்கள் நம்பினர். எனவே தான் மக்கள் இயேசுவை இவ்வாறு பேசினர்.

இயேசு எனக்கு யார்? என்று நமக்குள்ளாக கேட்டுப்பார்ப்போம். அவர் நமக்கு சொல்வதை வாழ்வாக்குவோம். இயேசு நாம் விரும்புகிற உறவாக இருக்க விரும்புகிறவர். அந்த உறவாக இயேசுவை ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment