அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

அன்பியம் என்றால்:

அன்பியம் என்றால்:
அன்பியம் என்றால் என்ன? அதன் செயல்வடிவம், செயல்முறை, தோற்றம், முக்கியத்துவம், உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள்-தேர்வு - பணி - தலைமைத்துவம் - பயிற்சி, அன்பிய குடும்பங்களுடன் உறவு - பங்கு தளத்துடன் உறவு - சமுக உறவு - மறைவட்ட, மாவட்ட திருச்சபையுடன் உறவு இப்படி அன்பியம் சம்பந்தப்பட்ட பல விவரங்கள் இதோ உங்களுக்காக! நமக்காக!!!  

அன்பியம் என்பது ஒர்  ........................
  • இறை வாழ்வு.
  • உறவு வாழ்வு
  • அன்பு வாழ்வு
  • பகிர்வு வாழ்வு
  • குணமளிக்கும் வாழ்வு
  • ஆறுதல் தரும் வாழ்வு
  • ஒற்றுமை தரும் வாழ்வு
  • மகிழ்ச்சி தரும் வாழ்வு
  • இன வாழ்வு
  • முடிவில்லா வாழ்வு
  • புனித வாழ்வு
  • சிறந்த வாழ்வு
  • விண்ணக வாழ்வு
  • அமைதி வாழ்வு
  • ஒளி வாழ்வு
  • வழி வாழ்வு
  • உண்மை வாழ்வு
  • தூய வாழ்வு
  • உப்பு ஒளி வாழ்வு
  • மன்னிப்பு வாழ்வு
  • தாழ்மை வாழ்வு
  • அர்ப்பண வாழ்வு
  • பணி வாழ்வு
  • நிறை வாழ்வு
  • குடும்ப வாழ்வு
  • தாய் திருச்சபை வாழ்வு

எனவே, சிந்திப்போம்!  செயல்படுவோம்!!


  • அன்பியக் கூட்டங்களில் கலந்து கொள்வது குடும்பங்களுக்கு நல்லது. உங்கள் இல்லங்களில் அன்பியக் கூட்டம் நடத்த முன்வருவது உங்கள் இல்லங்களுக்கு சிறந்த ஆசீர்வாதம் என்பதை அறிந்து கொள்ளவும். உங்கள் இன்பம், துன்பம் அனைத்தையும் அன்பியத்தில் பகிர்ந்து கொள்வது என்பது உங்களுக்கு அன்பும், சமாதானமும் மற்றும் உதவிகளும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும்.

  • அன்பியம் ஒரு கோயில், நமது சாட்சிய வாழ்வின் வெளிப்பாடு, அன்பின் உறைவிடம், தியாகத்தின் அடையாளம்.

  • தூய அன்னை மரியா அவர்கள் நெடுந்தூரம் நடந்தே பயணம் செய்து எலிசபெத்துக்கு கடவுளின் அன்பைக் காட்டி பணிவிடை செய்தார்கள். இதுபோல் நாம் நெடுந்தூரம் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும், உங்கள் தெருவில் உள்ள அன்பிய குடும்பங்களை அறிந்து, அன்பின் மூலம் உதவிகளை பகிர்ந்து, வாழ்ந்து தூய அன்னை மரியாவின் பிள்ளைகள் என்பதை மற்ற பிரிவினை சபைகளுக்குக் காட்டுவோம்.
  • உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் உறவுகளை அழைப்பது போல அன்பிய உறவுகளையும் சேர்த்து அழைப்பது என்பது மிகவும் நல்லது. இது கிறிஸ்தவ வாழ்வுக்கு உகந்தது. இயேசுவிற்கு பிடித்தது. இதுவே உறவு வாழ்வு!! 
  • அன்பியக் கூட்டம் நடைபெறும் இல்லம் ஆண்டவராகிய இயேசு உறவாடும் இல்லம்.
  • அன்பு நிறைந்த இல்லம் ஆண்டவராகிய இயேசு வாழும் இல்லம்.                        

அன்பியம் ஒரு உறவு வாழ்வு! எப்படி?
  • ஏழையோடு ஏழையாக!
  • அனைவரோடும் அன்பு வார்தையாக!
  • பணிவு வாழ்வாக!
  • பகிர்வு வாழ்வாக!
  • துன்பத்தில் பொறுமையாக!
  • தூய்மை அன்பாக!
  • உயிர்ப்பில் மகிழ்ச்சியாக!

அன்பியம்   என்றால்
  • பசியோடு இருப்போர்க்கு உணவாக!
  • அனாதையாக இருப்போர்க்கு உறவாக!
  • நோயுடன் இருப்போர்க்கு நல்ல மருந்தாக!
  • மன வேதனயோடு இருப்போர்க்கு ஆறுதல் தரும் விவிலிய வார்த்தையாக!
  • பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்போர்க்கு உதவும் கரங்களாக!
  • உறவோடு இருப்போர்க்கு தூய்மை நிறைந்த இதயங்களாக!
  • பாவத்தில் வாழ்வோர்க்கு மீட்புக்கு வழியாக!
  • பிரிந்து பிற சபைகளுக்கு செல்வோர்க்கு ஆன்மிக ஒளியாக!
  • தூற்றுவோர்க்கு மன்னிக்கும் செபங்களாக!
  • தொடர்வது தான் அன்பியம்.

அன்பியங்கள் வழியாகவே உயிரோட்டமுள்ள திருஅவையை நாம் உருவாக்கிட முடியும். விசுவாசிகள் சிறிய குழுமங்களிலே தங்கள் ஆழமான விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளவும், ஆண்டவரின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை சிந்தித்து செபமாக்கி செயல்படுத்திடவும் அன்பியங்கள் அற்புதமான வாய்ப்பளிக்கின்றன. தொடக்கத் திருச்சபையில் இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் தம்மிடையே வேற்றுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றி நட்புறவை நாளும் வளர்த்துக் கொண்டு இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒரு சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடப் பாடுபட்டதுபோல் இன்றைய கிறிஸ்தவர்களும் வாழ்ந்திட வேண்டுமென்பதே அன்பியங்களின் அடிப்படை நோக்கம்.

அன்பியங்கள் திருஅவையின் வாழ்வில் இன்றியமையாத அமைப்பாகும். ஆதித் திருச்சபையில் நாம் காணும் ஒன்றிப்பும், சகோதரத்துவமும், பகிர்வும்,  இன்று நமது காலத் திருச்சபையிலும் வளர வேண்டும் என்னும் உயரிய எண்ணத்தோடு உருவாக்கப்பட்டவை தான் அன்பியங்கள். பொதுநிலையினரிடையே விசுவாச வாழ்வில் புது உத்வேகத்தைக் கொணரவும், நாம் வாழும் சமுதாயத்திற்கு உண்மையான கிறிஸ்தவ சாட்சிகளாக வாழ்வதற்கும் அன்பியங்களே சிறந்த வழி. அன்பியம் சக்தி வாய்ந்த இறை இயக்கம். அன்பியம் சிறந்த வேளாண்மை விளை நிலம். அன்பியத்தினால் கடவுளைச் சந்திக்கவும், உண்மையான அன்புறவில் வளரவும், சமத்துவம் – சகோதரத்துவத்திலும் மலரவும், அறிதலும், புரிதலும், மன்னிப்பும், பகிர்வும் செயல் வடிவம் பெறுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் இறைமக்கள் ஒன்றுகூடி உறவில் இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் தோழமையில்  பகிர்ந்து வாழும் அடித்தள உறவு வாழ்வுதான் அன்பியத்தின் சிறப்பு. அன்பியத்தின் வழியாக ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து அப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரு பங்கு சமுகத்தின் உயிர்நாடியே அன்பியம் ஆகும். அன்பியம் ஒரு பங்கிற்கு அடிதளம். அந்த அடிதளம் உறுதியாக இல்லை என்றால் பங்கு என்ற கட்டிடம் நிலையானதாக இருக்க முடியாது.

அன்பியத்திலுள்ள அனைத்து குடும்பங்களையும் ஒருங்கிணைத்து ஒர் உயிரோட்டமுள்ள இறைச் சமூகமாக உருவாக்குபவர் தூய ஆவியார். திருமுழுக்கினால் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசுவின் சீடர்களாம் கிறிஸ்தவர்களே ஒரு சிறு குழுவாக இணைந்து இறை உறவிலும், சகோதர உறவிலும், மனிதநேயத்திலும் நாளும் வளர்ச்சி பெறுகிறார்கள். பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்று கூடும்போது அவர்களிடையே ஆழமான இறை ஒன்றிப்பையும் சகோதர உறவையும் ஏற்படுத்துகிறது இறைவேண்டல். ஆதலால் தான் தொடக்கத் திருஅவையில் இறைபுகழ் கூறுவதும் இணைந்து செபிப்பதும் மைய இடம் பெற்றிருந்தன: “அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்” (திப 2:42).

இறைவனைப் போற்றிப் புகழ்து ஆராதிப்பதும் அவர் செய்த வல்ல செயல்களுக்காக நன்றிப்பண் இசைப்பதும் ஒரு தொன்மையான யூத மரபு. “ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்....... அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!” (தி.பா 105:1-2).

உறவு – உலகத்தின் நீர்த்துப்போகத பொக்கிஷம்!
உலகத்தின் எந்த காவியங்களும், மனித உறவு மேன்மைகளை சொல்லாமல் சென்றிருக்க வாய்ப்பு ஏதும் இல்லை.
ஒரு படி தாண்டி, கத்தோலிக்கம் “அன்பியம்” என்பதில் இதை அடைக்கலம் செய்தது.

வெற்றுப் பேச்சு வேதவாசிகளை வேற்றுக்கிரகம் புறந்தள்ளி தொன்று தொட்ட கத்தோலிக்கம் வென்றெடுக்க அழைக்கிறது!

அன்பியம் – உறவின் நிறைவு வாழ்வின், விழிப்புணர்வில் – விளக்கங்களில் – வழிபாடுகளில் – வார்த்தைகளில் இறை அனுபவங்களோடு விரல் கோர்த்து அழைத்துச் செல்கிறது.

அன்பியங்கள் வழியாகத்தான் நமது இறைமக்களைப் பாதுகாக்க முடியும். இதில் நம் தாயாம் திருச்சபை அசதியாய் இருக்கக்கூடாது.
  • இலக்கு இல்லாமல் இலக்கியம் இல்லை!
  • அன்பு இல்லாமல் அன்பியம் இல்லை!
  • குறிப்பிட்ட இலக்கு நோக்கி கிறிஸ்தவ இல்லம் நோக்கி
  • அன்புடன் எய்யப்பட்ட அன்பியம் என்ற அம்பு பாய்ந்த இடத்தில் காயத்தை உண்டாக்காமல் பயத்தைப் போக்கி, சமதானமான மனநிலையை இறைமக்களிடையே ஏற்படுத்தும்.
  • தொன்றுதொட்டு ஊறிப்போய்க் கிடக்கும்,
  • விசுவாச அகல் திரிகளை உசுப்பிவிடும்
  • சுடராய் – தீப்பொறி – துளியாய் நம்மை
  • உயிர்ப்பிக்கட்டும் அன்பியங்கள்!!

இறைவன் இந்த உலகத்தை அன்பினால் கட்டியெழுப்பினார். அந்த அன்பினால் தான் இன்னுமும் இந்த உலகம் உயிர்ப்பெற்று இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முழுக்க முழுக்க  அன்பையே மையமாகக் கொண்டுள்ளன. அன்பு வடிவமான இறைவனை மனிதன் அடைய ஆசிக்கிறார். சக மனிதர்கள் மீது அன்பு காட்ட முடியாத ஒருவனால் எப்படி அந்த அன்பு வடிவமான இறைவனை அடைய முடியும்?? அகவேதான், நமது கத்தோலிக்கத் தாய்த் திருச்சபை “அன்பியம்” என்பதை நிறுவி நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் அன்பு செய்ய கற்றுக் கொடுக்கிறது. அன்பே உருவான இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் உறவுக் கொள்ளவும் திருச்சபையை கட்டிக் காக்கவும் அன்பியங்களில்  தவறாமல் பங்கு கொள்வோம்! அன்பர் வழியில் வாழ்வோம்.

இயேசு கிறிஸ்துவை அறிவிப்பது மட்டுமே நம்முடைய தரிசனமாக இருக்கக்கூடாது. மாறாக, இயேசு கிறிஸ்துவை அனைவரும் வாழ்க்கையின் வழியாக பிரதிபலிக்கும் கடமையும் உண்டு. இயேசு கிறிஸ்துவை நாம் வாழ்கின்ற விதத்தினால் வாழ்ந்து வெளிப்படுத்தும் ஒரு முக்கியக் கடமையும் நமக்குண்டு. அதுதான் அன்பின் வாழ்வு. அதுவே “அன்பியம் ஒர் உறவு வாழ்வு” உண்மையான, நிலையான, பழமையான, நமது கத்தோலிக்கத்தாய் திருச்சபையின் பெருமைகளின் புனிதமான அடையாளங்கள் பலருக்கு தெரியாமலே மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. போலி தோற்றங்கள் பெருகிப் போயுள்ள இந்த நாட்களில் உண்மையான நமது கத்தோலிக்கத் தாய் திருச்சபையின் அழகினை நாம் நமது அன்பியத்தின் வழியாக பிரதிபலித்துக் காட்ட வேண்டிய மிகப்பெரிய தேவை இன்று எழுந்துள்ளது. அதற்கு நமது கத்தோலிக்கத் தாய் திருச்சபை அன்பியங்களுடன் இணைந்து விழிப்புணர்வை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

அன்பியம் என்றால் என்ன?
மனிதர்கள் அன்பில், உறவில் இணைந்து வரும் அமைப்பே அன்பியம் ஆகும். அன்பை நிஜமாக்கும் அமைப்பு அன்பியம். கிறிஸ்தவத்தின் அச்சாணியான அன்பு ‘ஆகாப்பே’ என்ற சொல்லை குறிக்கும். இது ஒரு சமூக அன்பு, மக்களின் பல்வேறு கரிசணைகளில் சமூக வடிவம் பெற வேண்டும். அன்பு சமூக வடிவம் பெறும் போது அன்பியம் ஆகிறது.

அன்பியம்  - குட்டித் திருச்சபை
  • மூவொரு கடவுள் செயல்படும் தளம்
  • அக்கம் பக்கம் வாழும் கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பு
  • இறைவார்த்தை ஒளியில் இறைசித்தத்தை அறியும் இடம்
  • சான்று பகரும் திருச்சபை
  • இயேசுவின் சீடர்களை உருவாக்கும் தளம்

அன்பியத்தின் நான்கு முக்கிய கூறுகள்: 
  1. அருகருகே வாழும் கிறிஸ்தவர்கள் ஒன்று சேரும் இறை சமூகம்.
  2. இறைவார்த்தைப் பகிர்வே அன்பியங்களின் அடிப்படையாகும்.
  3. அன்பியத்தில் உள்ளவர்கள் நம்பிக்கையினால் உந்தப்பட்டு ஒருங்கிணைந்து செயல்படுதல்.
  4. அன்பியங்கள் பங்குத் திருச்சபையோடும் அகில உலகத் திருச்சபையோடும் இணைந்து செயல்படுதல்.

தொடக்ககால திருச்சபையும் அன்பியமே!!!!
தொடக்ககால திருச்சபையினர் சிறு சமுக வாழ்வு வாழ்ந்தனர். மக்கள் மைய திருச்சபையாக திகழ்ந்தனர். இல்லத் திருச்சபையாக திகழ்ந்தனர். திப 2: 42-47; 4: 32-36 பகுதிகளிலும், மற்றும் பவுலின் கடிதங்களிலும் அன்பியத்தின் அடிப்படைக் கூறுகள் வெளிப்படுத்தப்படுகின்றகன. அவை:
  1. மகிழ்வுடன், நட்புறவுடன், உயிர்த்த கிறிஸ்துவை மையப்படுத்தி வீடுகளில் கூடினர். (திப 26: 30,31; உரோ. 16: 23)
  2. மூவொரு கடவுளின் உடனிருப்பை உணர்ந்து புகழ்ந்து போற்றினர். (2 கொரி 13: 13; திப 2: 47)
  3. திருத்தூதர்களின் போதனைகளில், ஆண்டவர் இயேசுவின் போதனைகளையும், செயல்களையும் கேட்டனர், தியானித்தனர், பகிர்ந்தனர். (1 யோவா 1: 1-4)
  4. தங்களுக்குள்ள அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
  5. இறையாட்சியை நிலைநாட்ட நற்செய்தி அறிவிப்பு செயல்பாடுகளைத் திட்டமிட்டு, பணிப்பகிர்வு செய்தனர். (திப 6: 1-3)
  6. இறைவேண்டலில் நிலைத்திருந்து, இறைவனுக்கு நன்றி கூறினர். (எபே 3: 21, 6-18)
  7. அப்பத்தை பிட்டு, மகிழ்வுடன் வீடுகளில், நட்புறவுடன் உணவைப் பகிர்ந்து கொண்டனர். (திப 2: 42-47) 

தொடக்ககால திருச்சபை ஒர் அன்பியமாகவே எண்ணிக்கையளவிலும், செயல்பாட்டளவிலும் இருந்தது. எருசலேமில் கூடிய இந்தக் குட்டித் திருச்சபையானது திருத்தூதர் பவுலின் முயற்சியால், புத்துயிர் சிந்தனையால் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. இக்காலக்கட்டத்தில் பல இடங்களில் திருச்சபை இல்லங்களில் கூடும் திருச்சபையாகவே இருந்தது. 

இதற்குறிய விவிலிய பகுதி:-

எருசலேம்  : திப 2: 22, 6: 15, 7: 54 – 8: 4, 15: 1-31
அந்தியோக்கு : திப 11: 19-30, 13: 1-3, 1: 21-28; கலா 2: 11
எபேசு    : திப 18: 19-28, 19: 1-40, 20: 16-38; எபே 1: 1-12; 1 கொரி 15: 32, 16: 8; 1 திமொ 1: 3-4;
திவெ 2: 1-7
பிலிப்பி    : திப 16: 11-24; பில 1: 3-14, 2: 25-30, 4: 14-23,
கொரிந்து   :   திப 18: 1-11, 19: 1;  1 கொரி 1: 10-31, 3: 3-9, 3: 16-23, 4: 1-21, 5: 1-12, 6: 5, 8: 13, 9: 1: 7, 9: 11-16, 10: 14-22, 11: 17-34, 12: 4-31, 13: 1: 13, 14: 1-33; 2 கொரி 1: 12-24.

மேற்சொன்ன நகரங்களில் கூடிய தொடக்ககாலத் திருச்சபைகள் இல்லத் திருச்சபைகளாக, சமூகத் திருச்சபைகளாகத் தான் இயங்கின.

அவர்கள் சமத்துவம், சகோதரத்துவம், ஒன்றித்த உள்ளம் இவைகளின் வழியாக இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்தார்கள்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் “திருச்சபை என்பது இறைமக்களின் சமூகம்” என வலியுறுத்துகிறது. பொதுநிலையினர் திருச்சபைக்குள் பல்வேறு பணிகளை ஆற்றவும், முடிவுகள் எடுப்பதில் பங்கேற்கவும் ஆரம்பித்தனர். எனினும் அடித்தட்டு மக்களுக்கு “நாங்களும் திருச்சபையின் அங்கங்களே” என்ற சுய உணர்வைக் கொடுத்தது அன்பியங்களே. அன்பியத்தின் வழியாக திருச்சபையானது, பொதுநிலையினரின் பங்கேற்புத் திருச்சபையாக மாற்றம் காண்கிறது. அன்பியங்களில் பொதுநிலையினர் விவிலியத்தை வாசித்துத் தியானிப்பதாலும், அதன் அடிப்படையில் முடிவுகள எடுப்பதாலும், அவர்களுடைய நம்பிக்கையும், இறையுணர்வும் ஆழப்படுத்தப்படும்.

அன்பியத்தின் இலக்கணம் மூவொரு இறைவன்
திருச்சபையின், உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றிணைந்த ஒரு குடும்பமாக வாழ வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். “அனைத்துலகத் திருச்சபை, தந்தை, மகன், தூய ஆவி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமையோடு ஒன்றினைந்த ஒரு மக்கள் குலம், போல் திகழ்கிறது.” என இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஏடு (திருச்சபை – எண் 4) கூறுகிறது.

ஆகவே இறைவன் ஓர் அன்புக் குடும்பமாய், அன்புச் சமுகமாய்த் துலங்குகிறார். தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவருக்கும் இடையே ஒற்றுமை, அன்புப பரிமாற்றம், ஒன்றித்துத் திட்டமிட்டுச் செயல்படுதல், சிந்தித்தல், வல்லமையில் சமத்துவம் ஆகிய பண்புகளைக் காண்கிறோம். மூன்று இறை ஆட்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான கூட்டுக் குடும்பமாய் விளங்குகின்றனர். இறைக் குடும்பத்தை ஒரு சிறந்த அன்பியம் என்று சொல்லலாம். மூவொரு இறைக் குடும்பத்தில் பளிச்சிடும் அத்தனை பண்புகளும், மனித சமூதாயத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். “தூய தந்தையே நாம் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.” (யோவ 17: 11; 21: 23) என்று இயேசு மன்றாடினார்.

எனவே, அன்பியத்தின் மேல்வரிச்சட்டமாக, மூவொரு இறைவன் விளங்குகிறார். இதனால்தான், “கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.......... அவர் ஒளியில் இருப்பது போல், நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்” (1 யோவன் 1: 5-7) என திருத்தூதர் யோவன் கூறுகின்றார்.

திருச்சபையின் மையமே அன்பியம்:
மக்களின் வாழ்வை மையமாக வைத்து ஆலயம் அல்லது ஏதோ பொது இடங்களில் அல்ல, மாறாக அவர்கள் அன்பியத்தில் யாராவது ஒருவர் இல்லத்தில் கூடிவரும் அமைப்பே அன்பியங்கள். திருமுழக்கு பெற்ற ஒவ்வொருவரும் அன்பியத்தின் அங்கத்தினர்கள். இதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை.

நற்செய்தியை மையமாக வைத்து அன்பியத்தில் வாசித்து தி யானித்து கருத்துகளைப்  பகிர்ந்து, நற்செய்தியின் ஒளியில் தங்கள் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை கலந்து பேசி திட்டமிட்டு செயல்படவேண்டும். போதிய பயிற்சி, அனுமதியில்லாமல் நற்செய்திக்கு மறையுரை போன்று விளக்கம் கொடுக்க முயற்ச்சிக்க கூடாது. அதற்கு குருக்கள் இருக்கிறார்கள். அன்பியம் செபக்கூட்டமும் இல்லை.  நற்செய்தி கூட்டமும் இல்லை. மிகத் தேவயான ஆரம்ப முடிவு செபமும், செபமாலையுடன் ஆவியானவர் பாடலுடன் ஆயர் பேரவையின் வாழிகாட்டுதலின் படியும் பங்கு தந்தையின் அறிவுறுத்தலின் படியும் கருத்து பகிர்வும் பரிமாற்றமும் இருத்தல் ஆவசியம். இந்த கருத்து பகிர்வு கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படை போதனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவாதாகவும் செபம் செய்வது எப்படி, விவிலியம் எப்படி வாசித்து எப்படி வாழ்வாக்குவது, சமுக அரசியல் விழிப்புணர்வு கொடுப்பது, அன்பியத்தில் உறவை வளர்த்துக் கொள்ளுவது, பங்கு தளத்துடன், மறைவட்ட – மாவட்டத்துடன் ஒன்றித்து செயல்படுவதாகவும் இருக்கலாம்.

அன்பியத்தின் முலம் மக்கள் மத்தியில் தோழமை வளர்க்கவும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யவும் பிற குழுக்களுடன் ஒன்றித்திருந்து சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயலவேண்டும்.

அன்பியத்தின் தோற்றம்:

பிரேசிலில் அன்பியம்:
நமக்கு போதுமான அளவுக்கு குருக்கள் இருக்கிறார்கள். ஆனால், பிரேசிலில் போதுமான குருக்கள் இல்லாத காரணத்தால் கிறிஸ்து பிறப்பு நாளில் கூட திருப்பலி நடைப்பெறுவது இல்லை. 1956 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு நாளன்று ஒரு சாதாரண  மூதாட்டி “அருட்பணியாளர் இல்லாத காரணத்தினால் ஏன் திருச்சபைக்குள் அனைவரும் செயலிழந்து  போக வேண்டும்”  என புலம்பினார். இந்த புலம்லின் விளைவே ஆஞ்சலோ ரோசி என்ற அருட்பணியாளரை “சமுக மறைக்கல்வி இயக்கம்” ஆரம்பிக்கத் தூண்டியது. இந்த இயக்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட பொதுநிலையினர் பங்குத் தளங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் இவ்வழிபாடு அருட்பணியாளர் இல்லாத திருப்பலி என்றழைக்கப்பட்டது. இதில் மறைக்கல்வியே சமூகத்தின் மையமாக விளங்கியது. ஆலயங்களுக்கு பதிலாக சமூதாய  கூடங்களில் செபவழிபாடு, மறைக்கல்வி,  சமூகப் பிரச்சனைக்ளுக்குத் தீர்வுகாணும் அமர்வுகள், பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பரிணாம வளர்ச்சியாகத் தான் அன்பியங்கள் தோன்றின. நீதியையும், உண்மையான அமைதியையும், ஏழைகள், இளைஞர்கள் வளர்ச்சியையும் நிலைப்பாடாகக் கொண்டு பெண்களின் மேம்பாட்டிற்காகவும், பழங்குடி மக்களின்  உரிமைக்காகவும் அன்பியங்கள் செயல்படுவாதால் பாமர மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் அன்பியங்கள்:
1971 ஆம் ஆண்டு உரோமையில் நடைப்பெற்ற ஆயர்கள் மாமன்ற அமர்வின் போது ஆப்பிரிக்க ஆயர்கள் தங்களது மறைமாவட்டங்களில் அன்பியங்கள் தோன்றியிருப்பதாகத் தெரிவித்தனர்.

சாம்பிய நாட்டில் மக்கள் ஆட்சி ஏற்பட அன்பியங்கள் பெருமளவில் செயல்பட்டுள்ளன. 1993 ல் கென்யாவில் தேர்தல் நடந்தபோது அன்பியங்களில் உள்ள சாதாரண மக்களை அரசியல் தலைவர்கள் தேடி சென்று ஆதரவு திரட்டினர்.

1971 ஆம் ஆண்டு உரோமையில் நடைப்பெற்ற ஆப்பிரிக்க ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் பேசிய யோடோ சிலோத்தோ என்ற ஆயர் “அன்பியங்களைப் புறக்கனிக்கும் திருச்சபை எதிர்காலம் இல்லாத திருச்சபை” என்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அன்பியங்கள்:
பிலிப்பைன்ஸ் நாட்டில் அன்பியங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் துறவறச் சகோதரிகளின் துணிச்சலான  செயல்பாடுகளாகும். இவர்கள் அன்பியங்கள் வழியாக கொடுத்த விழிப்புணர்வால் தான் சர்வாதிகார ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில் அன்பியங்கள்:
செங்கை மறைமாவட்ட எல்லைக்குட்பட்ட தாம்பரம் பங்கில், 1975 முதல் 1987 வரை பங்குத் தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜோசப் தைப்பரம்பில் அடிகளார், “சான்று பகரும் சிறு சமுகங்கள்” என்று  பங்கை பல சமுகங்களாக பிரித்து மக்களை வழிநடத்தியது மட்டுமல்லாது பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

1979 ம் ஆண்டு அருட்தந்தை எட்வின் அடிகளார் கோட்டாறு மறைமாவட்டத்தில் கோடி முனை என்ற பங்கில் அன்பியங்களை கட்டியழுப்பி அந்த மறைமாவட்டம் முழுவதும் அன்பியங்கள் பரவக் காரணமாய் அமைந்தார்.

தமிழகத்தில் “புதுவாழ்வு – 2000” என்ற திட்டத்தின் வழியாக அன்பியங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில், மதுரைப் பேராயர் மரியானுஸ்  ஆரோக்கியசாமி ஆண்டகையவர்கள் முனைப்புடன் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக ஆயர் பேரவை நமது  மேய்ப்புப் பணியில் அன்பியம் முதன்மையான  இடத்தை பெற வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டதன் விளைவாக, தமிழகத்திலுள்ள அனைத்து மறை மாவட்டங்களிலும் அன்பியங்கள் உருவாக்கப்பட்டதுடன் பங்கு மேய்ப்புப் பணி பேரவையும் உருவாக்கப்பட்டுள்ளது.

அன்பியம் என்பது..............
  • கிறிஸ்துவின் வாழ்வு
  • கத்தோலிக்க கிறிஸ்துவ வாழ்வு நெறி
  • கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டோரின் சிறு சமூகம்
  • இறைவார்த்தையை வாழ்வாக்கும் திருக்கூட்டம்
  • பகிர்ந்து வாழும் பரிவுச் சமூகம்
  • நற்செய்தி அறிவிக்கும் ஆற்றல்மிகு தளம்
  • திருஅவையை வளர்ந்தோங்கச் செய்யும் விழுதுகள்
  • இறையாட்சிக் கனவை நனவாக்கும் புளிப்பு மாவு

அன்பியம்.........
  • இயேசுவின் இறையாட்சிக் கனவை தலத் திருஅவையில் நனவாக்கும் இயக்க ஆற்றலைத் தன்னகத்தே கொண்டது தான் அன்பியம்.
  • அன்பியம் ஒரு பக்த சபையோ, சமூக இயக்கமோ, குழுவோ அல்ல. செபக்குழுவும் அல்ல. மாறாக, இவையனைத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோரின் வாழ்வுத் தளமும், நெறியுமாகும்.
  • அன்பியம் என்பது ஒரு குறுகிய எண்ணிக்கை கொண்ட நம்பிக்கையாளர்கள் தோழமை உணர்வோடு, இறைவார்த்தை ஒளியில் நம்பிக்கைகளைப் பகிர்ந்து, செபித்து, இறை அனுபவம் பெற்று, வாழ்வின் எதார்த்தங்களையும், வாய்ப்புகளையும், சாவல்களையும் சமுகமாக இணைந்து எதிர் கொள்ளும் வாழ்க்கைத் தளம். 
  • அன்பியம் என்பது தொடக்கத் திருஅவையின் நம்பிக்கையாளர்களின் வாழ்வு என்பதை விட இயேசு கிறிஸ்துவின் வாழ்வு நெறி என்பதே சாலச்சிறந்ததாகும். எனவே, அன்பியங்களைவிட மேலான கிறிஸ்துவின் நெறி வேறொன்றும் இல்லை என்பது திண்ணம்.
  • அன்பியங்களாக வளரும் திரு அவைக்கு வளமான எதிர்காலம் உண்டு. 
  • அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம்.
  • திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.


அன்பியம் வளர்ந்திட..........

ஒரு குழு வலிமை பெற்று முழுமை பெற ஜந்து சிறப்புச் செயல்பாடுகள் இடம் பெற வேண்டும்.
  • அன்பியத்திற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ளுதல் (Committing)
  • தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் (Acquring Skill)
  • திறமைகளைப் பயன்படுத்துதல் (Applying the Skill)
  • நிறைவேற்றியதை மதிப்பீடு செய்தல் (Evaluating your performance)
  • அனுபவத்தின் அடிப்படையில் மேலும் திறம்பட செயல்படுதல் (Building on your experience)

இந்த ஜந்துக் கட்ட செயல்பாடுகளும், ஒரு தொடர்வளர்ச்சிப் பரிணாமம் ஆகும்.

No comments:

Post a Comment