நிலைவாழ்வு பெற ஏழைகளுக்குக் கொடு
பிரசித்தி பெற்ற ஒரு கோவிலுக்கு முன்பாக பிச்சைக்காரன் ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டுவந்தான். அவன் மற்ற பிச்சைக்காரர்களைப் போன்று அல்லாமல் தனக்குக் கிடைக்கக்கூடிய உணவு, பொருட்கள் இன்னும் சில்லறைக் காசுகளைக் கூட தன்னைவிட கஷ்டப்படக்கூடிய மக்களுக்கு கொடுத்து வந்தான். சில வேளைகளில் சக பிச்சைக்காரர்கள் யாருமே இல்லாவிட்டாலும்கூட தனக்கு கிடைப்பவற்றை நாய்களுக்குக் கொடுத்து உதவினான்.
இவனுடைய செயல்பாடுகளை நீண்ட நாட்களாக கவனித்துக் கொண்டுவந்த சிறுவன் ஒருவன் அவனிடம் சென்று, “ஐயா உங்களுடைய செயால்பாடுகளை நீண்ட நாட்களாக நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். நீங்களோ மிகவும் கஷ்டப்படக்கூடியவர்கள். அப்படி இருக்கும்போது உங்களுக்குக் கிடைப்பவற்றை பிறருக்குக் கொடுத்து வருகிறீர்களே. இது சரிதானா? என்று கேட்டான்.
அதற்கு அவன், “தம்பி இன்றைக்கு நான் இப்படி பிச்சைக்காரனாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் முன்பிறவியில் நான் சுயநலவாதியாக இருந்ததுதான் என்று நினைக்கிறேன். ஆகையால் அடுத்த பிறவியிலாவது நல்ல வாழ்க்கை அமைய, என்னிடம் இருப்பதைப் ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு, தேவையில் இருப்பவருக்குக் கொடுத்து வாழ்கிறேன்” என்றார்.
சுயநலத்தோடு வாழாமல், இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்கிறபோது நல்ல வாழ்வு – நிலையான வாழ்வு – கிடைக்கும் என்பதே இக்கதை நமக்கு உணர்த்தும் பாடம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசுவிடம் செல்வந்தனாகிய இளைஞன் ஒருவன் வந்து, “போதகரே! நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்கிறான். அதற்கு ஆண்டவர் இயேசுவோ, “கட்டளைகளைக் கடைப்பிடி” என்கிறார். ஆனால் அந்த இளைஞனோ, “இவற்றை எல்லாம் என்னுடைய சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்கிறான். பின்னர் ஆண்டவர் இயேசு அவனைக் கூர்ந்து கவனித்து, “உன் உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. அதன்பின் வந்து என்னை பின்தொடர்” என்கிறார். ஆனால் அவனோ முகவாட்டத்தோடு செல்கிறான்.
இந்த நற்செய்திப் பகுதியானது நமக்கு ஒரு சில உண்மைகளை உணர்த்துகின்றது. அதிலே முதலாவது நிலைவாழ்வை பெற நமக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி, நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுப்பது; அவர்களுக்கு உதவுவது. மத் 25:40 ல் வாசிக்கின்றோம், “சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று இயேசு கூறுகிறார். ஆதலால் நாம் ஏழைகளுக்கு உதவுகிறபோது இறையாட்சியை உரித்தாக்கிக் கொள்ளமுடியும்.
இரண்டாவது கிறிஸ்தவம் என்பது தீமை செய்யாது இருப்பது மட்டுமல்ல, மாறாக நன்மை செய்வதும்தான். நற்செய்தியில் வரக்கூடிய இளைஞன் வாழ்க்கையிலே எந்த ஒரு தீமையும் செய்யாது இருந்திருக்கலாம். ஆனால் அவன் நன்மை செய்யத் தவறிவிட்டான். அதனால்தான் இயேசு, “உன்னுடைய உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு” என்கிறார்.
எனவே நாம் நமது வாழ்வில் ஏழைகளுக்கு உதவக் கூடியவர்களாகவும், நன்மை செய்து வாழக்கூடியவர்களாகவும் இருப்போம். இறைவனின் அருளை நிறைவாய்ப் பெறுவோம்.
Let us Pray for our Dear Father Maria Antony, Palayamkottai.
பிரசித்தி பெற்ற ஒரு கோவிலுக்கு முன்பாக பிச்சைக்காரன் ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டுவந்தான். அவன் மற்ற பிச்சைக்காரர்களைப் போன்று அல்லாமல் தனக்குக் கிடைக்கக்கூடிய உணவு, பொருட்கள் இன்னும் சில்லறைக் காசுகளைக் கூட தன்னைவிட கஷ்டப்படக்கூடிய மக்களுக்கு கொடுத்து வந்தான். சில வேளைகளில் சக பிச்சைக்காரர்கள் யாருமே இல்லாவிட்டாலும்கூட தனக்கு கிடைப்பவற்றை நாய்களுக்குக் கொடுத்து உதவினான்.
இவனுடைய செயல்பாடுகளை நீண்ட நாட்களாக கவனித்துக் கொண்டுவந்த சிறுவன் ஒருவன் அவனிடம் சென்று, “ஐயா உங்களுடைய செயால்பாடுகளை நீண்ட நாட்களாக நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். நீங்களோ மிகவும் கஷ்டப்படக்கூடியவர்கள். அப்படி இருக்கும்போது உங்களுக்குக் கிடைப்பவற்றை பிறருக்குக் கொடுத்து வருகிறீர்களே. இது சரிதானா? என்று கேட்டான்.
அதற்கு அவன், “தம்பி இன்றைக்கு நான் இப்படி பிச்சைக்காரனாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் முன்பிறவியில் நான் சுயநலவாதியாக இருந்ததுதான் என்று நினைக்கிறேன். ஆகையால் அடுத்த பிறவியிலாவது நல்ல வாழ்க்கை அமைய, என்னிடம் இருப்பதைப் ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு, தேவையில் இருப்பவருக்குக் கொடுத்து வாழ்கிறேன்” என்றார்.
சுயநலத்தோடு வாழாமல், இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்கிறபோது நல்ல வாழ்வு – நிலையான வாழ்வு – கிடைக்கும் என்பதே இக்கதை நமக்கு உணர்த்தும் பாடம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசுவிடம் செல்வந்தனாகிய இளைஞன் ஒருவன் வந்து, “போதகரே! நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்கிறான். அதற்கு ஆண்டவர் இயேசுவோ, “கட்டளைகளைக் கடைப்பிடி” என்கிறார். ஆனால் அந்த இளைஞனோ, “இவற்றை எல்லாம் என்னுடைய சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்கிறான். பின்னர் ஆண்டவர் இயேசு அவனைக் கூர்ந்து கவனித்து, “உன் உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. அதன்பின் வந்து என்னை பின்தொடர்” என்கிறார். ஆனால் அவனோ முகவாட்டத்தோடு செல்கிறான்.
இந்த நற்செய்திப் பகுதியானது நமக்கு ஒரு சில உண்மைகளை உணர்த்துகின்றது. அதிலே முதலாவது நிலைவாழ்வை பெற நமக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி, நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுப்பது; அவர்களுக்கு உதவுவது. மத் 25:40 ல் வாசிக்கின்றோம், “சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று இயேசு கூறுகிறார். ஆதலால் நாம் ஏழைகளுக்கு உதவுகிறபோது இறையாட்சியை உரித்தாக்கிக் கொள்ளமுடியும்.
இரண்டாவது கிறிஸ்தவம் என்பது தீமை செய்யாது இருப்பது மட்டுமல்ல, மாறாக நன்மை செய்வதும்தான். நற்செய்தியில் வரக்கூடிய இளைஞன் வாழ்க்கையிலே எந்த ஒரு தீமையும் செய்யாது இருந்திருக்கலாம். ஆனால் அவன் நன்மை செய்யத் தவறிவிட்டான். அதனால்தான் இயேசு, “உன்னுடைய உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு” என்கிறார்.
எனவே நாம் நமது வாழ்வில் ஏழைகளுக்கு உதவக் கூடியவர்களாகவும், நன்மை செய்து வாழக்கூடியவர்களாகவும் இருப்போம். இறைவனின் அருளை நிறைவாய்ப் பெறுவோம்.
Let us Pray for our Dear Father Maria Antony, Palayamkottai.
No comments:
Post a Comment