“உன் பெயர் பாறை” - மத்தேயு 16: 13 – 19
கத்தோலிக்கத்திருச்சபையின் ஆதாரம், அடிப்படை இந்தப்பகுதி தான் என்றால் அது மிகையாகாது. இயேசு பேதுருவைப்பார்த்து பாறை என்றும், இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக்கட்டுவேன் என்றும் சொல்கிறார். பாறை என்ற வார்த்தையை இஸ்ரயேல் போதகர்கள் ஆபிரகாமுக்குப்பயன்படுத்தினார்கள். அதற்கும் மேலாக இறைவனே இஸ்ரயேல் மக்களுக்கு பாறையாக இருந்தார் என விவிலியத்திலே பார்க்கிறோம். மோசே இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க பாடும்போது, “அவரே பாறை” என்று புகழ்கிறார்.(இணைச்சட்டம் 32: 4). “நம் கடவுளைப்போன்ற வேறு பாறை இல்லை” (1சாமுவேல் 2: 2). “ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்” (2சாமுவேல் 22: 2). ஆக, பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்திருக்கிற எந்தவொரு யூதனும், பாறை என்ற சொல்லைக்கேட்டதும், அவனுடைய நினைவில் கடவுளின் நினைவு நிழலாடாமல் இருக்க முடியாது.
இயேசு ‘பாறை’ என்கிற இந்த வார்த்தையை பேதுருவுக்கு பயன்படுத்துகிறார். இந்த வார்த்தையை இயேசு பயன்படுத்திய விதத்திற்கு நான்கு அர்த்தங்களை யூகிக்கலாம். 1. தன்னையே அவர் பாறையாக சொல்லியிருக்கலாம். தன் மீது இயேசு கிறிஸ்து திருச்சபையைக்கட்டுகிறார். 2. பாறை என்பதை ‘உண்மை’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கலாம். அது என்ன உண்மை? பாறை என்பது ‘இயேசுதான் வாழும் கடவுளின் மகன்’ என்ற உண்மை. இந்த உண்மை பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 3. பாறை என்பதை பேதுருவின் விசுவாசத்திற்கு ஒப்பிட்டு பேசியிருக்கலாம். எத்தனையோ பேர் இருந்தாலும், முதன்முதலாக பேதுரு, இயேசுவை மெசியா என அறிந்து, அதனை துணிவோடு அறிக்கையிட்ட பேதுருவை திருச்சபை என்கிற கட்டிடத்தின் மூலைக்கல்லாக இருப்பதாக அர்த்தப்படுத்தியிருக்கலாம். 4. பேதுரு தான் பாறை. அதாவது திருச்சபை என்கிற கட்டிடத்தின் முதல் கல்லாக பேதுருவை இயேசு உருவகப்படுத்தியிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், திருச்சபை என்கிற கட்டிடத்தில் நாம் ஒவ்வொருவருமே விசுவாசத்தின் கட்டியெழுப்பும் கற்களாக இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, இறையரசை என்கிற கட்டிடத்தை இந்த மண்ணில் கட்டியெழுப்ப உறுதி கொள்வோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்
கத்தோலிக்கத்திருச்சபையின் ஆதாரம், அடிப்படை இந்தப்பகுதி தான் என்றால் அது மிகையாகாது. இயேசு பேதுருவைப்பார்த்து பாறை என்றும், இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக்கட்டுவேன் என்றும் சொல்கிறார். பாறை என்ற வார்த்தையை இஸ்ரயேல் போதகர்கள் ஆபிரகாமுக்குப்பயன்படுத்தினார்கள். அதற்கும் மேலாக இறைவனே இஸ்ரயேல் மக்களுக்கு பாறையாக இருந்தார் என விவிலியத்திலே பார்க்கிறோம். மோசே இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க பாடும்போது, “அவரே பாறை” என்று புகழ்கிறார்.(இணைச்சட்டம் 32: 4). “நம் கடவுளைப்போன்ற வேறு பாறை இல்லை” (1சாமுவேல் 2: 2). “ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்” (2சாமுவேல் 22: 2). ஆக, பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்திருக்கிற எந்தவொரு யூதனும், பாறை என்ற சொல்லைக்கேட்டதும், அவனுடைய நினைவில் கடவுளின் நினைவு நிழலாடாமல் இருக்க முடியாது.
இயேசு ‘பாறை’ என்கிற இந்த வார்த்தையை பேதுருவுக்கு பயன்படுத்துகிறார். இந்த வார்த்தையை இயேசு பயன்படுத்திய விதத்திற்கு நான்கு அர்த்தங்களை யூகிக்கலாம். 1. தன்னையே அவர் பாறையாக சொல்லியிருக்கலாம். தன் மீது இயேசு கிறிஸ்து திருச்சபையைக்கட்டுகிறார். 2. பாறை என்பதை ‘உண்மை’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கலாம். அது என்ன உண்மை? பாறை என்பது ‘இயேசுதான் வாழும் கடவுளின் மகன்’ என்ற உண்மை. இந்த உண்மை பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 3. பாறை என்பதை பேதுருவின் விசுவாசத்திற்கு ஒப்பிட்டு பேசியிருக்கலாம். எத்தனையோ பேர் இருந்தாலும், முதன்முதலாக பேதுரு, இயேசுவை மெசியா என அறிந்து, அதனை துணிவோடு அறிக்கையிட்ட பேதுருவை திருச்சபை என்கிற கட்டிடத்தின் மூலைக்கல்லாக இருப்பதாக அர்த்தப்படுத்தியிருக்கலாம். 4. பேதுரு தான் பாறை. அதாவது திருச்சபை என்கிற கட்டிடத்தின் முதல் கல்லாக பேதுருவை இயேசு உருவகப்படுத்தியிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், திருச்சபை என்கிற கட்டிடத்தில் நாம் ஒவ்வொருவருமே விசுவாசத்தின் கட்டியெழுப்பும் கற்களாக இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, இறையரசை என்கிற கட்டிடத்தை இந்த மண்ணில் கட்டியெழுப்ப உறுதி கொள்வோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment