புனித சாமிநாதர் வழியாக குருவானவர்களுக்கு நமதாண்டவளின் அறிவுரை
முத். ஆலன் மற்றொரு இடத்தில்,” அனைத்து குருவானவரும் தாங்கள் பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னர், கடவுளின் இரக்கத்தை வேண்டி ஒரு ‘அருள் நிறை மந்திரம்’ சொல்லவேண்டும்” என்று கூறுகிறார். புனித சாமிநாதருக்கு நமதாண்டவள் வெளிப்படுத்தின காட்சியின் காரணமாக இவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஒருநாள் நமதாண்டவள் புனிதரிடம்,” எனது மகனே! உனது போதனைகள் நீ விரும்பிய பலனைத் தராதிருந்தால் கவலைப்படாதே. ஏனெனில் மழையே விழாத நிலத்தை பண்படுத்தி நீ பயிர் செய்ய முயற்சி செய்கிறாய். கடவுள் இவ்வுலகின் நிலையை புதுப்பிக்க எண்ணிய வேலையில் விண்ணகத்தில் இருந்து மழையை தொடங்கி வைத்தார். அந்த மழையே தனது தூதரின் வழியாக அனுப்பிய வாழ்த்தொலி. இதன் வழியாக கடவுள் உலகினை இரட்சித்தார்.” என்று கூறினார்கள்.
மேலும்,” நீ பிரசங்கிக்கும் வேளையில், மக்களை எனது செபமாலையை செபிக்கும் படிக்கு வற்புறுத்து. இதன் வாயிலாக உனது வார்த்தைகள் அந்த ஆன்மாகளுக்காக இன்னமும் அதிகமாக பலன்களைத் தரும்” என்றும் கூறினார்கள். புனித சாமிநாதர் இதனை தாமதிக்காமல் உடனடியாக ஆரம்பித்தார். அதன் பின்னர் அவரது பிரசங்கங்கள் மக்களின் மனங்களில் ஆன்ம ஈடேற்றத்திற்கான எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தியது.
*சிந்தனை*
“அர்ச்சியஷ்ட மரியாயே!!!எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
“அருள் நிறைந்த மரியே வாழ்க” செபத்தை நாம் சொல்லும் பொழுது முதல் பகுதியில் தந்தையாகிய இறைவன் தனது தூதர் வழியாக அனுப்பிய வாழ்த்தொலியையும், சுதனாகிய கிருஸ்துவை தாங்கிய அன்னையை, பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எலிசபெத்தம்மாள் கூறிய வாழ்த்தொலியையும் கூறி அன்னையை வாழ்த்துகிறோம். மொத்தத்தில் தமத்திருத்துவத்தின் வாழ்த்தொலியின் வழியாக அன்னையை அன்புடன் அழைகின்றோம்.
“மரியாளே, நீர் தேவ வரங்களால் பூரணமானவர். கடவுளின் அருளை பெற்றிருக்கின்றீர். அவ்வருளை உலகோர் மீது பொழிந்திருக்கின்றீர்.” என புனித அகுஸ்தினார் கூறுகின்றார். அன்னை தேவசிநேகத்தால் நிரப்பப்பட்டு நிறைந்தவராக இருக்கின்றார்கள். அவரின் மேல் பாவ சாயல் படாமல் அமல உற்பவியாய் தமதிருத்துவமாகிய ஏக சர்வேசுரா பாதுகாத்து வந்தார்கள். பூரணியாய் விளங்கும் நமதன்னையை “அருள் மிகப் பெற்றவளே” என்று நாம் அழைப்பதை விட “அருள் நிறைந்தவளே” என்று அன்போடு அழைப்பதுதான் அவர்களுக்கு நாம் தரும் சரியான வாழ்த்தொலி.
புனிதர்கள் அனைவரும் அருள் மிகப் பெற்றவர்கள் என்றால் மிகையாகாது. நமது தாதையாம் சூசைத்தந்தை அருள் மிக மிகப் பெற்றவர். ஆனால் பரிசுத்த தமத்திருத்துவம், மானிட மீட்பிற்காக தேர்ந்தெடுத்த வாயிலாம் நமது அன்னையை தனக்கு அருள் வரங்களை நிறைத்து பூரணியாய் படைத்தார்கள்.
அருள் நிறை மந்திரத்தின் பிற்பகுதியில், நமதாண்டவளை நாம் “அர்ச்சியஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே!!” என்று அன்போடு அழைக்கின்றோம். “சேசு” என்னும் நாமத்திற்குப் பிறகு “மரியாள்” என்ற நாமத்தை விட இனிமை மிக்க நாமம், வல்லமை மிக்க நாமம் ஏதும் இல்லை. அன்னை நமக்கு மத்தியஸ்தியாகவும், இணை இரட்சகியாகவும் இருந்து நமது விண்ணக பயணத்தில் வழிநடத்திச் செல்கின்றார்கள்.
புனித பெர்நார்து” ஆபத்து வேளையிலும், துன்ப சமயத்திலும் மரியாளை கூப்பிடு. அவர்களைப் பின்சென்றால், நீ வழி தவற மாட்டாய். அவர்களை நினைவு கூர்ந்தால், நீ பாவம் செய்ய மாட்டாய். அவர்கள் தாங்கி நின்றால், நீ சாய்ந்து விழ மாட்டாய். அவர்கள் உன்னைப் பாதுகாத்தால், நீ பயப்படத் தேவையில்லை. சோதனை வேளையில் சாத்தானை தூர விரட்ட வல்லது “மரியாள்” என்ற திருநாமமே.பசாசின் தலையை நசுக்கியவர்களும் மரியாளே”(Homil.2, Super Missusest) என்று திரும்பத் திரும்ப கூறுகின்றார்.
நமது ஒவ்வொரு பணியைத் தொடங்கும் “அருள் நிறைந்தவளே வாழ்க” என்று கூறி தொடங்கும் பொது அப்பணி முழுவதையும் அன்னை வழிநடத்தி தருவார்கள்.
“செபம் சொல்வோம், தினம் செபமாலை சொல்வோம், பாவத்திற்காக பரிகாரம் புரிவோம்.”
இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
முத். ஆலன் மற்றொரு இடத்தில்,” அனைத்து குருவானவரும் தாங்கள் பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னர், கடவுளின் இரக்கத்தை வேண்டி ஒரு ‘அருள் நிறை மந்திரம்’ சொல்லவேண்டும்” என்று கூறுகிறார். புனித சாமிநாதருக்கு நமதாண்டவள் வெளிப்படுத்தின காட்சியின் காரணமாக இவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஒருநாள் நமதாண்டவள் புனிதரிடம்,” எனது மகனே! உனது போதனைகள் நீ விரும்பிய பலனைத் தராதிருந்தால் கவலைப்படாதே. ஏனெனில் மழையே விழாத நிலத்தை பண்படுத்தி நீ பயிர் செய்ய முயற்சி செய்கிறாய். கடவுள் இவ்வுலகின் நிலையை புதுப்பிக்க எண்ணிய வேலையில் விண்ணகத்தில் இருந்து மழையை தொடங்கி வைத்தார். அந்த மழையே தனது தூதரின் வழியாக அனுப்பிய வாழ்த்தொலி. இதன் வழியாக கடவுள் உலகினை இரட்சித்தார்.” என்று கூறினார்கள்.
மேலும்,” நீ பிரசங்கிக்கும் வேளையில், மக்களை எனது செபமாலையை செபிக்கும் படிக்கு வற்புறுத்து. இதன் வாயிலாக உனது வார்த்தைகள் அந்த ஆன்மாகளுக்காக இன்னமும் அதிகமாக பலன்களைத் தரும்” என்றும் கூறினார்கள். புனித சாமிநாதர் இதனை தாமதிக்காமல் உடனடியாக ஆரம்பித்தார். அதன் பின்னர் அவரது பிரசங்கங்கள் மக்களின் மனங்களில் ஆன்ம ஈடேற்றத்திற்கான எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தியது.
*சிந்தனை*
“அர்ச்சியஷ்ட மரியாயே!!!எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
“அருள் நிறைந்த மரியே வாழ்க” செபத்தை நாம் சொல்லும் பொழுது முதல் பகுதியில் தந்தையாகிய இறைவன் தனது தூதர் வழியாக அனுப்பிய வாழ்த்தொலியையும், சுதனாகிய கிருஸ்துவை தாங்கிய அன்னையை, பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எலிசபெத்தம்மாள் கூறிய வாழ்த்தொலியையும் கூறி அன்னையை வாழ்த்துகிறோம். மொத்தத்தில் தமத்திருத்துவத்தின் வாழ்த்தொலியின் வழியாக அன்னையை அன்புடன் அழைகின்றோம்.
“மரியாளே, நீர் தேவ வரங்களால் பூரணமானவர். கடவுளின் அருளை பெற்றிருக்கின்றீர். அவ்வருளை உலகோர் மீது பொழிந்திருக்கின்றீர்.” என புனித அகுஸ்தினார் கூறுகின்றார். அன்னை தேவசிநேகத்தால் நிரப்பப்பட்டு நிறைந்தவராக இருக்கின்றார்கள். அவரின் மேல் பாவ சாயல் படாமல் அமல உற்பவியாய் தமதிருத்துவமாகிய ஏக சர்வேசுரா பாதுகாத்து வந்தார்கள். பூரணியாய் விளங்கும் நமதன்னையை “அருள் மிகப் பெற்றவளே” என்று நாம் அழைப்பதை விட “அருள் நிறைந்தவளே” என்று அன்போடு அழைப்பதுதான் அவர்களுக்கு நாம் தரும் சரியான வாழ்த்தொலி.
புனிதர்கள் அனைவரும் அருள் மிகப் பெற்றவர்கள் என்றால் மிகையாகாது. நமது தாதையாம் சூசைத்தந்தை அருள் மிக மிகப் பெற்றவர். ஆனால் பரிசுத்த தமத்திருத்துவம், மானிட மீட்பிற்காக தேர்ந்தெடுத்த வாயிலாம் நமது அன்னையை தனக்கு அருள் வரங்களை நிறைத்து பூரணியாய் படைத்தார்கள்.
அருள் நிறை மந்திரத்தின் பிற்பகுதியில், நமதாண்டவளை நாம் “அர்ச்சியஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே!!” என்று அன்போடு அழைக்கின்றோம். “சேசு” என்னும் நாமத்திற்குப் பிறகு “மரியாள்” என்ற நாமத்தை விட இனிமை மிக்க நாமம், வல்லமை மிக்க நாமம் ஏதும் இல்லை. அன்னை நமக்கு மத்தியஸ்தியாகவும், இணை இரட்சகியாகவும் இருந்து நமது விண்ணக பயணத்தில் வழிநடத்திச் செல்கின்றார்கள்.
புனித பெர்நார்து” ஆபத்து வேளையிலும், துன்ப சமயத்திலும் மரியாளை கூப்பிடு. அவர்களைப் பின்சென்றால், நீ வழி தவற மாட்டாய். அவர்களை நினைவு கூர்ந்தால், நீ பாவம் செய்ய மாட்டாய். அவர்கள் தாங்கி நின்றால், நீ சாய்ந்து விழ மாட்டாய். அவர்கள் உன்னைப் பாதுகாத்தால், நீ பயப்படத் தேவையில்லை. சோதனை வேளையில் சாத்தானை தூர விரட்ட வல்லது “மரியாள்” என்ற திருநாமமே.பசாசின் தலையை நசுக்கியவர்களும் மரியாளே”(Homil.2, Super Missusest) என்று திரும்பத் திரும்ப கூறுகின்றார்.
நமது ஒவ்வொரு பணியைத் தொடங்கும் “அருள் நிறைந்தவளே வாழ்க” என்று கூறி தொடங்கும் பொது அப்பணி முழுவதையும் அன்னை வழிநடத்தி தருவார்கள்.
“செபம் சொல்வோம், தினம் செபமாலை சொல்வோம், பாவத்திற்காக பரிகாரம் புரிவோம்.”
இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
No comments:
Post a Comment