அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 25, 2018

பனிமய அன்னை

ரோம் காட்சி

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான ஜான் என்பவருக்கும், திருத்தந்தை லிபேரியஸ் (352-366) அவர்களுக்கும் அன்னை மரியா கி.பி. 352 ஆகஸ்ட் 4 அன்று காட்சி அளித்தார். மறுநாள் எஸ்குலின் குன்றின் மேல் தான் பனி சூழச் செய்யும் இடத்தில் தனக்காக ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று மரியன்னை அவர்களுக்கு உரைத்தார். ஆகஸ்ட் 5ந்தேதி எஸ்குலின் குன்றுக்கு அவர்கள் சென்று பார்த்தபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பனிமயமாக காட்சி அளித்தது. அன்னை மரியாவால் அடையாளம் காட்டப்பட்ட அந்த இடத்தில், செல்வந்தர் ஜானின் உதவியோடு திருத்தந்தை லிபேரியஸ் தூய மரியன்னை பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். பிற்காலத்தில் திருத்தந்தை 3ம் சிக்ஸ்டஸ் (432-440) அவ்வாலயத்தைப் புதுப்பித்தார்.

No comments:

Post a Comment