அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

சுமைகளை அகற்றுவோம்

சுமைகளை அகற்றுவோம்

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை மத்தேயு 5: 17 – 20 ல் நாம் பார்க்கலாம். அங்கே பத்துக்கட்டளைகளைப் பற்றிய செய்தி நமக்குத் தரப்படுகிறது. பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் நெறியாகக் கருதப்படுவது பத்துக்கட்டளைகள். பத்துக்கட்டளைகளின் அடிப்படை நெறியை இரண்டு வகைப்படுத்தலாம். கடவுளை நேசிப்பது, மனிதர்களை நேசிப்பது தான் அவை. இந்த கட்டளைகள் முடிவில்லாதது. இவற்றை மீறுவது மிகப்பெரிய பாவம். இவற்றை பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், விளக்கங்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஒழுங்குகளாகப் பிரித்தனர்.

விளக்கங்கள் என்ற பெயரில் பிரிக்கப்பட்ட ஒழுங்குகள் உண்மையான அடிப்படைச் சட்டத்திற்கு எதிராகத்தான் பலவேளைகளில் விளக்கப்பட்டது. உண்மையான உள்ளர்த்தம் மறைக்கப்பட்டு, வேறு, வேறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இறுதியில், மக்களைக் காக்க வேண்டிய சட்டங்கள், மக்கள் தூக்க இயலாத சுமையாகிப்போனது. மக்களை கடவுள்பால் அழைத்துவர வேண்டிய சட்டங்கள், கடவுளுக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை அறுப்பதற்கு வழிவகுத்தது. மன ஆறுதலுக்கு இடமான கடவுளின் இல்லம், மன வருத்தத்தைத் தரும் இடமாக மாறியது. இதைத்தான் இயேசு கடுமையாச்சாடுகிறார்.

மதங்கள், வழிபாடுகள் அனைத்தும் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும். மக்களுக்கு மன ஆறுதல் தரும் இடங்களாக ஆலங்கள் அமைய வேண்டும். ஒழுங்குமுறைகள் தேவை. அந்த ஒழுங்குமுறைகள் மக்களுக்கு சுமையாக, தூக்க இயலாத பாரமாக இருக்கக்கூடாது.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment