தேவதூதர்கள் ஹீப்ரு விவிலியம் (מלאך என மொழிபெயர்க்கப்படுகிறது) புதிய ஏற்பாடு மற்றும் குரான் ஆகியவற்றில் கடவுளின் தூதுவர்களாக இருக்கின்றனர். மதங்கள் பலவற்றில் "ஆன்மீகம் சார்ந்த வடிவங்களை" பல்வேறு விதமாகக் குறிப்பிடுவதற்கு "தேவதூதர்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களைப் பாதுகாத்தலும் வழிநடத்திச் செல்லுதலும் தேவதூதர்களின் மற்ற பணிகள் ஆகும்.
தேவதூதர்கள் சார்ந்த சமயயியல் ஆய்வு தேவதூதவியல் என அறியப்படுகிறது. ஓவியத்தில் தேவதூதர்கள் பொதுவாக இறக்கைகளுடன் இருப்பது போல் சித்தரிக்கப்படுகின்றனர். முடிவாக இது எசகீல்லின் மெர்கபா தோற்றத்தில் சாயோட் அல்லது இசைய்யாவின் செராபிம் போன்று ஹீப்ரு விவிலியத்தில் விவரித்திருப்பதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
சொற்பிறப்பியல்

ஆங்கிலத்தில் angel என்ற வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையான engel (இதில் g கடினமாக உச்சரிக்கப்படும்) மற்றும் பழைய பிரஞ்சு வார்த்தையான angele ஆகியவற்றின் இணைவாக இருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளும் இலத்தினின் angelus என்ற வார்த்தையில் இருந்து வந்தவையாகும். அது "தூதுவர்" என்று பொருள்படும் பண்டைய கிரேக்க ἄγγελος (angelos) என்ற வார்த்தையின் ரோமானியப்பதமாக இருக்கிறது.[1] இந்த வார்த்தையின் ஆரம்ப வடிவம் லீனியர் B அசை எழுத்து வடிவத்தில் இணைக்கப்பட்ட மைசெனாயியன் a-ke-ro ஆக இருக்கிறது.
யூதம்
விவிலியம் מלאך אלהים (mal'akh Elohim ; கடவுளின் தூதுவர்), מלאך יהוה (mal'akh Adonai ; பகவானின் தூதுவர்), בני אלהים (b'nai Elohim ; கடவுளின் மகன்கள்) மற்றும் הקודשים (ha-qodeshim ; புனிதமான ஒன்று) போன்ற வார்த்தைகளை தேவதூதர்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துகிறது. העליונים (ha'elyoneem ; உயர்வான ஒன்று) போன்ற மற்ற வார்த்தைகள் பின்னர் வந்த புனித நூல்களில் பயன்படுத்தப்பட்டன. டேனியல் என்பவர் பெயர் மூலமாக தனிப்பட்ட தேவதூதர்களைக் குறிப்பிடுவதற்கான முதல் விவிலியம் சார்ந்த நபர் ஆவார்.
விவிலியத்திற்கு பின்னரான யூதத்தில் சில தேவதூதர்கள் குறிப்பிட்ட தனிமுறைச்சிறப்பு மற்றும் மேம்பட்ட தனித்த மனோபாவங்களும் பங்குகளும் எடுத்துக் கொள்வதற்கு வருகின்றனர். எனினும் இந்த உயர் தேவதூதர்கள் (archangels) வானுலகைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் உயர் தரநிலையைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. எனினும் திட்டமிட்ட படிநிலை எதுவும் உருவாக்கப்படவில்லை. மெட்டாட்ரோன் என்பவர் மெர்காபா மற்றும் கபாலிய உள்ளுணர்வின் தேவதூதர்களில் உயர்வானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இவர் பொதுவாக ஒரு படி எடுப்பவராகச் சேவையாற்றுகிறார். இவர் டால்முத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். மேலும் மெர்காபா புனித உரைகளில் முக்கியமாக இடம்பெறுகிறார். இஸ்ரேலுக்கான (Daniel 10:13) போர் வீரரும் வழக்குரைஞராகப் பணியாற்றும் மைக்கேல் குறிப்பாக பிரியமுள்ளவராகக் கருதப்படுகிறார். கேப்ரியேல் என்பவர் டேனியல் புத்தகம் (Daniel 8:15–17), டோபிட் புத்தகம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். மேலும் டால்முத்தில் சுருக்கமாகவும் அத்துடன் பல மெர்காபா புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். யூதத்தில் தேவதூதர்களை வழிபடுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் தொடக்க வழிபாடு மற்றும் சில நேரங்களில் தேவதூதர்களை மனமார வேண்டிக்கொள்ளல் ஆகியவற்றுக்கான சான்றுகள் இருக்கின்றன.
இடைக்கால யூதத் தத்துவஞானி மாய்மோனிடஸ் அவரது கைடு ஃபார் த பெர்ஃப்லெக்ஸ்டு II:4 மற்றும் II:6 இல் தேவதூதர்கள் தொடர்பான அவரது பார்வையை விவரித்திருக்கிறார்:
...This leads Aristotle in turn to the demonstrated fact that God, glory and majesty to Him, does not do things by direct contact. God burns things by means of fire; fire is moved by the motion of the sphere; the sphere is moved by means of a disembodied intellect, these intellects being the 'angels which are near to Him', through whose mediation the spheres [planets] move... thus totally disembodied minds exist which emanate from God and are the intermediaries between God and all the bodies [objects] here in this world.
– Guide for the Perplexed II:4, Maimonides
கபாலாவைப் பொறுத்தவரை நான்கு உலகங்கள் இருக்கின்றன. அதில் நமது உலகமே இறுதி உலகம் ஆகும். இது நடவடிக்கைகளின் உலகம் (அஸ்ஸியா) ஆகும். தேவதூதர்கள் கடவுளின் 'பணிக்காக' உலகின் மேல் இருக்கின்றனர். அவர்கள் இந்த உலகின் விளைவுகளை உருவாக்குவதற்காக கடவுளின் பிரதிநிதியாக இருக்கின்றனர். தேவதூதர் அதன் பணியை நிறைவு செய்த பிறகு அது வெளியேறுகிறது. தேவதூதர் பணியின் விளைவில் எப்போதும் இருப்பார். இது ஆதி ஆகமத்தில் ஆப்ரகாம் மூன்று தேவதூதர்களைச் சந்தித்தது மற்றும் பலர் இரண்டு தேவதூதர்களைச் சந்தித்தது ஆகிய நிகழ்வுகளில் இருந்து வருவிக்கப்பட்டது. தேவதூதர்களில் ஒருவரின் பணி ஆப்ரகாமிடம் அவரது பிறக்கப் போகும் குழந்தை குறித்து அறிவிப்பது ஆகும். மற்ற இருவரின் பணிகள் பலவற்றைப் பாதுகாத்தல் மற்றும் சோடோம் மற்றும் கோமொர்ராவை அழித்தல் ஆகும்.
பிரபலமான தேவதூதர்களும் அவர்களின் பணிகளும் பின்வருமாறு:
மாலாசிம் (பொருள்: தூதுவர்கள்), தேவதூதர்களுக்கான பொதுவான வார்த்தை
மைக்கேல் (பொருள்: கடவுளை விரும்புபவர்), கடவுளின் அருட்குணத்தைச் செயல்படுத்துபவர்
கேப்ரியேல் (பொருள்: கடவுளின் வலிமை), நீதி மற்றும் ஆற்றல் போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல்
ராபேல் (பொருள்: குணப்படுத்தும் கடவுள்), கடவுளின் குணப்படுத்தும் ஆற்றல்
யூரைல் (பொருள்: கடவுள் எனது ஒளி), நமக்கு ஊழ்வினைக்கு வழிவகுத்தல்
செராபிம் (பொருள்: எரிகின்ற ஒன்று), ஏதேன் தோட்டத்துக்கு வாயில் கதவாகப் பாதுகாத்தல்
மல்லாக் ஹமாவெட் (பொருள்: மரணத்தின் தேவதூதர்)
ஹாசாடன் (பொருள்: வழக்கு தொடுப்பவர்), வானுலக நீதிமன்றத்தில் மக்களின் பாவச்செயல்களை அவர்களுக்கு முன் கொடுப்பவர்
சாயோட் ஹாகோடெஷ் (பொருள்: புனித விலங்குகள்)
ஓபனிம் (பொருள்: மையங்கள்) வான்குறியியல் செல்வாக்கு
ஹாமெர்காவா (பொருள்: இரதம்), கடவுளின் புகழைப் பரப்புபவர்
கிறிஸ்துவம்

ஆரம்ப கால கிறிஸ்துவர்கள் தேவதூதர்களின் யூதப் புரிந்துகொள்ளல் மரபுடையவர்களாக இருந்தனர். ஆரம்பகால கட்டத்தில் தேவதூதர் தொடர்பான கிறிஸ்துவக் கருத்தாக்கத்தில் தேவதூதர் என்பவர் கடவுளின் தூதுவராகக் கருதப்படுவதாக இருந்தது. தேவதூதர்கள் என்பவர் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள், அன்பின் வெளிப்பாடுகள் மற்றும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கின்றனர். பின்னர் கேப்ரியேல், மைக்கேல், ராபேல் மற்றும் யூரைல் போன்றோர் தனிப்பட்ட தேவதூதர்களின் அடையாளமாக இருந்தனர். பின்னர் இரண்டுக்கு மேற்பட்ட நூற்றாண்டுகளின் (மூன்றாவதில் இருந்து ஐந்தாவது வரை) இடைவெளியில் தேவதூதர்களின் உருவப்படம் இறையியல் மற்றும் ஓவியம் ஆகிய இரண்டிலுமே நிச்சயமான சிறப்பியல்புகளைப் பெற்றது.
நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேவாலயத் தந்தைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தன்னேற்புத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுடன் கூடிய மாறுபட்ட பிரிவுகளில் தேவதூதர்கள் இருந்ததை ஏற்றுக் கொண்டனர். சில இறையியலாளர்கள் இயேசு இறைநிலை அடைந்தவர் அல்லர், ஆனால் திரித்துவத்துக்கு கீழ்ப்படிந்த பொருட்டல்லாத நிலையில் உள்ள மனிதர் என முன்மொழிகின்றனர். இந்த திரித்துவ சர்ச்சையின் முடிவில் தேவதூதர்கள் தொடர்பான சித்தாத்தங்களின் மேம்பாடும் அடங்கியிருக்கிறது.
தேவதூதர்கள் என்பவர்கள் கடவுள் மற்றும் மனிதர்களுக்கு இடையில் செயல்படுவர்களாக கிறிஸ்துவ விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: "நீ அவனை (மனிதன்) தேவதூதர்களைக் காட்டிலும் சிறிது குறைவாக உருவாக்க வேண்டும்..." (Psalms 8:4,5). சில கிறிஸ்துவர்கள் தேவதூதர்கள் என்பவர்கள் உருவாக்கப்பட்ட நபர்களாக நம்புகின்றனர். மேலும் பின்வரும் சொற்றொடரை அதற்கு ஆதாரமாகக் கூறுகின்றனர்: "அவன் பேசுவதற்காக... அவனது தேவதூதர்கள் அனைவரும் அவனைப் புகழுங்கள்: அனைத்து ஆவிகளும் அவனைப் புகழுங்கள். அவர்கள் அதற்காக உருவாக்கப்பட்டவர்கள். அவன் ஆணையிடுவதற்காக அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்..." (Psalms 148:2-5; Colossians 1:16). தேவதூதர்கள் உருவாக்கப்பட்டவர்கள் என நான்காவது லேட்டரன் மன்றம் (1215) அறிவித்திருக்கிறது. அந்த மன்றத்தின் தீர்ப்பாணை ஃபர்மிடர் கிரெடிமஸ் (Firmiter credimus) (ஆல்பிகென்ஸஸுக்கு எதிராக வெளியிடப்பட்டது) தேவதூதர்கள் உருவாக்கப்பட்டவர்கள் எனவும் அவர்களுக்குப் பின்னர் மனிதர்கள் உருவாக்கப்பட்டனர் என்றும் அறிவித்திருக்கிறது. முதல் வாடிகன் மன்றம் (1869) "கத்தோலிக்க நம்பிக்கை மீதான பிடிவாதமான அமைப்பான" டெய் ஃபிலியஸில் இந்த அறிவித்தல் மீண்டும் இடம்பெற்றது. விவிலியத்தில் "தூதுவர்களாக" தேவதூதர்களின் செயல்பாடு விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எப்போது தேவதூதர்கள் உருவாக்கப்பட்டனர் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேவதூதர்கள் என்பவர்கள் பாலிலிகள் என்றும் இரு பாலினத்திலும் அடங்காதவர்கள் எனவும் பல கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர். இந்த வழியில் அவர்கள் மேத்தீவ் 22:30ஐ விளக்கமாகக் கூறுகின்றனர். மற்றொரு வகையில் தேவதூதர்கள் பொதுவாக ஆண் போன்ற தோற்றம் கொண்டவர்களாக விவரிக்கப்படுகின்றனர். அவர்களது பெயர்களும் கூட ஆண் பெயர்களாகவே உள்ளது. தேவதூதர்கள் மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அறிவுடையவர்களாக இருந்த போதும் மேத்தீவ் 24:36 இல் குறிப்பிட்டுள்ளவாறு அவர்கள் எல்லாமறிந்த கடவுள் அல்ல. மற்றொரு பார்வையில் தேவதூதர்கள் சோதனைக்காக இந்த உலகிற்கு மனிதர்கள் வடிவத்தில் அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.
தேவதூதர்களுடன் தொடர்புகொள்ளுதல்

புதிய ஏற்பாடு தேவதூதர்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையில் பலமுறை தொடர்புகொள்ளுதல்கள் மற்றும் உரையாடல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்து ஆகியோரின் பிறப்புக்களுடன் தொடர்புடைய தேவதூதர்களுடன் தொடர்பு கொண்டதற்கான மூன்று தனித்த நிகழ்வுகள் இருக்கின்றன. லூக் 1:11 இல் ஒரு தேவதூதர் ஜெகாரியா முன் தோன்றி அவர் வயதானவராக இருந்த போதும் அவர் ஒரு குழந்தை பெறப்போவதாக அறிவித்தது. இவ்வாறு திருமுழுக்கு யோவான் பிறப்பதற்கான முன்னறிவிப்பாக அது அமைந்தது. மேலும் லூக் 1:26 இல் உயர் தேவதூதர் கேப்ரியேல் கன்னி மேரியைச் சந்தித்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து கணித்து முன்னறிவிப்பு செய்தது. தேவதூதர்கள் பின்னர் லூக் 2:10 இல் இடையர்களின் வழிபாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து முன்னறிவிப்பு செய்தனர். தேவதூதர்கள் பின்னர் புதிய ஏற்பாட்டிலும் தோன்றினர். லூக் 22:43 இல் ஒரு தேவதூதர் தோட்டத்தில் வேதனையுடன் இருந்த போது இயேசு கிறிஸ்துவுக்கு வசதியளித்தது. மேத்தீவ் 28:5 இல் இயேசு உயிர்த்தெழுகையைத் தொடர்ந்து ஒரு தேவதூதர் காலியான கல்லறையில் பேசியது மற்றும் தேவதூதர்கள் மூலமாக கற்கள் உருட்டப்பட்டன. ஹீப்ரூக்கள் 13:2 இல் அவர்கள் "தேவதூதர்களுக்குத் தெரியாமல் அவர்களை மகிழ்விக்கலாம்" என்று வாசிப்பவர் ஒருவர் நினைவூட்டுவார்.
புதிய ஏற்பாடு நிறைவுற்றதில் இருந்து கிறிஸ்துவ பாரம்பரியத்தில் தொடர்ந்து தேவதூதர்களுடன் தொடர்பு கொண்டதாக பல செய்திகள் வருகின்றன. எடுத்துக்காட்டாக 1851 ஆம் ஆண்டில் போப் பியஸ் IX 1751 ஆம் ஆண்டில் உயர் தேவதூதர் மைக்கேலிடம் இருந்து கார்மலைட் நன் ஆண்டொனியோ டி'அஸ்டோனக் பெற்ற தனிப்பட்ட இரகசிய வெளிப்பாடு சார்ந்து புதிய மைக்கேலின் செபமணிமாலையை ஏற்றுக் கொண்டார். மேலும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1986 ஆம் ஆண்டில் "விமோசனத்தின் வரலாற்றில் தேவதூதர்களின் பங்களிப்பு " (Angels Participate In History Of Salvation) என்ற தலைப்பிலான அவரது பேச்சில் கத்தோலிக்க நுட்பங்களில் தேவதூதர்களின் பங்கை வலியுறுத்தினார். அதில் அவர் நவீன மனநிலை தேவதூதர்களின் முக்கியத்துவத்தைக் காணமுற்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
20 ஆம் நூற்றாண்டில் அசாதரணத் தோற்றம் காண்பவர்களும் மறைபொருள் காண்பவர்களும் தேவதூதர்களுடன் தொடர்பு கொண்டதாகவும் உண்மையில் அவர்கள் சொன்னதை எழுதியதாகவும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக படுத்த படுக்கையான இத்தாலிய எழுத்தாளர் மற்றும் மறைபொருள் காண்பவரான மரியா வால்டோர்டா (Maria Valtorta) "சொல்வதெழுதுதல்" அடிப்படையில் த புக் ஆஃப் ஆஜரியாவை எழுதியிருக்கிறார். அதில் அவர் தனது பாதுகாவலர் தேவதூதர் அசாரியாவுடன் 1946 மற்றும் 1947 ஆம் ஆண்டுகளின் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு பயன்படுத்துவதற்கான ரோமன் மிஸ்ஸல் குறித்து நேரடியாகக் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டிருந்தார்.
உருவ விளக்கம்

பிரிஸ்ஸில்லியாவின் பாதாளக் கல்லறை குபிகோலோ டெல் அன்னன்சியாசியொன்னில் தேவதூதரின் மிகவும் பழங்கால உருவப்படம் கண்டறியப்பட்டது. அதில் மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் உள்ள ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த உருவப்படம் இறக்கைகள் இல்லாமல் இருக்கிறது. அந்த காலத்திய கல்சவப்பெட்டி மீது மற்றும் விளக்குகள் மற்றும் நினைவுச் சின்னப் பேழைகள் போன்ற பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் தேவதூதர்களும் கூட இறக்கைகள் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஜூனியஸ் பாஸ்ஸஸ்சின் கல்சவப்பெட்டியில் உள்ள ஐசக்கை பலிகொடுக்கும் காட்சியில் தேவதூதர் இருக்கிறது.
இறக்கைகளுடன் கூடிய தேவதூதர்களைக் கொண்ட நன்கு அறியப்பட்ட ஆரம்ப கால வெளிப்பாடு இளவரசனின் கல்சவப்பெட்டி என்று அழைக்கப்படுகிறது. இது 1930களில் இஸ்தான்புல் அருகில் உள்ள சாரிகசலில் கண்டறியப்பட்டது. மேலும் அது தியோடோசியஸ் I (379-395) காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என யூக்கிக்கப்படுகிறது.
புனித ஜான் கிறிசோஸ்டோம் தேவதூதர்களின் இறக்கைகளின் தனிச்சிறப்பு குறித்து பின்வருமாறு விவரிக்கிறார்: "அவை இயற்கையின் மதிப்பு மிக்கவைகளை வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் கேப்ரியேல் இறக்கைகளுடன் குறிப்பிடப்படுகிறார். தேவதூதர்கள் இறக்கைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அவர்கள் உயரத்தில் விடப்பட்டவர்களாகவும் மனித அணுகுமுறைக்கு மிகவும் உயரத்தில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால் அவர்களுக்கு இறக்கைகள் இருப்பது அவர்களின் இயல்பில் உள்ள மேன்மையை உணர்த்துவதற்காக அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் இருக்காது" என்றார்.

அதன் பிறகு சில விதிவிலக்குகள் இருந்த போதும் புனித மேரி மேஜர் திருச்சபையின் (432–440) பளபளப்புக் கற்களின் சுழற்சியில் இருப்பது போன்ற கிறிஸ்துவ ஓவிய வெளிப்பாடுகளில் தேவதூதர்கள் இறக்கைகளுடன் சித்தரிக்கப்பட்டனர். பொதுவாக முகம், இறக்கைகள் மட்டுமே வெளிப்படும்படியும் நான்கு முதல் ஆறு இறக்கைகள் கொண்ட தேவதைகள், குறிப்பாக செருபிம் மற்றும் செராபிம் போன்ற பிரதான தேவதைகளில் இருந்து வரையப்பட்ட அந்த ஓவியங்கள் பெர்சிய ஓவியங்களாகத் எண்ணப்பட்டன. அவை பொதுவாக பூமியின் மீது பணிகளைச் செய்வதற்கு எதிராக புனித நூல்களில் மட்டுமே காணப்படுகின்றன. அவை பொதுவாக தேவாலயங்களில் குவிமாடங்கள் அல்லது அரை-குவிமாடங்களின் தொங்கணங்களில் காட்சியளிக்கின்றன.
குறிப்பாக உயர் தேவதூதர் மைக்கேல் போன்ற தேவதூதர்கள் கடவுளின் இராணுவ பாணி முகவர்களாகச் சித்திரக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பழங்கால வடிவிலான இராணுவ சீருடை அணிந்திருப்பர். இது முழுங்கால்களைச் சுற்றியிருக்கும் மூடு உறை, மார்ப்புக் கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றுடன் கூடிய சாதாரண இராணுவ உடையாக இருக்கலாம். அவை நீண்ட மூடு உறையுடன் கூடிய பைசாண்டியப் பேரரசரின் பாதுகாவலரின் குறிப்பிட்ட உடை மற்றும் அரச குடும்பங்கள் மற்றும் அவர்களது நெருங்கிய பாதுகாவலர்கள் மட்டுமே அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட நீண்ட தங்கம் மற்றும் அணிகலன்கள் கொண்ட மேல்போர்வையான லோரோஸ் போன்ற உடைகளுடனும் சித்தரிக்கப்பட்டன. அடிப்படை இராணுவ உடை பாரோக் கலைவடிவ காலகட்டத்திய புகைப்படங்கள் மற்றும் மேற்கிற்கு அப்பால் (மேலே உள்ள ரேனி புகைப்படத்தைப் பார்க்கவும்) மற்றும் தற்போது வரை உள்ள கிழக்கத்திய மரபு சார்ந்த சிலைகள் ஆகியவற்றில் தற்போதும் அணிவிக்கப்படுகிறது. பிற தேவதூதர்கள் வழக்கமாக தளர்வான மேலங்கிகளுடன் சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் மத்திய காலங்களின் பின்பகுதியில் அவர்கள் பொதுவாக திறந்த தளர் சட்டை மீது மேல் கீழ் அச்சு வடிவம் கொண்ட தேவாலய அதிகாரிகள் அணியும் சமயச் சடங்குக்குரிய உடை அணிவிக்கப்பட்டது. குறிப்பாக ஜான் வான் எயிக் வரைந்த முன்னறிவிப்புக் காட்சிகளில் எடுத்துக்காட்டாக வாஷிங்டனின் முன்னறிவிப்பில் கேப்ரியல் இந்த உடை அணிந்திருப்பார்.
No comments:
Post a Comment