நற்கருணையில் நடந்த புதுமைகள்
பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சைரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும். கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திருரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர். மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையாற்றுகிரைர்கள்.
நற்கருணை புதுமையின் வகைகள்:
நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோ- இல நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நர்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம்(எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கேடாமளிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமளிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது.
பிற நற்கருணை புதுமைகள்
நற்கருணை பங்கிருப்பதாக எண்ணற்ற புதுமைகள் கூறப்படுகின்றன, அவற்றுள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றது
ஆம்ஸ்ற்றெர்டம் (Amsterdum) லிருந்து வரும் கூற்றானது 1345ம் ஆண்டு ஒரு குருவானவர் ஓர் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதருக்கு நோயில் பூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார். அவர் அக்குடும்பத்தினரிடம் அம்மனிதர் அதை எறிந்துவிட்டால், அவர்களும் அதை எடுத்து நெருப்பில் எறிந்து விட வேண்டுமென்று கூறினார். அம்மனிதன் அதை எறிந்து விட்டான். குருவின் வேண்டுகோள்படியே அவர்களும் அதை நெருப்பில் எறிந்து விட்டார்கள். மறுநாள் காலை ஒரு பெண்மணி தீயை குறைக்க வந்தாள். அவள் அப்பமானது விழிம்பில் ஒளியுடன் சூழப்பட்டு இருப்பதை கண்டாள். இது ஒருவாறு மனித செரிமானப் பகுதியைய்ம், தீயையும் கடந்து விட்டதாகவே தோன்றினாலும் பாதிப்பேதும் அடையவில்லை.
மற்றொரு கூற்றின்படி, பவேரியா (Bavaria)ல் உள்ள ஒரு விவசாயி, எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பத்தை திருப்பலியிலிருந்து வீட்டிற்கு அது தனது குடும்பத்திற்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்தான். இருந்தாலும் அவன் தான் செய்வது மாபரும் தவறு என்ற உணர்வினால் மனம் நொந்து பாவமன்னிப்பு பெறுவதற்காக கோவிலுக்குச் செல்ல திரும்பினான். அங்ஙனம் அவன் திரும்பியதும் அந்த அப்பமானது கையிலிருந்து பறந்து சென்று தரையில் இறங்கியது. அவன் அதைத் தேடினான். ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் திரும்பிச்சென்று உடன் பல கிராம வாசிகளுடனும் குருவுடனும் வந்தான். அவர்கள் அது சற்று தொலைவிளிருப்பதைக் கண்டார்கள். அவர்களோ அதை எடுக்க குனிந்தனர். அதுவோ மீண்டும் பறந்து சென்று மிதந்த வண்ணம் தரையில் அமர்ந்து மறைந்தது. இந்நிகழ்வு ஆயருக்கு அறிவிக்கப்பட்டு அவரும் அவ்விடம் வந்து அதை எடுக்க முயல அது மீண்டும் பறந்து சற்று அதிக நேரம் தொங்கி கீழே விழுந்து மறைந்தது.
No comments:
Post a Comment