அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 27, 2017

பெரிய மனிதர் என்று யாரை கணிக்கிறீர்கள்? என்ன தகுதி வேண்டும்?

பெரிய மனிதர் என்று யாரை கணிக்கிறீர்கள்?  என்ன தகுதி வேண்டும்?

விலை உயர்ந்த உடைகள் அணிய வேண்டும். பெரிய பங்களா மாதிரி வீடு இருக்க வேண்டும். வீடு நிறைய நவீன வசதிகள் பொருட்கள் இருக்க வேண்டும். விலை உயர்ந்த வாகனம்.உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும். கவர்ச்சியான உடை அணிய வேண்டும். (வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களை அகலமாக்குபவர்கள்) குனிந்து வேலை செய்யக் கூடாது. முதலீடு இல்லாமல் முதலாளியாக இருக்க வேண்டும். (தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரக் கூடாது);. ஜால்ரா கூட்டம் சுற்றி இருக்க வேண்டும். (தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் பாராட்ட வேண்டும்) எங்கும் எதிலும் முதலிடம் கொடுக்க வேண்டும். (விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளும் தேடுபவர்கள்). ஐயா, அம்மா என்று எல்லோரும் அழைக்க வேண்டும். ("ரபி" என அழைக்கப்பட வேண்டும். தந்தை என அழைக்கவேண்டும்)

இயேசுவின் பார்வையில் உள்ள எளிமையான மனப்பான்மையும் அணுகுமுறையும் உள்ள தலைவர்கள் நம்மிடையே தோன்றுவார்களாயின் நம் சமுதாயம் வளரவும் முன்னேறவும் வாய்ப்புகள் அதிகம். இன்னும் சில நாட்களில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண இருக்கிறோம். இயேசு சுட்டிக்காட்டும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து முன்னேற்றப் பாதையில் நம் நாட்டை அழைத்துச் செல்வோம். அல்லது அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வார்கள்.


-ஜோசப் லீயோன்

No comments:

Post a Comment