உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.
அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார்.
அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 25)
இறையன்பு – பிறரன்பு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
முன்பொரு காலத்தில் ஜனகர் என்னும் பெயர்கொண்ட மாமன்னர் ஒருவர் இருந்தார். அவர் மக்களுக்கு சிறப்பானதொரு ஆட்சியை வழங்கி வந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அரண்மனைக்கு அவ்வப்போது ஞானிகளையும் மகான்களையும் அழைத்துவந்து சமய சொற்பொழிவுகளையும், சாஸ்திர ஆராய்ச்சிகளும் நடத்தி வந்தார். இதனால் அந்த சபையில் ஞான அமுதம் பெருகி வழிந்து கொண்டிருந்தது. ஜனகரைப் பற்றியும், அவரது சபையைப் பற்றிய தகவல்களும், புகழாக நாடெங்கும் பரவியிருந்தது.
இப்படி நல்ல விஷயங்களைக் கேட்பதற்காகவும், அறிவார்ந்த பல தகவல்களை பற்றி கலந்து பேசுவதற்காகவும், பல சான்றோர்கள் ஜனகரின் சபைக்கு வருவது வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் அவரது அரண்மனை வாசலில் ஒரு ஞானி வந்திருப்பதாக, வாயில் காப்பாளன் வந்து சென்னான். அப்போது ஜனகரும், அவரது சபையைச் சேர்ந்த சான்றோர்களும் அரசவையில் கூடியிருந்தனர். வந்திருப்பது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஜனகருக்கு ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக உள்ளே அனுமதிக்கும்படி காவலனிடம் கூறி அனுப்பினார். வந்தவர் மிகப்பெரிய ஞானி. அவர் பெயர் அஷ்டவக்ரர். அந்த மகா முனியின் உடலில் எட்டு இடங்களில் வளைவுகள் இருந்தது. அதன் காரணமாகவே அவர், ‘அஷ்டவக்ரர்’ என்று பெயர் பெற்றார்.
அரசவைக்குள் நுழைந்ததும், அஷ்டவக்ரரின் வளைந்த தோற்றத்தைக் கண்ட, அவையில் கூடியிருந்த சான்றோர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர். ஜனகருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. ஏனெனில் அவர், அஷ்டவக்ரரின் பெருமையை உணர்ந்திருந்தார்.
சபையோரின் பலத்த சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது. அவர்கள் அனைவரின் சிரிப்பொலியும் அடங்கியபிறகு, அனைவரின் சிரிப்பொலியைக் காட்டிலும், பன்மடங்கு பலமாக ஒரே ஒரு சிரிப்பொலி மட்டும் ஒலிக்கத் தொடங்கியது. அந்த சிரிப்பொலிக்கு சொந்தக்காரர், அஷ்டவக்ரர். சபையோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ‘இவர் எதற்காக சிரிக்கிறார்?’ என்று.
ஜனகருக்கும் அதே எண்ணம்தான். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, சாஷ்டாங்கமாக அஷ்டவக்ரரின் காலில் விழுந்து வணங்கினார். ‘தவ முனியே! அவையோர் அறியாமையால் சிரித்தனர். ஆனால் தாங்கள் சிரித்ததன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை?’ என்று கேட்டார். ‘ஜனகரே! உங்களுடைய சபையில் ஞானியரும், வேதியரும் சூழ்ந்திருப்பார்கள். அவர்களுடன் பல நல்ல விஷயங்களைப் பற்றி பேசி ஆனந்தம் அடையலாம் என்று எண்ணி வந்தேன். ஆனால் உமது சபையில் உள்ளவர்கள், உள்ளத்தில் உள்ளதைப் பார்க்கத் தெரியாமல், வெளியில் உள்ளதை மட்டுமே பார்ப்பவர்களாக இருக்கிறார்களே என்பதை நினைத்தபோதுதான் எனக்குப் பெருஞ்சிரிப்பு வந்தது” என்றார் அஷ்டவக்ரர்.
அவர் தொடர்ந்து ஜனகரிடத்தில் சொன்னார், “கடவுள் ஒவ்வொருவரிலும் குடிக்கொண்டிருக்கிறார் என்பதை உணராத இவர்களா வேதம் போதிக்கின்றார்கள், இது வெட்கக் கேடு”. அசடவக்ரர் பேசிய பேச்சைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் வெட்கத்தில் தலைகுனிந்தனர்.
சக மனிதரிடத்தில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் இருக்கின்றார் என்கிற உண்மையை உணராமலும் அவரை அன்பு செய்யாமலும் இருக்கின்ற ஒருவர், இறைவனுக்கு எவ்வளவுதான் பலிகளை ஒப்புக்கொடுத்தாலும், அல்லது இறைவனின் திருநாமத்தை அனுதினமும் ஓதினாலும் அவர் கடவுளுக்கு உகந்தவராக இருக்கமுடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மையாக இருக்கின்றது. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் வந்து, “போதகரே! திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்கின்றார். இயேசுவோ அவரிடம் இணைசட்ட நூல் 6 ஆம் அதிகாரம், 5 ஆம் இறைவார்த்தையையும் லேவியர் புத்தகம் 19 ஆம் அதிகாரம் 18 ஆம் இறைவார்த்தையும் இணைத்து புதிய கட்டளையாகத் தருகின்றார். இயேசு கொடுத்த புதிய கட்டளையானது நாம் முழுமையாக இறைவனை அன்பு செய்ய அழைப்புத் தருகின்றது. அதே நேரத்தில் இறைவனை எந்தளவுக்கு அன்பு செய்கின்றோ அதே அளவுக்கு மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்கிற அழைப்பைத் தருகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் கடவுள்மீது நாம் கொள்ளும் அன்பு, நம்மை சக மனிதர்மீது அன்பு கொள்ளத் தூண்டவேண்டும். இல்லையென்றால் கடவுளை நாம் அன்பு செய்வதும் பொய்யாகிவிடும்.
ஆகவே, இயேசுவின் அன்புச் சீடர்களாகிய நாம் இறையன்பையும், பிறரன்பையும் நம்முடைய இரு கண்களாகப் பார்த்து வாழ்வோம், இறைவன்மீது நாம் கொள்ளும் அன்பினை மற்றவரில் வெளிகாட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.
அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார்.
அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 25)
இறையன்பு – பிறரன்பு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
முன்பொரு காலத்தில் ஜனகர் என்னும் பெயர்கொண்ட மாமன்னர் ஒருவர் இருந்தார். அவர் மக்களுக்கு சிறப்பானதொரு ஆட்சியை வழங்கி வந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அரண்மனைக்கு அவ்வப்போது ஞானிகளையும் மகான்களையும் அழைத்துவந்து சமய சொற்பொழிவுகளையும், சாஸ்திர ஆராய்ச்சிகளும் நடத்தி வந்தார். இதனால் அந்த சபையில் ஞான அமுதம் பெருகி வழிந்து கொண்டிருந்தது. ஜனகரைப் பற்றியும், அவரது சபையைப் பற்றிய தகவல்களும், புகழாக நாடெங்கும் பரவியிருந்தது.
இப்படி நல்ல விஷயங்களைக் கேட்பதற்காகவும், அறிவார்ந்த பல தகவல்களை பற்றி கலந்து பேசுவதற்காகவும், பல சான்றோர்கள் ஜனகரின் சபைக்கு வருவது வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் அவரது அரண்மனை வாசலில் ஒரு ஞானி வந்திருப்பதாக, வாயில் காப்பாளன் வந்து சென்னான். அப்போது ஜனகரும், அவரது சபையைச் சேர்ந்த சான்றோர்களும் அரசவையில் கூடியிருந்தனர். வந்திருப்பது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஜனகருக்கு ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக உள்ளே அனுமதிக்கும்படி காவலனிடம் கூறி அனுப்பினார். வந்தவர் மிகப்பெரிய ஞானி. அவர் பெயர் அஷ்டவக்ரர். அந்த மகா முனியின் உடலில் எட்டு இடங்களில் வளைவுகள் இருந்தது. அதன் காரணமாகவே அவர், ‘அஷ்டவக்ரர்’ என்று பெயர் பெற்றார்.
அரசவைக்குள் நுழைந்ததும், அஷ்டவக்ரரின் வளைந்த தோற்றத்தைக் கண்ட, அவையில் கூடியிருந்த சான்றோர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர். ஜனகருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. ஏனெனில் அவர், அஷ்டவக்ரரின் பெருமையை உணர்ந்திருந்தார்.
சபையோரின் பலத்த சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது. அவர்கள் அனைவரின் சிரிப்பொலியும் அடங்கியபிறகு, அனைவரின் சிரிப்பொலியைக் காட்டிலும், பன்மடங்கு பலமாக ஒரே ஒரு சிரிப்பொலி மட்டும் ஒலிக்கத் தொடங்கியது. அந்த சிரிப்பொலிக்கு சொந்தக்காரர், அஷ்டவக்ரர். சபையோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ‘இவர் எதற்காக சிரிக்கிறார்?’ என்று.
ஜனகருக்கும் அதே எண்ணம்தான். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, சாஷ்டாங்கமாக அஷ்டவக்ரரின் காலில் விழுந்து வணங்கினார். ‘தவ முனியே! அவையோர் அறியாமையால் சிரித்தனர். ஆனால் தாங்கள் சிரித்ததன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை?’ என்று கேட்டார். ‘ஜனகரே! உங்களுடைய சபையில் ஞானியரும், வேதியரும் சூழ்ந்திருப்பார்கள். அவர்களுடன் பல நல்ல விஷயங்களைப் பற்றி பேசி ஆனந்தம் அடையலாம் என்று எண்ணி வந்தேன். ஆனால் உமது சபையில் உள்ளவர்கள், உள்ளத்தில் உள்ளதைப் பார்க்கத் தெரியாமல், வெளியில் உள்ளதை மட்டுமே பார்ப்பவர்களாக இருக்கிறார்களே என்பதை நினைத்தபோதுதான் எனக்குப் பெருஞ்சிரிப்பு வந்தது” என்றார் அஷ்டவக்ரர்.
அவர் தொடர்ந்து ஜனகரிடத்தில் சொன்னார், “கடவுள் ஒவ்வொருவரிலும் குடிக்கொண்டிருக்கிறார் என்பதை உணராத இவர்களா வேதம் போதிக்கின்றார்கள், இது வெட்கக் கேடு”. அசடவக்ரர் பேசிய பேச்சைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் வெட்கத்தில் தலைகுனிந்தனர்.
சக மனிதரிடத்தில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் இருக்கின்றார் என்கிற உண்மையை உணராமலும் அவரை அன்பு செய்யாமலும் இருக்கின்ற ஒருவர், இறைவனுக்கு எவ்வளவுதான் பலிகளை ஒப்புக்கொடுத்தாலும், அல்லது இறைவனின் திருநாமத்தை அனுதினமும் ஓதினாலும் அவர் கடவுளுக்கு உகந்தவராக இருக்கமுடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மையாக இருக்கின்றது. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் வந்து, “போதகரே! திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்கின்றார். இயேசுவோ அவரிடம் இணைசட்ட நூல் 6 ஆம் அதிகாரம், 5 ஆம் இறைவார்த்தையையும் லேவியர் புத்தகம் 19 ஆம் அதிகாரம் 18 ஆம் இறைவார்த்தையும் இணைத்து புதிய கட்டளையாகத் தருகின்றார். இயேசு கொடுத்த புதிய கட்டளையானது நாம் முழுமையாக இறைவனை அன்பு செய்ய அழைப்புத் தருகின்றது. அதே நேரத்தில் இறைவனை எந்தளவுக்கு அன்பு செய்கின்றோ அதே அளவுக்கு மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்கிற அழைப்பைத் தருகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் கடவுள்மீது நாம் கொள்ளும் அன்பு, நம்மை சக மனிதர்மீது அன்பு கொள்ளத் தூண்டவேண்டும். இல்லையென்றால் கடவுளை நாம் அன்பு செய்வதும் பொய்யாகிவிடும்.
ஆகவே, இயேசுவின் அன்புச் சீடர்களாகிய நாம் இறையன்பையும், பிறரன்பையும் நம்முடைய இரு கண்களாகப் பார்த்து வாழ்வோம், இறைவன்மீது நாம் கொள்ளும் அன்பினை மற்றவரில் வெளிகாட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
No comments:
Post a Comment