பக்தி மணிமாலைகள்
முன்னுரை :
புராதன செபமாலைக்குச் சற்றும் தொடர்பில்லாத பல வடிவங்களினால் ஆன செபமாலைப் பக்தி நிலவுகிறது. பல, மரியன்னையோடு தொடர்புடையவை; பல, புனிதர்களோடு தொடர்புடையவை. இவற்றுக்கு சரியான வரலாறோ, பக்தி நடைமுறையோ இல்லை. கீழே சில மணிமாலைகளின் எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. வரலாற்று நுட்பமோ, வேத பாரம்பரியமோ கண்டறியப்படாதவை.
1. நற்கருணை அருட்சாதன மணிமாலை
2. நற்கருணை வணக்க மணிமாலை
நற்கருணை அருட்சாதன மணிமாலை
நற்கருணைப் பதக்கத்துடன் முப்பத்து மூன்று மணிகள் கொண்ட மணிமாலை இது. இயேசுவின் உலக வாழ்க்கையைக் (33 வருடங்கள்) குறிக்கும் முப்பத்து மூன்று மணிகள் கொண்ட இந்த செப மாலை, நற்கருணை பக்திக்காகக் சொல்லப்படுவதாகும். நற்கருணைத் துறவியரிடம் இதைப் பெறலாம்.
இயேசுக் கிறிஸ்துவோடு ஆன்மீக உறவை உருவாக்க செபிக்கப்படும் இந்த மணிமாலை நற்கருணைப் பதக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
"நற்கருணையில் உம்மை இப்போது பெற முடியாததால், ஆன்மிகத்தில் என் உள்ளம் வாரும் ஆண்டவரே! என் உள்ளத்தை உம்முடையதாக்கும்"
செபமாலையின் ஒவ்வொரு மணியிலும் "நற்கருணையில் வீற்றிருக்கும் எங்கள் யேசுக் கிறிஸ்து நாதரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லவும்.
No comments:
Post a Comment