அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?' (மத்தேயு 19:3)

''பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன்,
'ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு
விலக்கிவிடுவது முறையா?' என்று கேட்டனர்'' (மத்தேயு 19:3)

-- குடும்ப உறவுகளைப் பற்றி இயேசு பல தடவை போதித்துள்ளார். கானாவூர் திருமணத்தில் அவர் கலந்துகொண்டார். திருமணம் தொடர்பான உவமைகளையும் அவர் மக்களுக்கு எடுத்துக் கூறினார். கணவன் - மனைவி உறவு பற்றிப் பேசும்போது இயேசு தொடக்க நூல் ஏற்கெனவே வழங்கிய போதனையை மீண்டும் எடுத்துக் கூறுகிறார். அதாவது, கணவனும் மனைவியும் தாம் பிறந்த குடும்பங்களை விட்டுவிட்டுப் புதியதொரு குடும்பம் தொடங்கும்போது ''ஒரே உடலாக மாறுவர்''. எனவே, ''கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' (மத் 19:5-6; தொநூ 2:24). படைப்பின் தொடக்கத்தில் கடவுள் வழங்கிய இக்கட்டளையை மதிக்க இஸ்ரயேலர் தவறியதால்தான் மோசே மணவிலக்கினை அனுமதித்தார் எனவும் மக்களுடைய ''கடின உள்ளத்தின் பொருட்டே'' இது நிகழ்ந்தது எனவும் இயேசு போதிக்கிறார் (19:7-8). ''கடின உள்ளம்'' என்னும் சொற்றொடர் குறிப்பது மக்கள் கடவுளின் போதனையைச் சரியாக உணர்ந்து அறிந்து செயல்படுத்தத் தவறினர் என்பதையே.
-- மணவிலக்கு என்பது ''தொடக்க முதல்'' இருந்த வழக்கம் அல்ல என இயேசு போதித்தார். இன்றைய உலகில் மணவிலக்கு நிகழவே செய்கிறது. ஆயினும் இயேசு தரும் போதனைப்படி மணவிலக்கு மனித சமுதாயத்தில் ஒரு பிளவையே ஏற்படுத்திவிடுகிறது. மாறாக, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வது கடவுளின் அன்பை இம்மண்ணுலகில் பிரதிபலிக்கிறது. பழைய ஏற்பாட்டில் மணவிலக்கு சில வேளைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட, இயேசுவின் சீடர்கள் ''கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்னும் வழிமுறையைக் கடைப்பிடித்துப் பிரமாணிக்கமாக ஒழுகிட அழைக்கப்டுகிறார்கள்.
மன்றாட்டு
இறைவா, குடும்ப வாழ்வு உம் திருவுளத்திற்கேற்ப உயர்ந்தோங்கிட நாங்கள் உழைக்குமாறு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

No comments:

Post a Comment