அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

*நாம் செபிக்கும் ஒவ்வொரு செபமாலையும் விண்ணகத்தில் நமக்காக நாம் சேமிக்கும் பூமகுடம்*

*நாம் செபிக்கும் ஒவ்வொரு செபமாலையும் விண்ணகத்தில் நமக்காக நாம் சேமிக்கும் பூமகுடம்*

செபமாலை மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த கர்த்தூசியன் சபையைச் சேர்ந்த சாமிநாதர் என்ற குருவானவருக்கு பரலோகத்தின் காட்சி அருளப்பட்டது. அவர் காணும் படியாக பரலோகம் திறக்கப்பட்டது.

மகத்தான அணிவரிசைகளில் அங்குள்ளவர்கள் குழுமியிருந்தனர்.  அவர்கள் மிகவும் இனிமையான இராகத்தில் செபமாலையைப் பாடிக் கொண்டிருந்தனர்.  ஒவ்வொரு பத்து மணியும் மீட்பராம் நமதாண்டவர் சேசுகிறிஸ்துவினுடையதும், அவரது தாயாராம் தேவமாதாவினுடையவும் வாழ்வு, பாடுகள், மகிமை ஆகியவற்றை குறித்து இருந்தன.

அவர்கள் சேசுகிறிஸ்துவின் திருப்பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அவர்கள் முழந்தாளிட்டும்,தேவதாயின் திருப்பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் தலை வணங்கவும் செய்தனர்.  செபமாலை பக்திசபையின் அங்கத்தினர்கள் பூவுலகில் செபிக்கும் செபமாலை வாயிலாக எல்லாம் வல்ல இறைவன் விண்ணிலும் மண்ணிலும் ஆற்றியுள்ள எண்ணிலடங்கா அருள் வரங்களை குறித்து அவருக்கு நன்றிப்பா பாடினார்கள்.

மேலும் பூவுலகில் செபமாலை பக்திசபையின் அங்கத்தினர்கள் செபிக்கும் செபமாலைகள் அனைத்தையும் நமதாண்டவளும் அனைத்து புனிதர்களும் எல்லாம் வல்ல இறைவனுக்கு அன்பளிப்பாக அளித்ததையும், செபமாலை பக்தியை நிறைவேற்றும் அன்பர்கள் அனைவருக்காகவும் அவர்கள் மன்றாடியதையும் குருவானவர் கவனித்தார்.

செபமாலையை பக்தியுடன் செபிக்கும் அன்பர்கள் ஒவ்வொருவருக்காகவும் பல வண்ண நிற,  நறுமணம் மிகுந்த மலர்களால் பூமுடிகள் தயாராக இருப்பதையும் கண்டார்.  செபமாலை செபிக்கும் அன்பர்கள், தாங்கள் செபிக்கும் ஒவ்வொரு செபமாலைக்கும் விண்ணகத்தில் தங்களுக்கென பூமகுடம் ஒன்றினை தயார் செய்கின்றனர் என்றும், விண்ணகம் சென்றதும் அம்மகுடத்தை அவர்கள் அணிந்து கொள்ளலாம் என்றும் அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த புனித கர்த்தூசியன் சபைக் குருவின் காட்சியானது நமது மீட்பராம் சேசு கிறிஸ்துவின் அன்புக்குரிய சீடரின் திருவெளிப்பாடு காட்சிகளைப் போன்றே தோன்றுகிறது. எண்ணற்ற வானதூதர்களும் புனிதர்களும் நமதாண்டவர், இவ்வுலகின் மீட்பராம் சேசு கிருஸ்துவை, அவர் நமக்காக புரிந்த அனைத்து நன்மைகளுக்காகவும், பூவுலகில் நமது மீட்பிற்காக அவர் பட்ட பாடுகளுக்காகவும் வாழ்த்தி துதிப்பதை அவர் கண்டார். செபமாலை பக்தி சபையின் அங்கத்தினர் அனைவரும் இதனையன்றோ தினமும் தாங்கள் ஒப்புக்கொடுக்கும் ஒரு முழு செபமாலையின் வாயிலாக செய்து வருகின்றனர்???

நன்றி: புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட் எழுதிய ஜெபமாலையின் ரகசியம் என்ற நூலில் இருந்து ரோஜா மலர் 29 ஈடேற்றத்தின் வழியின் ஒரு பகுதி.

*சிந்தனை*

“இரட்சகருடைய மாதாவே!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...”

ஆதிப்பெற்றோரின் பாவத்தால் மனுக்குலத்திற்கு சாபம் வந்து சேர்ந்தது. சாவு, நரகம், நோக்காடு, சாத்தனின் அதிகாரம் தலை விரித்தாடியது. மனுக்குலத்தின் சர்வேசுரன் நம்மை அப்படியே விட்டு விடாமல் நமது மீட்பிற்காக, அவரை பல முறை மறுதலிக்கும், பின்பற்ற மறுக்கும் நமக்காக தானே மனித உரு எடுத்தார்.

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழி, பரிசுத்த கன்னி மாமரி.. இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் என்று திருவுளம் பற்றிய தாழ்ச்சியை எண்பித்த நமது தாய் மாமரி. இறைவனின் சித்தத்திற்கு சிரம் தாழ்ந்து தனது ஒப்புதல் அளித்த நமதன்னை.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களை அமல உற்பவியாய் படைத்து, நமது இணை இரட்சகியாய் அருள் வழங்கினார். தனது தூதர் வாயிலாக படைப்பின் ஆண்டவர் தந்தையாகிய பிதா “அருள் நிறைந்தவளே வாழ்க” என்றும், எலிசபெத்தம்மாள் வாயிலாக இஸ்பிரித்து சாந்துவானவர் “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே” என்றும் வாழ்த்தினார்கள்.

அன்னையின் செபமாலை சொல்லும் போது நாம் தமத்திருத்துவத்தை, அவர்களின் மகிமையை, பூவுலகின் படைப்புகளில் எல்லாம் சிறந்த நமதன்னையை பாவநிழல் படாமல் பாதுகாத்த, தனது உடன்படிக்கை பேழையை தன்னிடமே எடுத்துக்கொண்ட அவர்களின் சிறப்பை, அன்னைக்கு அவர்கள் அளித்த வாழ்த்தொலியை மீண்டும் மீண்டும் கூறி அவர்களையும் வாழ்த்துகின்றோம்...

“செபம் சொல்வோம், தினம் செபமாலை சொல்வோம், பாவத்திற்காக பரிகாரம் புரிவோம்”

இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!⁠⁠⁠⁠

No comments:

Post a Comment