அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்

சிறு குழந்தைகளின் கேள்விகள் விசித்திரமாக இருக்கலாம், ஆனால் விபரீதமானதல்ல. மாறாக வளர்ச்சியின் அறிகுறிகள். மூன்று வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் கேட்டுடான், " அப்பா,அது என்னது?. அது கழுகு. அதன் அப்பா,அம்மா எங்கே? . வீட்டில். வீடு எங்கே இருக்கிறது?. அந்த மலையில். அந்த மலைக்கு போவோமா? அப்பா சிரித்தார். இக்கேள்விகள் அக்குழந்தையின் அறிவு வளர்ச்சியின் அடையாளங்கள்.

சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வியும் (" மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" மத் 16:13);, காட்சியில் தோன்றிய ஆண்டவரிடம் சவுல் கேட்ட கேள்வியும்( "ஆண்டவரே நீர் யார்?" தி.பணி 9:5) இறை அறிவு பெருவதற்கான முயற்சிகள்.அதே வேளையில் இக் கேள்விக்கான பதில்கள் கடமையையும் பொருப்பையும் அவர்கள் மேல் சுமத்துகின்றன.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் புனித பவுலைப்போல கேள்வி கேட்கவும் புனித பேதுரு போல பதில் சொல்லவும் வேண்டும். வெறுமனே கேள்வி கேட்பவனாக மட்டுமிருந்தால், அது பொருப்பற்ற தன்மையின் அடையாளம். உங்கள் கேள்வியும் பதிலும் உங்கள் மேல் பெரும் பொருப்பினைக் கொண்டு வருகிறது. அந்தக் கேள்விக்குப் பின் பவுலடியார் எத்தகு ஆர்வத்தோடு கிறிஸ்துவுக்காகப் பணியாற்றினார் எனப் பாருங்கள். பேதுரு தன் பதிலுக்கு ஏற்ற பணியாற்றியதையும் நாம் அறிவோம். பங்குகளில் பலர் கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். புனிதர்கள் பேதுருவையும் பவுலையும் முன் நிறுத்துவோம். திருச்சபையில் நம் பங்களிப்பை வழங்குவோம். அருளோடு வாழ்வோம்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment