அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 20, 2017

பிற இனத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவரின் பையனை இயேசு குணமாக்கினார். மத் 8:5-13

பிற இனத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவரின் பையனை இயேசு குணமாக்கினார். மத் 8:5-13


அவர் கப்பர்நகூம் ஊருக்குள் போனபோது, நூற்றுவர்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து அவரை வேண்டி,
"ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்றான்.
இயேசு அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
நூற்றுவர்தலைவன் மறுமொழியாகக் கூறியதாவது: "ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்; என் ஊழியன் குணமடைவான்.
ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும், எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால் போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால் வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, 'இதைச் செய்' என்றால் செய்கிறான்."
இதைக் கேட்டு இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி, "இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து விண்ணரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் பந்தி அமர்வார்கள்.
அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.


பின்னர் இயேசு நூற்றுவர் தலைவனை நோக்கி, "நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" என்று சொன்னார். அந்நேரமே ஊழியன் குணமடைந்தான்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment