அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 19, 2017

உத்தரிக்கிற ஸ்தலம் - ஆண்டவரின் திருக்கரம் என் மீது பாரமாக உள்ளது

உத்தரிக்கிற ஸ்தலம்


என் மீது இரக்காமாயிருங்கள்  என் சகோதரர்களே, சகோதரிகளே நீங்களாவது என் மீது இரக்கமாயிருங்கள் ஏனெனில்  ஆண்டவரின் திருக்கரம் என் மீது பாரமாக உள்ளது

இதுதான் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்கள் பூலோகத்திலுள்ள தங்கள் உறவுகளை நோக்கி மிகக் கொடிய வேதனையோடு  அலறி சொல்கிற மனதுருகும் செபமாக இருக்கிறது  ஆனால் அநேகர் அவர்களுடைய அலறலுக்கு செவிமடுப்பதில்லை அவர்களுக்காக ஜெபிப்பது இல்லை

சில கத்தோலிக்கர்களும் மற்றபடி பக்தியுள்ளவர்களாய் இருப்பவர்களும் கூட இழிவான விதத்தில் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களை அசட்டை செய்வது புரிந்து கொள்ள முடியத புதிராக இருக்கிறது  இவர்களுக்கு உத்திரிக்கிற ஸ்தலம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதில் விசுவாசம் இல்லையோ என்று தோன்றுகிறது

தேவ சினேகத்தின் இந்த விசுவாச சத்தியத்தில் நாம் கொண்டுள்ள கருத்துக்கள் மிகத் தெளிவற்றவையாக இருக்கின்றன என்பதே நிச்சயம்

கத்தோலிக்கர்களாகிய ஒவ்வொருவரும் உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களுக்காக ஒரு திருப்பலி கூட ஒப்புக்கொடுக்காமல், நாட்களும், வாரங்களும், மாதங்களும், ஏன் வருடங்களும் கூட கடந்து போகின்றன, ஒரு சிலர்  அரிதாகவே அவர்களுக்காக பூசை காண்கிறார்கள் அரிதாகவே அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள், ஜெபமாலை சொல்கிறார்கள், இவர்கள் மட்டும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும்  உல்லாசத்தையும்  அனுபவித்துக் கொண்டு தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு  தங்கள் சந்தோசத்தில் மட்டுமே மூழ்கியிருக்க, உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்டுகிற பரிதாபமான ஆத்துமாக்களோ, தங்கள் அக்கினிப் படுக்கைகளின் மீது சொல்லொண்ணா வாதைகளோடு துன்பப்பட்டுக் கொண்டுருக்கிறார்கள் என்பதையும் அதில் நம்முடைய குடும்ப உறவுகளும் கூட உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது

இந்த அச்சத்திற்குறிய அக்கறையற்ற நிலைக்கு காரணம் என்ன ?  அறியாமை, அதாவது ஆழ்ந்த விளக்க முடியாத அறியாமை மட்டுமே காரணம்
உத்தரிக்கிற ஸ்தலம் எப்படிப்பட்டது என்று மக்கள் உணர்வதில்லை அதன் கொடிய வேதனைகளைப் பற்றி நம்மில் சிலருக்கு தெரியவில்லை அங்கே ஆத்துமாக்கள் இந்த அச்சத்துக்குரிய நெருப்பில் பல நீண்ட ஆண்டுகள் சிறை வைக்கபட்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியாமலிருக்கிறோம்  இதன் காரணமாக இந்த ஆண்மாக்களே தங்களையே இந்த உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து காத்துக்கொள்ள அபூர்வமாக முயற்சி எடுக்கிறார்கள் , நம்மில் பலர் இவர்களுக்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை  அவர்களுக்காக ஜெபிப்பதும் இல்லை

மரணத்திற்க்கு பிறகு ஒரு அக்கினிச் சிறைச்சாலை  உத்திரிக்கிற ஸ்தலம் ஏறக்குறைய எல்லா ஆத்துமங்களுமே அதில் தள்ளப்படுகிறார்கள், அங்கே அனைத்திலும் கொடிய வேதனைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள்

உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றித் திருச்சபையின் மாபெரும் வேதபாரகர்கள் நமக்குக் கூறும் காரியங்கள் இதோ :

இந்தக் கொடிய அச்சத்திற்க்குறிய அக்கினியில் இருக்கும் ஒரு நிமிடம்  ஒரு நூற்றாண்டு போல தோன்றும் அளவு அவர்களுடைய வேதனைகள் மிகக் கடுமைாக இருக்கும்

வேதபாரகர்களின் இளவரசராகிய புனித அக்குயினாஸ் தோமையார் , உத்தரிக்கிற ஸ்தலத்தின் அக்கினி , தன் கொடூர தன்மையில் நரக அக்கினிக்கு சமமாக இருக்கிறது என்கிறார். மேலும் அதை மிக லேசாகத் தொடுவதும் கூட  இந்த உலகில் சாத்தியமான சகல துன்பங்களையும் விட அதிக அச்சத்திற்குறியதாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்

பரிசுத்த வேதபாரகர்களில் தலைசிறந்தவரான புனித  அகுஸ்தீனார் , ஆத்துமங்கள் மோட்சத்திற்க்குள் அனுமதிக்கப்படுவதற்க்கு  முன்பாக தங்கள் பாவங்களிலிருந்து முழுமையாக சுத்திகரிக்கும்படி  இந்த உலகத்தில்  நாம் பார்க்கிற, உணர்கிற, அல்லது கற்பனை செய்கிற எந்த ஒரு நெருப்பையும் விட அதிகம் ஊடுருவுவதும்  அதிக பயங்கரமுள்ளதுமாகிய  ஒரு நெருப்பில் தள்ளப்படுவது தான் உத்திரிக்கிற ஸ்தலம் என்று கூறுகிறார்

இந்த நெருப்பு ஆத்துமத்தை சுத்திகரிக்கவும் பரிசுத்தபடுத்தவுமே  ஏற்படுத்தப்பட்டுள்ளது  என்றாலும் அப்போதும்  கூட பூலோகத்தில் நாம் அனுபவிக்க கூடிய எந்த வேதனையையும் விட அதிக கொடூரமான வேதனை தருவதாக  இந்த அக்கினி இருக்கிறது என்று இந்தப் பரிசுத்த வேதபாரகர் தொடர்ந்து கூறுகிறார்

புனித அலெக்ஸாந்திரியா சிரில்  உத்திரிக்கிற ஸ்தலத்தில் ஒரு நாளைக் கழிப்பதை விட  பொது தீர்வையின் நாள் வரைக்கும் உலகத்திலுள்ள எல்லா வாதைகளையும் அனுபவிப்பதை  நாம் தேர்ந்து கொள்ளலாம் என்று எந்த தயக்கமுமின்றி கூறுகிறார்

மற்றொரு புனிதர் ஒருவர் சொல்கிறார்  உத்திரிக்கற ஸ்தல நெருப்போடு  நம் பூலோகத்திலுள்ள நெருப்பை ஒப்பிடும் போது   நம் நெருப்பு  புத்துணர்ச்சி தரும் குளிர்ந்த காற்றை போல இருக்கிறது என்கிறார்

நாம் பூமியில் காணும் நெருப்பு நம் வசதிக்காகவும் , நன்மைக்காகவும், கடவுளின் நன்மைத்தனத்தால் உண்டாக்கப்பட்டது  ஆயினும் துன்புறுத்துவதற்க்காக பயன்படுத்தும் போது  நாம் கற்பனை செய்யக் கூடிய மிகக் கொடிய வாதையாக உத்தரிக்கிற ஸ்தலம்  இருக்கிறது

இதற்க்கு மாறாக உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு நம்மைத் தண்டிக்கவும் பரிசுத்தமாக்கவும் கடவுளின் நீதியால் உண்டாக்கப்பட்டது  ஆகவே அது ஒப்பற்ற விதமாக அதிக கடுமையானதாக இருக்கிறது

நம் பூலோக நெருப்பு அதிகபட்சமாக நம்முடைய இந்த ஒழுக்கங்கெட்ட மண்ணாலான உடலை மட்டுமே எரிக்கிறது ஆனால் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்போ அரூப வஸ்துவும் வாக்குக்கெட்டாத அளவுக்கு வேதனையை அதிகமாக உணரகூடியதுமான நம் ஆத்துமத்தின் மீது செயல்படுகிறது

நம் பூலோக நெருப்பு எவ்வளவு உக்கிறமானதாக இருக்கிறதோ அவ்வளவு வேகமாகஅது தன்னால் எரிக்கப்படும் ஆளை அல்லது பொருளைச் சாம்பலாக்கி விடும் ஆகவே அப்படி எரிக்கப்படுபவனின் துன்பம் அத்துடன் முடிந்து விடுகிறது  ஆனால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்போ மிகக் கூரிய , மிக கடுமையான வேதனையை தந்தாலும் அது ஒரு போதும் ஆத்துமத்தைக் கொல்வதில்லை அதன் உணரும் தன்மையைக் குறைப்பதுமில்லை

உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு தரும் வேதனையை விட உத்தரிக்கிற ஸ்தலத்தில்லுள்ள ஆத்துமங்களின இழப்பின் வேதனை அல்லது கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பதன் வேதனை மிக மிகக் கொடூரமானது சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஆத்துமம்  தன் ஞான சுபாவத்தின் முழுத் தீவிரத்தோடும் கடவுளுக்காக ஏங்குகிறது கடவுளிடம் பறந்து செல்லவேண்டும் என்ற ஒரு மிகத் தீவிரமான ஏக்கம் அதை எரிக்கிறது  ஆயினும் அது தடுத்து நிறுத்தபடுகிறது  இந்த நிறைவேறாத ஏக்கம் தருகிற கொடூர வேதனையை எந்த வார்த்தைகளைக் கொண்டும் விளக்க முடியாது விளக்க முடியாது

ஆகவே புத்தியும் அறிவுமுள்ள சிருஷ்டிகளாகிய மனிதர்கள் இத்தகைய பேரச்சத்திற்க்குறிய நிலையைத் தவிர்க்க சாத்தியமான ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காமல் அதை அலட்சியம் செய்வது எத்தகைய பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது

இது இப்படியெல்லாம் இருக்கமுடியாது இது எங்களுக்குப் புரியவில்லை இதைப்பற்றி நினைக்காமல் அல்லது பேசாமல் இருப்பதோ நல்லது என்றெல்லாம் சொல்வது முதிற்ச்சியற்ற குழந்தைதனமான செயல்  நாம் விசுவசிக்கிறோமே  இல்லையோ  உத்திரிக்கிற ஸ்தலத்து வேதனைகள் நாம் கற்பனை செய்யக் கூடிய எந்த வேதனைக்கும் அப்பார்பட்டவை என்ற உண்மை அதனால் ஒரு போதும் மாறிவிடாது இவை புனித அகுஸ்தீனாரின் வார்த்தைகள் ஆகும்

உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறது என்பது எவ்வளவு நிச்சயமாக இருக்கிறது என்றால் கத்தோலிக்கர்கள் யாரும் ஒரு போதும் அதைப் பற்றி சந்தேகப்பட்டதே இல்லை  அது திருச்சபையின் ஆதித் துவக்க நாட்களில் இருந்தே போதிக்கப்பட்டு வந்தது  விவிலியம் எங்கெல்லாம் போதிக்கப்பட்டதோ  அங்கெல்லாம் எந்த சந்தேகமும் இல்லாத விசுவாசத்தோடு இந்த சத்தியம் ஏற்றுக் கொள்ளப் பட்டது

இந்த போதகம் விவிலியத்தால் வெளிப்படுத்தப்பட்டு  பாரம்பரியத்தால் வழிவழியாகக் கையளிக்கப்பட்டு தவறாவரம் பெற்ற திருச்சபையால் போதிக்கப்பட்டு எல்லாக் காலங்களிலும் கோடான கோடி விசுவாசிகளால் விசுவசிக்கப்பட்டு வந்துள்ளது

இருந்தாலும் நாம் குறப்பிட்டுள்ளபடி இந்த மிக முக்கியமான காரியத்தில் அநேகருடைய கருத்துக்கள் மிக மேலோட்டமானவையாகவே இருக்கின்றன கண்களைக் கட்டிக் கொண்டு  வாயை அகலத் திறந்து கொண்டிருக்கிற பாதாளத்தின் விளிம்பில் வேண்டுமென்றே நடக்கிற மூட மனிதனுக்கு இவர்கள் ஒப்பாயிருக்கிறார்கள்

உத்தரிக்கிற ஸ்தலத்தில் நாம் இருக்க வேண்டிய காலத்தைக் குறைப்பதற்கு அல்லது அதை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து விடுவதற்க்கு மிகச் சிறந்த வழி அதைப் பற்றித் தெளிவான அறிவைக் கொண்டிருப்பதும் அதைப் பற்றி நன்கு தியானிப்பதும் அதைத் தவிர்க்க கடவுள் நமக்குத் தரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதுமே என்பதை அவர்கள் நினைவுகூர்வது நல்லது

அதைப் பற்றி நினைக்காதிருப்பது மரண ஆபத்துள்ளது  அது நமக்காக அச்சம் நிறைந்த  நீண்ட கொடூரமான உத்தரிக்கிற ஸ்தலத்தை நமக்கென ஆயத்தம் செய்வதே அன்றி வேறெதுவும் இல்லை

சில அரசியல் காரணங்களுக்காக தமது சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டருந்த போலந்து நாட்டு இளவரசர் ஒருவர்  பிரான்ஸ் நாட்டில் ஓர் அழகிய கோட்டையையும்  சொத்துக்களையும் வாங்கி அங்கே வசித்து வந்தார் 

துர்திருஷ்டவசமாக  அவர் தம் குழந்தைப் பருவ விசுவாசத்தை இழந்து போயிருந்தார்  நாம் சொல்லும் இந்த கதை நிகழ்ந்த காலத்தில் கடவுளுக்கு எதிராகவும்  இறப்பிற்கு பிந்தைய வாழ்வு பற்றிய சத்தியத்திற்கு எதிராகவும் அவர் புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தார் 

ஒரு நாள் மாலையில் அவர் தமது தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த போது  மனம் கசந்து அழுது கொண்டிருந்த ஓர் ஏழைப் பெண்ணை எதிர்கொண்டார் அவளுடைய துக்கத்திற்கான காரணத்தை அவர் அவளிடம் விசாரித்தார்

அந்த பெண் இளவரசரிடம் ஐயா நான் உம்முடைய முன்னால்  மேற்பார்வையாளராகிய ஷான் மரீயின் மனைவி  என் கணவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார்  அவர் எனக்கு நல்ல கணவராகவும்  தங்களுக்கு ஒரு உண்மையுள்ள ஊழியராகவும் இருந்தார் அவர் நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்தார்  நான் எங்கள் சேமிப்பு முழுவதையும் அவருக்கு மருத்துவம் பார்க்க செலவழித்து விட்டேன் இப்போது அவருடைய ஆத்துமத்திற்காக பூசைகள் ஒப்புக்கொடுக்க என்னிடம் பணம் ஏதும் இல்லை அதிகமாக திருப்பலி ஒப்புக் கொடுத்தால் தான் அவர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் மோட்சம் செல்வார் என்று அந்த பெண்  சொன்னார்

இளவரசர் அவள் துக்கத்தால் நெகிழ்ச்சியுற்றவராக  அவளுக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகள் கூறினார்  மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்வு இருப்பதில் கொஞ்சமும் விசுவாசம் அவரிடம் இல்லையென்றாலும்  அவள் கணவனிண் ஆத்துமத்திற்க்காக திருப்பலி ஒப்புக்கொடுக்க  உதவியாக சில தங்க நாணயங்களை அவளுக்கு வழங்கினார்

அவளும் சந்தோசமாக அதை பெற்று கொண்டு தன் கணவருக்காக  அதிக திருப்பலி ஒப்புக் கொடுத்தார் . 

சிறிது காலத்திற்க்கு பின் மீண்டும் ஒரு மாலை நேரம்  இளவரசர் தமது வாசக அறையில்  தமது புத்தகம் எழுதும் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார்  அப்போது கதவு பலமாகத்  தட்டப்படும் சத்தம் கேட்டு அவர தலை நிமிராமலையே வந்திருப்பவரை உள்ளே வரும்படி பணித்தார் கதவு மெதுவாகத் திறந்தது ஒரு மனிதர் உள்ளே நுழைந்து  இளவரசரின் முன்னால் வந்து நின்றார்

நிமிர்ந்து பார்த்த இளவரசர் அதிசயித்து போனார்  அங்கே இறந்து விட்ட அவருடைய மேற்பார்வையாளராகிய ஷான் மாரீ ஒரு இனிய புன்னகையோடு அவரை நோக்கியபடி நின்றார் நின்று கொண்டிருந்தார்

இளவரசரே என் ஆத்துமத்திற்க்காகப் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கும்படி  என் மனைவிக்கு நீர் செய்த உதவிக்காக உமக்கு நன்றி சொல்லிவிட்டுப் போக வந்தேன் எனக்காக ஒப்புக் கொடுக்கப்பட்ட கிறீஸ்து நாதரின் இரட்சிக்கிற திரு இரத்தத்தின் பலனாக ( திவ்ய கல்வாரிப்பலி )  நான் இப்போது மோட்சத்திற்க்கு சென்று கொண்டிருக்கிறேன்  ஆயினும் இங்கே வந்து உமது தாராளமுள்ள உதவிக்கு நன்றி சொல்ல  கடவுள் என்னை உம்மிடம் அனுப்பினார் என்று அவர் கூறினார் 

அதன் பின் அந்த மேற்பார்வையாளர் அழுத்தந்திருத்தமான முறையில்  இளவரசே  கடவுள் ஒருவர் இருக்கின்றார்  மறு ஜீவியம் இருக்கிறது  மோட்சம்  ஒன்று இருக்கிறது  நரகமும் இருக்கிறது  உத்தரிக்கிற ஸ்தலமும் இருக்கிறது  அதிலிருந்து ஒவ்வொருவரும் விடுதலை பெறவே இறைவன் அதிகமாக நம்மிடம் விரும்புவது  அதிக திருப்பலி ஒப்புக் கொடுப்பது  மேலும் தினமும்  ஜெபமாலை தியானிப்பது , தின ஜெபம்  மேலும் பரிகாரம்  என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார் 

இளவரசர் முழங்கால்களில் நின்று மனதுருக்கத்தோடு  பரலேகத்தையும்  பூலோகத்தையும்  படைத்த எல்லாம் வல்ல பிதவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன் என்று ஜெபிக்க ஆரம்பித்தார் அன்றிலிருந்து அதிகமாக உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அதிக கல்வாரி திருப்பலி ஒப்புக் கொடுத்தார்  அதிகமாக ஜெபமாலை  தியானித்தார்  தினமும் அதிகம் ஜெபித்தார்  அதிகம் பரிகாரங்கள் புரிந்தார்

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் சிறை வைக்கப் பட்டிருக்கிற காலத்தின் அளவு பின் வரும் காலத்தை பொருத்ததாக இருக்கிறது

அ. அவர்களுடைய பாவங்களின் எண்ணிக்கை

ஆ. பாவங்களின் கனாகனம் ( கொடூரம் )  மற்றும் அவை வேண்டுமென்றே கட்டுக்கொள்ளப் பட்டனவா என்பது

இ. வாழும் காலத்தில் பாவங்களுக்குப் பரிகாரமாக செய்யப்பட்ட  அல்லது செய்யப்படாத தவ முயற்சிகள் செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத பாவப்பரிகாரம்

ஈ. மரணத்திற்குப் பிறகு அவர்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படும் பரிகார செயல்களையும் இது அதிகமாக சார்ந்துள்ளது

மனிதர்கள் சாதாரணமாக கற்பனை செய்வதை விட ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கழிக்கும் காலம் மிக நீ்ண்டதாக இருக்கிறது என்று நாம் உறுதியாக சொல்லாம்

புனிதர்களின் சரித்திரங்களிலும் அவர்களுடைய வெளிப்பாடுகளிலும் விவரிக்கப்படுகிற அநேக சம்பவங்களில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்

புனித லூயிஸ் பெர்ட்ராட்டின் தந்தை நாம் இயல்பாகவே எதிர்பார்ப்பது போல ஒரு உத்தம கிறிஸ்தவராக இருந்தார் ஏனெனில் இவ்வளவு மேலானவரான ஓர் புனிதரின் தந்தையாக அவர் இருந்தார் அவரே கூட ஒரு கர்த்தூசியத் துறவியாக வேண்டும் என்று விரும்பினார் ஆனால் பின்னர் அது கடவுளின் சித்தம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்

அவர் பல நீண்ட ஆண்டுகளை எல்லா விதமான கிறீஸ்தவப் புண்ணியங்களையும் அனுசரிப்பதில் கலித்த பிறகு பரிசுத்தமாக மரித்தார் அவருடைய புனித மகன் கடவுளின் தீர்வையின் அகோரத்தை முற்றிலும் அறிந்தவராக தாம் வெகுவாக நேசித்த தந்தைக்காக அநேக திருப்பலிகளை ஒப்புக்கொடுத்ததோடு தொடர்ந்து மிகுந்த பக்தி உருக்கமுள்ள மன்றாட்டுக்களையும் அவருக்காக ஒப்புக்கொடுத்தார்

ஆனால் தம் தந்தை இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பதை ஒரு காட்சியில் கண்ட புனிதர் தமது பரிகார செயல்களை நூறு மடங்காக அதிகரித்தார்  அதிக திருப்பலிகளையும், ஜெபங்களோடும்  ஜெபமாலையும்  மிக கடுமையான தவ முயற்சிகளையும் நீண்ட உபவாசங்களையும் தந்தைக்காக ஒப்புக் கொடுத்தார்  ஆனாலும் தம் தந்தையை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து விடுவிப்பதற்க்கு அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆயின

சிந்தனை

நாமும் நம் குடும்பதில் அன்பான உறவுகளை இழந்திருப்போம் அவர்கள் ஆத்துமத்துக்காக  நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் இனி என்ன செய்யப் போகிறோம்  சிந்திப்போம்



இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க

No comments:

Post a Comment