சிவகங்கை மறைமாவட்டம் என்பது சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
பரப்பளவு : 10,448 கிமீ 2 (4 சதுர மைல்)
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : அலங்கார அன்னை கதீட்ரல்
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † சூசை மாணிக்கம்
17ஆம் நூற்றாண்டில் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித அருளானந்தர், இயேசு சபை மறைபரப்பு பணியாளராக சிவகங்கை பகுதிக்கு வந்து ஆலயங்களை நிறுவினார். அவர் 1693 பிப்ரவரி 4ந்தேதி, ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார்.
ஜூலை 25, 1987: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டின்படி, 62 பங்கு தளங்கள் உள்ளன.
சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (1987 - 2005)
ஆயர் ஜெபமாலை சூசை மாணிக்கம் (2005 - இதுவரை)
No comments:
Post a Comment