விலைமகளுக்கொத்த எருசலேமின் வாழ்க்கை !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
இஸ்ரயேல் மக்கள் தங்களை விடுவித்து, புது வாழ்வு தந்த யாவே இறைவனை மறந்து, சிலை வழிபாட்டிலும், தீய பாவங்களிலும் ஈடுபட்டதை “விலைமகள் வாழ்க்கை” என்று வர்ணிக்கிறார் எசேக்கியேல். இந்த அதிகாரம் முழுவதும் இஸ்ரயேல் நாட்டின் கடந்த காலமும், அதன் தற்கால நிலையும் முரண்படுத்திக் காட்டப்படுகின்றன. iவிடப்பட்ட குழந்தை போல இரத்தத்தில் புரண்ட இஸ்ரயேலை இறைவன் பரிவுடன் கண்ணோக்கி, எடுத்து வளர்த்தார். அழகுபடுத்தினார். உயர்த்திப் பெருமைப்படுத்தினார். ஆனால், கடந்த காலத்தை மறந்த அவர்கள், இறைவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையை உதறித் தள்ளினார்கள். பிற நாடுகளுடன் உறவுகொண்டார்கள். பிற தெய்வங்களுக்கு வழிபாடு செய்தார்கள். ஒழுக்கமற்ற வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். எனவே, இறைவன் அவர்களைக் கைவிட்டார். அவர்களும் அழிவுக்கும், நாடு கடத்தப்படுதலுக்கும் உள்ளானார்கள். கடந்த கால வரலாற்றை மறப்பவர் எவரும் கடந்த காலத் தவறுகளைச் செய்யும் சூழலுக்கு உள்ளாவார்கள் என்னும் வரலாற்றுப் பொன்மொழியை நாம் மறத்தலாகாது.
மன்றாடுவோம்: காலம் கடந்த கடவுளே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எருசலேம் நகர் போலவே நாங்களும் கடந்த காலத்தில் நீர் எங்களுக்குச் செய்த அனைத்து நன்மைத்தனங்களையும் மறந்து, உம்மைவிட்டுப் பிரிந்து பாவ வாழ்வு வாழ்கிறோம். எங்களை மன்னியும். மீண்டும் உமது உடன்படிக்கையில் எங்களை இணைத்தருள வேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா
மண வாழ்வின் சவால்கள் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
திருமண வாழ்வின் சிக்கல்களும், சவால்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எனவே, மண முறிவு பெறுவோரின், மணவாழ்வில் மனநிறைவற்றோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. திருமண வாழ்வு என்பது மிகப் பெரிய சவால் என்பதை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். அந்த சவாலை நன்கு சந்தித்து, வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெறுவதே மனித வாழ்வின் இலக்கு. கணவனும், மனைவியும் திருவருள்சாதனத்தால் இணைந்தபிறகு, இறப்பு மட்டுமே அவர்களைப் பிரிக்க முடியும். வேறு எந்த சக்தியும் அவர்களைத் தடுக்காது.
ஆனால், இன்று கருத்து வேறுபாடுகள், பொருளாதாரச் சிக்கல்கள், பெண் சமத்துவ உணர்வு, ஆணாதிக்க எதிர்ப்பு, என்று பல்வேறு விதங்களில் மணவாழ்வுக்கு சவால்கள் வருகின்றன.அடிப்படையில், கணவனும், மனைவியும் நல்ல நண்பர்களாக, சமத்துவம் பேணுபவர்களாக, ஒருவர் மற்றவரின் தேவைகளையும், உணர்வுகளையும் மதிப்பவர்களாக வாழ்வதே மணவாழ்வின் வெற்றியின் இரகசியம்.
இதற்கான அருளை இறைவன் தருகின்றார். எனவே, அந்த அருள் வேண்டி குடும்பமாக நாள்தோறும் இறைவேண்டல் செய்யும் தம்பதியினர் என்றும் இணைபிரியாது வாழ்வர்.
மன்றாடுவோம்; குடும்பங்களின் தந்தையே இறைவா, அனைத்துக் குடும்பங்களுக்காகவும் இன்று உம்மைப் போற்றுகிறேன். நன்றி செலுத்துகிறேன். நீரே மானிடரை ஆணும், பெண்ணுமாகப் படைத்து, கணவன் மனைவியாக இணைத்திருக்கின்றீர். அவர்களின் மணவாழ்வு வெற்றி பெற உமது அருளை, ஆசியை நிறைவாகப் பொழிந்தருளும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருட்தந்தை குமார்ராஜா
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
இஸ்ரயேல் மக்கள் தங்களை விடுவித்து, புது வாழ்வு தந்த யாவே இறைவனை மறந்து, சிலை வழிபாட்டிலும், தீய பாவங்களிலும் ஈடுபட்டதை “விலைமகள் வாழ்க்கை” என்று வர்ணிக்கிறார் எசேக்கியேல். இந்த அதிகாரம் முழுவதும் இஸ்ரயேல் நாட்டின் கடந்த காலமும், அதன் தற்கால நிலையும் முரண்படுத்திக் காட்டப்படுகின்றன. iவிடப்பட்ட குழந்தை போல இரத்தத்தில் புரண்ட இஸ்ரயேலை இறைவன் பரிவுடன் கண்ணோக்கி, எடுத்து வளர்த்தார். அழகுபடுத்தினார். உயர்த்திப் பெருமைப்படுத்தினார். ஆனால், கடந்த காலத்தை மறந்த அவர்கள், இறைவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையை உதறித் தள்ளினார்கள். பிற நாடுகளுடன் உறவுகொண்டார்கள். பிற தெய்வங்களுக்கு வழிபாடு செய்தார்கள். ஒழுக்கமற்ற வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். எனவே, இறைவன் அவர்களைக் கைவிட்டார். அவர்களும் அழிவுக்கும், நாடு கடத்தப்படுதலுக்கும் உள்ளானார்கள். கடந்த கால வரலாற்றை மறப்பவர் எவரும் கடந்த காலத் தவறுகளைச் செய்யும் சூழலுக்கு உள்ளாவார்கள் என்னும் வரலாற்றுப் பொன்மொழியை நாம் மறத்தலாகாது.
மன்றாடுவோம்: காலம் கடந்த கடவுளே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எருசலேம் நகர் போலவே நாங்களும் கடந்த காலத்தில் நீர் எங்களுக்குச் செய்த அனைத்து நன்மைத்தனங்களையும் மறந்து, உம்மைவிட்டுப் பிரிந்து பாவ வாழ்வு வாழ்கிறோம். எங்களை மன்னியும். மீண்டும் உமது உடன்படிக்கையில் எங்களை இணைத்தருள வேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா
மண வாழ்வின் சவால்கள் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
திருமண வாழ்வின் சிக்கல்களும், சவால்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எனவே, மண முறிவு பெறுவோரின், மணவாழ்வில் மனநிறைவற்றோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. திருமண வாழ்வு என்பது மிகப் பெரிய சவால் என்பதை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். அந்த சவாலை நன்கு சந்தித்து, வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெறுவதே மனித வாழ்வின் இலக்கு. கணவனும், மனைவியும் திருவருள்சாதனத்தால் இணைந்தபிறகு, இறப்பு மட்டுமே அவர்களைப் பிரிக்க முடியும். வேறு எந்த சக்தியும் அவர்களைத் தடுக்காது.
ஆனால், இன்று கருத்து வேறுபாடுகள், பொருளாதாரச் சிக்கல்கள், பெண் சமத்துவ உணர்வு, ஆணாதிக்க எதிர்ப்பு, என்று பல்வேறு விதங்களில் மணவாழ்வுக்கு சவால்கள் வருகின்றன.அடிப்படையில், கணவனும், மனைவியும் நல்ல நண்பர்களாக, சமத்துவம் பேணுபவர்களாக, ஒருவர் மற்றவரின் தேவைகளையும், உணர்வுகளையும் மதிப்பவர்களாக வாழ்வதே மணவாழ்வின் வெற்றியின் இரகசியம்.
இதற்கான அருளை இறைவன் தருகின்றார். எனவே, அந்த அருள் வேண்டி குடும்பமாக நாள்தோறும் இறைவேண்டல் செய்யும் தம்பதியினர் என்றும் இணைபிரியாது வாழ்வர்.
மன்றாடுவோம்; குடும்பங்களின் தந்தையே இறைவா, அனைத்துக் குடும்பங்களுக்காகவும் இன்று உம்மைப் போற்றுகிறேன். நன்றி செலுத்துகிறேன். நீரே மானிடரை ஆணும், பெண்ணுமாகப் படைத்து, கணவன் மனைவியாக இணைத்திருக்கின்றீர். அவர்களின் மணவாழ்வு வெற்றி பெற உமது அருளை, ஆசியை நிறைவாகப் பொழிந்தருளும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருட்தந்தை குமார்ராஜா
No comments:
Post a Comment