உங்களில் தலைவராக இருப்பவர் தொண்டராக இருக்கட்டும்.
சோவியத் ஒன்றியத்தின் தந்தையாக அறியப்படக்கூடியவர் லெனின் அவர்கள். ரஷ்யாவை பல ஆண்டுகளாக ஆட்சிசெய்துகொண்டிருந்த கொடுங்கோலனாகிய ஜார் மன்னருடைய ஆட்சியிருந்து மக்களை மீட்டெடுத்த புரட்சித் தலைவன்.
ரஷ்யா கொடுங்கோலனின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த பிறகு, மக்கள் அனைவரும் லெனினை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம், “எங்கள் தந்தையே! இந்த நாட்டில் இருக்கக்கூடிய மாட மாளிகை, கோபுரங்கள், எல்லாம் உமக்கே சொந்தம். நீங்கள் இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்துகொண்டே எங்களை ஆட்சி செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் அவரோ, “எனக்கு மாட மளிகை, கோபுரங்கள் எதுவும் வேண்டாம், ஒரு சாதாரண குடும்பம் வசிக்கக்கூடிய அளவிலான சிறிய வீடு மட்டும் போதும்” என்று சொல்லி அதிலே தன்னுடைய கடைசிகாலம் மட்டும் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.
ஆட்சி, அதிகாரம், பணபலம் என்று வாழக்கூடிய தலைவர்களுக்கு மத்தியிலே சாதாரண, எளிய வாழ்க்கை வாழ்ந்து, மக்களுக்குச் சேவை செய்த லெனின் ஒரு மக்கள் பணியாளன் – தலைவன் – எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை குறித்துப் பேசுகிறார். “உங்களில் தலைவனாக இருப்பவன் தொண்டனாக இருக்கவேண்டும்” என்பதே இயேசுவின் போதனையாக இருக்கிறது. இயேசு இதனை வெறுமனே போதித்ததோடு நின்றுவிடாமல் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டினார். “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும், பலருடைய மீட்புக்காக தன்னுடைய உயிரையும் கொடுக்கவந்தேன்” என்று சொல்லி இயேசு மக்களுக்கு பணிசெய்து வந்தார். ஏன் சீடர்களுடைய பாதங்களைக்கூட கழுவினார்.
இயேசுவின் சீடர்களாக, அவருடைய அடிசுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்களாக இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இயேசுவிடம் விளங்கிய பணிவிடை செய்யும் மனநிலையைப் பெற்று வாழ அழைக்கப்படுகிறோம்.
இன்று நிர்வாகவியலில், ஏன் ஆட்சிமன்றங்களில்கூட தலைமைத்துவம் குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது. இதிலிருந்தே தலைமைத்துவம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். வெ.இறையன்பு தன்னுடைய ‘வையத் தலைமைகொள்’ என்ற புத்தகத்திலே மூன்று விதமான தலைவர்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுவார். முதலாவது வகையினர் தனக்குக் கீழே இருக்கக்கூடிய பணியாளர்களை மிரட்டி, மிரட்டி வேலை வாங்கக்கூடியவர்கள். இவர்களது காலத்தில் நிர்வாகம் முயல் வேகத்தில் வேகமாகப் போகும். ஆனால் இவர்கள் பொறுப்பிலிருந்து வெளியேறிய உடனே நிர்வாகம் படுத்துக்கொள்ளும்.
இரண்டாவது வகையினர் எல்லாரிடமும் சிரித்து, சிரித்து வேலை வாங்குவர். இவர்களுடைய நோக்கமெல்லாம் யாரையும் பகைத்து கொள்ளக்கூடாது, எல்லாரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்பதாகத் தான் இருக்கும். இவ்வகை நிர்வாகத்தை நடத்துவோர் ஆட்சிக்காலத்திலே செயலிழந்து போவர். ஆனால் மூன்றாவது வகையினர் சாட்டை எடுக்கவேண்டிய நேரத்தில் சாட்டை எடுப்பர். தட்டிக்கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கொடுத்து, எல்லாரிடமும் அன்பாய் பழகி, அவர்களது பணிகளைப் பகிர்ந்து நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவர். இவ்வகை நிர்வாகவே என்றென்றைக்கும் சிறப்பாகச் செயல்படும்.
ஆண்டவர் இயேசுகூட தலைவன் தொண்டனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். ஆகையால் பணிவிடை செய்யும் – தொண்டு ஏற்கும் – மக்களாவோம். தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்வோம். இறையருள் பெறுவோம்.
Fr Palay Maria Antony, Palayamkottai.
சோவியத் ஒன்றியத்தின் தந்தையாக அறியப்படக்கூடியவர் லெனின் அவர்கள். ரஷ்யாவை பல ஆண்டுகளாக ஆட்சிசெய்துகொண்டிருந்த கொடுங்கோலனாகிய ஜார் மன்னருடைய ஆட்சியிருந்து மக்களை மீட்டெடுத்த புரட்சித் தலைவன்.
ரஷ்யா கொடுங்கோலனின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த பிறகு, மக்கள் அனைவரும் லெனினை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம், “எங்கள் தந்தையே! இந்த நாட்டில் இருக்கக்கூடிய மாட மாளிகை, கோபுரங்கள், எல்லாம் உமக்கே சொந்தம். நீங்கள் இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்துகொண்டே எங்களை ஆட்சி செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் அவரோ, “எனக்கு மாட மளிகை, கோபுரங்கள் எதுவும் வேண்டாம், ஒரு சாதாரண குடும்பம் வசிக்கக்கூடிய அளவிலான சிறிய வீடு மட்டும் போதும்” என்று சொல்லி அதிலே தன்னுடைய கடைசிகாலம் மட்டும் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.
ஆட்சி, அதிகாரம், பணபலம் என்று வாழக்கூடிய தலைவர்களுக்கு மத்தியிலே சாதாரண, எளிய வாழ்க்கை வாழ்ந்து, மக்களுக்குச் சேவை செய்த லெனின் ஒரு மக்கள் பணியாளன் – தலைவன் – எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை குறித்துப் பேசுகிறார். “உங்களில் தலைவனாக இருப்பவன் தொண்டனாக இருக்கவேண்டும்” என்பதே இயேசுவின் போதனையாக இருக்கிறது. இயேசு இதனை வெறுமனே போதித்ததோடு நின்றுவிடாமல் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டினார். “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும், பலருடைய மீட்புக்காக தன்னுடைய உயிரையும் கொடுக்கவந்தேன்” என்று சொல்லி இயேசு மக்களுக்கு பணிசெய்து வந்தார். ஏன் சீடர்களுடைய பாதங்களைக்கூட கழுவினார்.
இயேசுவின் சீடர்களாக, அவருடைய அடிசுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்களாக இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இயேசுவிடம் விளங்கிய பணிவிடை செய்யும் மனநிலையைப் பெற்று வாழ அழைக்கப்படுகிறோம்.
இன்று நிர்வாகவியலில், ஏன் ஆட்சிமன்றங்களில்கூட தலைமைத்துவம் குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது. இதிலிருந்தே தலைமைத்துவம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். வெ.இறையன்பு தன்னுடைய ‘வையத் தலைமைகொள்’ என்ற புத்தகத்திலே மூன்று விதமான தலைவர்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுவார். முதலாவது வகையினர் தனக்குக் கீழே இருக்கக்கூடிய பணியாளர்களை மிரட்டி, மிரட்டி வேலை வாங்கக்கூடியவர்கள். இவர்களது காலத்தில் நிர்வாகம் முயல் வேகத்தில் வேகமாகப் போகும். ஆனால் இவர்கள் பொறுப்பிலிருந்து வெளியேறிய உடனே நிர்வாகம் படுத்துக்கொள்ளும்.
இரண்டாவது வகையினர் எல்லாரிடமும் சிரித்து, சிரித்து வேலை வாங்குவர். இவர்களுடைய நோக்கமெல்லாம் யாரையும் பகைத்து கொள்ளக்கூடாது, எல்லாரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்பதாகத் தான் இருக்கும். இவ்வகை நிர்வாகத்தை நடத்துவோர் ஆட்சிக்காலத்திலே செயலிழந்து போவர். ஆனால் மூன்றாவது வகையினர் சாட்டை எடுக்கவேண்டிய நேரத்தில் சாட்டை எடுப்பர். தட்டிக்கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கொடுத்து, எல்லாரிடமும் அன்பாய் பழகி, அவர்களது பணிகளைப் பகிர்ந்து நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவர். இவ்வகை நிர்வாகவே என்றென்றைக்கும் சிறப்பாகச் செயல்படும்.
ஆண்டவர் இயேசுகூட தலைவன் தொண்டனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். ஆகையால் பணிவிடை செய்யும் – தொண்டு ஏற்கும் – மக்களாவோம். தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்வோம். இறையருள் பெறுவோம்.
Fr Palay Maria Antony, Palayamkottai.
No comments:
Post a Comment