அருள்பணியாளரின் பணி
யோசு 3:7-11, 13-17 யோசுவா நிகழ்வுகள் தொடங்குகின்றன.
'நான் மோசேயுடன் இருந்ததுபோலவே உன்னுடனும் இருப்பேன்' என மொழிகின்ற கடவுள், தன் பிரசன்னத்தை அப்படியே உறுதி செய்கின்றார். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்ததுபோல யோசுவாவின் தலைமையில் யோர்தான் நதியைக் கடக்கின்றனர்.
ஆனால், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
அங்கே மோசே தானே தன் கைகளால் செங்கடலைப் பிரித்தார்.
இங்கே யோசுவாவிற்கு குருக்களின் துணை தேவைப்படுகிறது.
(குருக்களின் அதிகாரம் மேலோங்கி இருந்த காலத்தில் ஒருவேளை இந்த இறைவாக்குப் பகுதி எழுதப்பட்டிருக்கலாம்)
ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் ஏறக்குறைய 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பேழையின் ஊடாகக் கடந்து போகும் வரை குருக்கள் உடன்படிக்கை பேழையை ஏந்தியவர்களாக தண்ணீருக்குள் நிற்கின்றனர்.
தனக்கு கால் நனைந்தாலும் பிறரின் கால் நனையாமல் அக்கரைக்கு அவர்களைக் கடத்துவதே அருள்பணியாளரின் பணி.
Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai. +91 948 948 21 21
யோசு 3:7-11, 13-17 யோசுவா நிகழ்வுகள் தொடங்குகின்றன.
'நான் மோசேயுடன் இருந்ததுபோலவே உன்னுடனும் இருப்பேன்' என மொழிகின்ற கடவுள், தன் பிரசன்னத்தை அப்படியே உறுதி செய்கின்றார். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்ததுபோல யோசுவாவின் தலைமையில் யோர்தான் நதியைக் கடக்கின்றனர்.
ஆனால், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
அங்கே மோசே தானே தன் கைகளால் செங்கடலைப் பிரித்தார்.
இங்கே யோசுவாவிற்கு குருக்களின் துணை தேவைப்படுகிறது.
(குருக்களின் அதிகாரம் மேலோங்கி இருந்த காலத்தில் ஒருவேளை இந்த இறைவாக்குப் பகுதி எழுதப்பட்டிருக்கலாம்)
ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் ஏறக்குறைய 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பேழையின் ஊடாகக் கடந்து போகும் வரை குருக்கள் உடன்படிக்கை பேழையை ஏந்தியவர்களாக தண்ணீருக்குள் நிற்கின்றனர்.
தனக்கு கால் நனைந்தாலும் பிறரின் கால் நனையாமல் அக்கரைக்கு அவர்களைக் கடத்துவதே அருள்பணியாளரின் பணி.
Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai. +91 948 948 21 21
No comments:
Post a Comment