அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' (மத்தேயு 25:35)

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' (மத்தேயு 25:35)

மத்தேயு நற்செய்தியின் இறுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பகுதி உள்ளது (காண்க: மத் 25:31-46). மானிட மகன் ''எல்லா மக்களினத்தாருக்கும்'' இறுதித் தீர்ப்பு வழங்க வருவார். அப்போது தம் வலப்பக்கத்தில் நிறுத்தப்பட்ட நல்லவர்களைப் பார்த்து அவர், ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' என்று கூறுவார். ஆனால், இடப்பக்கத்தில் உள்ள கெட்டோரைப் பார்த்து, ''நான் பசியாய் இருந்தேன், ஆனால் நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை'' என்பார். நேரடியாக இயேசுவுக்கு உணவு கொடுத்தோம் அல்லது உணவு கொடுக்கவில்லை என்பதல்ல இங்கே குறிக்கப்படும் பொருள். மாறாக, ''மிகச் சிறிய சகோதரர் சகோதரிகளுக்கு எதைச் செய்தோமோ அதை இயேசுவுக்கே செய்தோம்'' (காண்க: மத் 25:40,45).

இங்கே ''சகோதரர் சகோதரிகள்'' எனக் குறிக்கப்படுவோர் ''கிறிஸ்தவர்'' என்றொரு விளக்கம் உண்டு (காண்க: மத் 10:40-42). இருப்பினும், பசி, தாகம், அன்னியராயிருத்தல், ஆடையின்மை, நோய், சிறைப்படல் போன்ற இன்னல்களில் உழல்வோர் யாராயிருந்தாலும் அவர்கள் இயேசுவின் ''சகோதரர் சகோதரிகள்'' ஆவர் என்பதும் உண்மையே. ஆக, கடவுளன்பும் பிறரன்பும் இங்கே இணைவதைப் பார்க்கிறோம். இயேசு அளித்த அன்புக் கட்டளையும் இந்த இரு பரிமாணங்களையும் உள்ளடக்கியதே (காண்க: மத் 22:34-40). எந்த வித இன்னல்களுக்கும் உட்பட்ட மனிதருக்கு நாம் உதவும்போது இயேசுவுக்கே உதவுகிறோம்; மாறாக, பிறருக்கு உதவ நாம் மறுக்கும்போது இயேசுவுக்கே உதவ மறுக்கிறோம். மக்களினத்தாருக்குத் தீர்ப்பு வழங்கப்படுவது பற்றி இயேசு போதித்த காலத்தில் மக்களுக்கு இருந்த தேவைகள் இன்றும் தொடர்ந்து நிலவுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் இல்லாதோர் இன்றும் ஆயிரக் கணக்கில் உண்டு. இயற்கைச் சீற்றம், போர் போன்ற பேரிடர்கள் காரணமாக அகதிகள் ஆவோர் உண்டு; அநீதியாக ஒடுக்கப்படுவோர் உண்டு; சமூக அமைப்புகளால் அடிமைகள் போல நடத்தப்படுவோர் உண்டு. இவர்களுக்கெல்லாம் நாம் அளிக்கின்ற உதவி என்ன? பிறரன்பு என்பது குறிப்பாக ஏழை எளியோர் மட்டில் காண்பிக்கப்பட வேண்டும் என்னும் இயேசுவின் போதனையை நாம் கடைப்பிடித்தால் இறுதி நாளில் நமக்கு வழங்கப்படும் தீர்ப்பு நல்லதாக அமையும்: ''நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறச் செல்வார்கள்'' (காண்க: மத் 25:46).⁠⁠⁠⁠

No comments:

Post a Comment