"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?"-
"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்பது கேள்வி அல்ல. அது பதில். எதுவுமே வராது என்பதுதான் அதில் அடங்கியிருப்பது. இந்த மாதிரி கேள்விகளில் பதிலை உள்ளடக்கி பேசும்போது அந்த நகரை, ஆட்களை, நிகழ்ச்சிகளை அலட்ச்சியப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் இயேசு இவ்வாறு அலட்ச்சியப்படுத்தப்படும் அல்லது அவமானப்படுத்தப்படும் ஊர்களையும் மனிதர்களையும் உயர்த்துகிறார், மேன்மைப்படுத்துகிறார். கர்வம் கொண்ட மனிதரையும் நகர்களையும் தரை மட்டும் தாழ்த்துகிறார். "பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!" (மீக்கா 5 :2) இவ்வாறு பெத்லகேம் கணிக்கப்பட்டது. ஆனால் இயேசு தன் பிறப்பால், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை"(மத் 2'6); என்று உயர்த்தினார். நம் அன்;னை மரியாள் அறிமுகம் இல்லாது தாழ்நிலை நின்ற தன்னை எல்லாத் தலைமுறையும் போற்று பேருடையாள் என உயர்த்திதை மறக்க முடியாது.
இவ்வாறு இறை வல்லமையால் சிறியதும் தாழ்ந்தவைகளும் அற்பமானதும் உயர்த்தப்படும்போது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற ஐயத்திற்கு இடமே இல்லை. அதுபோல நாமும் முகவரி இல்லாதவர்களாக இருந்தாலும் இறை அருளோடு ஒத்துழைத்தால் பெரியவற்றைச் சாதிக்க முடியும்.
மன்றாட்டு:
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எந்த மனிதரையும் ஊரின், சாதியின், சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உமது சாயலாகப் பார்க்கின்ற புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்பது கேள்வி அல்ல. அது பதில். எதுவுமே வராது என்பதுதான் அதில் அடங்கியிருப்பது. இந்த மாதிரி கேள்விகளில் பதிலை உள்ளடக்கி பேசும்போது அந்த நகரை, ஆட்களை, நிகழ்ச்சிகளை அலட்ச்சியப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் இயேசு இவ்வாறு அலட்ச்சியப்படுத்தப்படும் அல்லது அவமானப்படுத்தப்படும் ஊர்களையும் மனிதர்களையும் உயர்த்துகிறார், மேன்மைப்படுத்துகிறார். கர்வம் கொண்ட மனிதரையும் நகர்களையும் தரை மட்டும் தாழ்த்துகிறார். "பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!" (மீக்கா 5 :2) இவ்வாறு பெத்லகேம் கணிக்கப்பட்டது. ஆனால் இயேசு தன் பிறப்பால், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை"(மத் 2'6); என்று உயர்த்தினார். நம் அன்;னை மரியாள் அறிமுகம் இல்லாது தாழ்நிலை நின்ற தன்னை எல்லாத் தலைமுறையும் போற்று பேருடையாள் என உயர்த்திதை மறக்க முடியாது.
இவ்வாறு இறை வல்லமையால் சிறியதும் தாழ்ந்தவைகளும் அற்பமானதும் உயர்த்தப்படும்போது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற ஐயத்திற்கு இடமே இல்லை. அதுபோல நாமும் முகவரி இல்லாதவர்களாக இருந்தாலும் இறை அருளோடு ஒத்துழைத்தால் பெரியவற்றைச் சாதிக்க முடியும்.
மன்றாட்டு:
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எந்த மனிதரையும் ஊரின், சாதியின், சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உமது சாயலாகப் பார்க்கின்ற புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
No comments:
Post a Comment