அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 23, 2020

இயேசுவின் திரு இருதய பக்தி

Sacred Heartதிரு இருதய ஆண்டவரின் வாக்குறுதிகள்:
திரு இருதய ஆண்டவர் தூய மார்கரெட் மரியா வழியாக தம் பக்தர்களுக்கு அளித்த 12 சிறப்பான வாக்குறதிகள்:

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்.
4. வாழ்விலும், சிறப்பாக வாழ்வின் இறுதி வேளையில் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாக இருப்போம்.
5. அவர்கள் முயற்சிகள் வெற்றி பெறத் ஏரளாமான அருளைப் பொழிவோம்.
6. எமது இருதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும், கரை காணாத அன்புக் கடலுமாக இருக்கும்.
7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.
8. பக்தியுள்ளோர் தூய நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.
9. எந்த வீட்டில் நம் திரு இருதயப் படத்தை நிறுவி ஆராதிப்பார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.
10. கல் நெஞ்சப் பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.
11. திரு இருதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் எம் இருதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.
12. தொடர்ந்து ஒன்பது முதல் வெள்ளிக்கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன் மரணம் அடைவர். அவர்கள் எம் பகைவராகவோ, திரு அருள் அடையாளங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.

திரு இருதய அரசை நிறுவும் சடங்குமுறை:
(குடும்பத்தார் அனைவரும் முழுந்தாளில் இருக்க அருள் பணியாளர் திரு இருதயப்படத்தை அல்லது திரு உருவத்தை ஆசீர்வதிப்பார்)

அப: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
மக்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப: செபிப்போமாக! என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் உருவத்தையோ, படத்தையோ வடிவமைத்து அவற்றை எங்கள் ஊனக் கண்களினால் பார்க்கும்போதெல்லாம், எங்கள் ஞானக் கண்களினால் அவருடைய செயல்களையும் தூய்மையையும் தியானிக்க அருளினீரே. உம் ஓரே பேறான திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயத்தை வழிபட நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் படத்தை (உருவத்தை) ஆசீர்வதித்துத் தூய்மைப்படுத்தும்படி உம்மை மன்றாடுகிறோம். இந்தப் படத்தின் (உருவத்தின்) முன் உம் திருமகனைப் பக்தியுடன் வழிபட்டு மகிமைப்படுத்தும் மக்கள் அனைவரும், இவ்வுலக வாழ்வில் அவரது அன்புப் பாதையில் நடந்து, மறுவாழ்வில் முடிவில்லா மகிமையடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்: ஆமென்.

(அருள் பணியாளர் திரு இருதயப்படத்தை அல்லது திரு உருவத்தை தீர்த்தம் தெளித்து ஆசீர்வதிப்பார்)

அப: அனைவரும் நம் நம்பிக்கையை அறிக்கையிடுவோம்.
மக்: விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். (“பிறந்தார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

(அருள் பணியாளரின்  மறையுரைக்குப் பின் , பின்வரும் செபத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லவும்)

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:
கிறிஸ்தவக் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்க உமக்குள்ள ஆவலைத் தூய மார்கரெட் மரியா வழியாகத் தெரிவித்த இயேசுவின் திரு இருதயமே! எங்கள் குடும்பத்தின் மீது உமக்குள்ள எல்லா அதிகாரத்தையும் சிறப்பாக அங்கீகரிக்கும்படி இதோ இன்று இங்கே கூடியிருக்கிறோம். இன்று முதல் உமது வாழ்வைப் பின்பற்றி நடக்க விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் சமாதானமாய் இணைந்து வாழ்வதற்குத் தேவையான புண்ணியங்கள் எங்களது குடும்பத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நீர் வென்று விலக்கியிருக்கும் உலகப் பற்றுதல்களை எல்லாம் எங்களை விட்டு அகற்றிப்போட விரும்புகிறோம். கபடற்ற எங்கள் விசுவாசத்தின் காரணத்தால் எங்கள் மத்தியில் நீர் அரசாள்வீராக. முழு இருதயத்தோடு உம்மை அன்பு செய்வதால் எங்கள் இருதயங்களின் அரசராக நீர் வீற்றிருப்பீராக. திவ்விய நற்கருணையில் உம்மை அடிக்கடி உட்கொள்வதால் எங்கள் அன்பை அதிகரித்தருளும்.

ஒ, இயேசுவின் திரு இருதயமே! எங்கள் மத்தியில் உமது ஆட்சியை நிறுவி, நாங்கள் சிறப்பாகச் செய்யும் ஆன்ம சரீர முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். எல்லா கவலைகளையும் எங்களிடமிருந்து நீக்கியருளும். எங்கள் இன்பங்களை ஆசீர்வதித்துத் துன்பங்களினின்று எங்களை மீட்டருளும். எங்களில் யாராவது உம்மை எப்போதாவது வருத்தத்துக்குள்ளாக்கியிருந்தால், திரு இருதயமே வருத்தப்படும் அந்தப் பாவியின் மீதும் நீர் இரக்கம் உள்ளவர் என்பதை நினைவு கூர்ந்தருளும். நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியும்படி எங்களுக்குள் இறப்பு நேரிடும்போது இறப்பவர்களும், உயிரோடு இருப்பவர்கள் எல்லாரும் உமது திருவுளத்திற்கு ஏற்ப நடக்க அருள் தாரும். இறுதியில் ஒருநாள் நாங்கள் எல்லாரும் விண்ணகத்தில் ஒன்றுகூடி உமது மகிமையை எக்காலமும் போற்றித் துதிக்கும் பாக்கியம் கிடைக்குமென்ற நம்பிக்கையால் ஆறுதலடைவோம். எங்களது இந்தக் காணிக்கையைத் தூய மரியாவின் மாசற்ற இருதயமும், மகிமை நிறைந்த தந்தையாகிய தூய யோசேப்பும் உம்மிடம் சமர்ப்பித்து, எங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நாங்கள் அதை மறவாதிருக்கும்படி எங்களுக்கு உதவி செய்தருளும். எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திரு இருதயம் என்றும் துதிக்கப்படுவதாக. ஆமென்.

இறைவா! இறந்து போன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இந்த வேண்டுதல் உம் அடியார்கள் அனைவருக்கும் பயன்படுவதாக. அனைத்துப் பாவங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, உம் மீட்பில் அவர்கள் பங்குபெற அருள்வீராக! இந்த வழிபாட்டிலே பங்குகொள்ள இயலாமல் வேறு இடங்களில் இருக்கும் உறவினர், உபகாரிகள், நண்பர்களுக்காகவும் வேண்டுகிறோம். இறைவா, அவர்களை எல்லாம் உமது அன்பிலே காத்து, அருளினால் நிரப்பி வழிநடத்தியருளும். என்றென்றும் வாழ்த்து ஆட்சி செய்பவர் நீரே. ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

குடும்பத் தலைவரின் செபம்:
(குடும்பத் தலைவர் கீழ்க்காணும் செபத்தை பக்தி உருக்கத்துடன் வாசிப்பார்)

ஆயிரக்கணக்கான மற்ற குடும்பங்களுக்குள் இக்குடும்பத்தைத் தமது உரிமையாகவும், மனுமக்களால் தமக்கு நேரிடும் சிநேகத்துக்கு நன்றிகெட்டதத்தனத்துக்குக் பரிகாரமான வாசஸ்தலமாகவும் தெரிந்தெடுத்துக்கொள்ள சித்தமான இயேசுவின் திருஇருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக.

ஓ ஆண்டவரே ! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக்கொள்ளும்படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது நமஸ்தரிக்கிறோம். எங்களுக்கு நேரிடும் துன்ப துரிதங்கள், இன்ப சந்தோஷங்கள், மனக்கவலை சகலத்திலும் நீர் எங்களோடிருப்பதை பற்றி மனமகிழிகிறோம். நீசராகிய எங்கள் குடிசைக்குள் தேவரீர் எழுந்தருளிவர நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால் உமது திருஇருதய சோபனத்ததை எங்களுக்கும் விளக்கிக் காட்டும் உன்னத மொழிகளில் திருவாய் மலர்ந்திருக்கிறீராகையால், எங்கள் ஆத்துமம் உம்மை நாடித் தேடுகின்றது. ஈட்டியால் குத்தி திறக்பப்பட்ட உமது விலாவினின்று ஓடி வரும் சீவிய ஊற்றில் எங்கள் ஆவலைத் தீர்ப்போம்.

முடிவில்லாத சீவியத்திற்கு ஊற்றும் மூலமுமாயிருக்கும் உமக்கே எங்களை முழுவதும் கையளிக்கிறோம். ஓ! இயேசுவின் திரு இருதயமே எங்களைவிட்டு ஒருபோதும் பிரியாதேயும். உம்மையே நேசிக்கவும் மற்றவர்களும் உம்மை நேசிக்கும்டிபச் செய்யவும், இதுமுதற்கொண்டு உழைத்துவருவோம். உலகத்தைப் பரிசுத்தமாக்கும்படி அதைச் சுட்டெரிக்கும் தேவ அக்கினி நீரே. பெத்தானியாவில் உமக்கு இல்லிடம் கொடுத்த வீடுபோல் இந்த வீடும் உமக்குப் பிரியமுள்ளதாய் இருப்பதாக! உமது திருஇருதயத்தோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தந்தருளும். பரிசுத்த ஆத்துமாக்கள் இந்த வீட்டிலும் காணக்கிடைப்பார்களாக. அத்தியந்த நேசமுள்ள இரட்சகரே! எகிப்து தேசத்திற்கு நீர் சிறு குழந்தையாய்ப் போனபோது உமக்குக் கிடைத்த தாழ்மையான இல்லிடம்போலவென்கிலும் இவ்வீடு இருக்கும்படிச் செய்தருளும்.

ஓ! இயேசுவே எழுந்தருளி வாரும். நசரேத்தூரில் உமது தருத்தாயானவள் எவ்விதமாய் நேசிக்கப்பட்டாளோ, அவ்விதமே இங்கேயும் அவளை உருக்கமாய் நேசித்துவருகிறோம். மிகவும் பிரமாணிக்கமாயுள்ள அததம சிநேகிதரே, எங்கள் கஸ்தி துன்பவேளையில் நீர் இங்கே இருந்திருப்பீரானால், எங்களுக்கு ஆறுதலாயிருந்திருக்கும். ஆகிலும் எங்கள் இக்கட்டுக்காலம் இன்னும் முடியவில்லையாதலால், இப்போதே எழுந்தருளிவாரும். எங்களோடே வாசஞ்செய்ய கிருபைகூர்ந்தருளும். ஏனெனில் மாய உலகம் எங்களை மயக்கி, உம்மை மறந்துபோகும்படி ஏவித்தூண்டுகிறது. நாங்களோவெனில், உம்மோடு என்றென்றைக்கும், ஐக்கியமாயிருக்க ஆசையாய்இருக்கிறோம். எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறீர். பூவுலகில் நீர் மனுமகனாய் சஞ்சரித்த காலத்தில் உரைத்ததுபோல், இன்று இந்த வீட்டில் நான் தங்கி வசிப்பேன் என்று உமது திருவாய் மலர்ந்து எங்களுக்கும் சொல்வீராக! ஆண்டவரே இதை உமது வாசஸ்தலம் ஆக்கியருளும். நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி ஸ்துதித்து எப்போதைக்கும் உம்மோடு உமக்குப் பிரியமுள்ளவர்களாக சீவிக்கும்படி உதவி செய்தருளும்.

ஓ, இயேசுவே! ஜெயசீலரான் ஆண்டவரே! உமது இருதயம் என்றென்றைக்கும் இவ்வீட்டில் சங்கித்து ஸ்துதிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. – ஆமென்.

வாழ்க அரசியே:
வாழ்க அரசியே! தயை மிகுந்த அன்னையே, எங்கள் வாழ்வே, இனிமையே, அடைக்கலமே வாழ்க!தாயகம் இழந்த ஏவாளின் மக்கள் நாங்கள், தாயே என்று உம்மைக் கூவி அழைக்கிறோம். கண்ணீரின் பள்ளத்தாக்கில் இருந்து உம்மை நோக்கிக் கதறி அழுது, பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காகப் பரிந்துரைக்கும் தாயே, அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரும். உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவை, எங்கள் இம்மை வாழ்வின் இறுதியில் காணச் செய்யும். கருணையின் உருவே! தாய்மையின் கனிவே! இனியக் கன்னித் தாயே!

முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
எல்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! விண்ணேற்படைந்த கன்னித் தாயான மரியாவின் உடலும் ஆன்மாவும் தூய ஆவியாரின் அருளால் உம்முடைய திரு மகனுக்கு உகந்த இல்லமாக இருக்கத் ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த தூய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள், அவருடைய இரக்கமுள்ள பரிந்துரையால் இவ்வுலகின் எல்லா துன்ப துயரங்களிலிருந்தும், இறப்பிலிருந்தும் எங்களை மீட்கும்படிச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

முத: இயேசுவின் திரு இருதயமே…
எல்: எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
முத: இயேசுவின் திரு இருதயமே…
எல்: எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
முத: இயேசுவின் திரு இருதயமே…
எல்: எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

முத: தூய மரியாவின் மாசற்ற இருதயமே…
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: தூய யோசேப்பே…
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: தூய மார்கரெட் மரியாவே…
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று, திருப்பலியில் நன்மை வாங்கி, அதே நாளில் ஒரு கோவிலுக்குச் சென்று, திருத்தந்தையின் கருத்துகளுக்காக வேண்டிக்கொள்பவர்கள் பரிபூரண பலன் அடைவார்கள்)

(அனைவரையும் அருள்பணியாளர் ஆசீர்வதிக்க, சடங்கு முடிவுறுகிறது.)

இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி செபம்:
ஓ, இயேசுவின் திரு இதயமே! உமது அரசு வருக! அனைத்து இன மக்களுக்கும் நீர் அரசாக இருப்பீராக! உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல, ஊதாரியைப்போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கம் நீர் உத்தம அரசாராய் இருப்பீராக! அமைதியின் அரசியாகிய தூய மரியாவின் மாசற்ற இதயத்தின் வழியாக, எங்கள் நாட்டில் உமது அரசை நிறுவீராக! எங்கள் குடும்பங்களினுள் நுழைந்து, அவற்றை உமக்கே சொந்தமாக்கியருளும். இவ்விதம், உலகின் ஒருகோடி முனை முதல் மறுகோடி முனை வரை ”நம் அரசாரகிய இயேசு கிறிஸ்துவின் திரு இருதயம் வாழ்த்தப்படுவதாக! என்றென்றைக்கும் அத்திரு இருதயம் புகழப்படுவதாக!” என்று ஒரே குரலொலியாய் இருப்பதாக. ஆமென்.

இயேசுவின் திரு இருதய அன்பே, உமது அன்பு இதயத்தில் பற்றியெறிய செய்தருளும்.
இயேசுவின் திரு இருதயத் திடமே, என்னை திடப்படுத்தியருளும்.
இயேசுவின் திரு இருதய இரக்கமே, எனக்கு மன்னிப்பளித்தருளும்.
இயேசுவின் திரு இருதயப் பொருமையை, என் குறைகளை பொருத்தருளும்.
இயேசுவின் திரு இருதய அரசே, என்னை உம் வசப்படுத்தியருளும்.
இயேசுவின் திரு இருதய சித்தமே, என்னை ஆட்கொள்ளும்.
இயேசுவின் திரு இருதயப் பற்றுதலே, என் இருதயத்தைத் தகனப் பலியாக்கியருளும்.
அமல உற்பவியான தூய கன்னி மரியே…
இயேசுவின் திரு இருதயத்திடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு தன்னைத் ஒப்புக்கொடுக்கும் செபம்:
(தூய மார்கரெட் மரியா)
இயேசுவின் திரு இருதயமே! எளியேன் (பெயர்) என்னும் என்னையே உமக்குக் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் இந்தத் திரு இருதயத்தை அன்பு செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களை எல்லாம் இந்தத் திரு இருதயத்துக்குப் பாத காணிக்கையாக்குகிறேன். திவ்விய இருதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழு மனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இருதயத்தின் மீது எனக்குள்ள அன்பைக் காட்ட என்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.

இயேசுவின் திரு இருதயமே! என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர் நீரே. என் உயிரின் ஒரே காவல் நீரே. என் மீட்பின் தளராத நம்பிக்கை நீரே. என் பலவீனத்தைப் போக்கும் மருந்து நீரே. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இருதயமே! உம் விண்ணகத் தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபம் என் மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இருதயமே! என் பலவீனத்தை எண்ணி அஞ்சும் அதே வேளையில், உம் இரக்கத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன். எனவே, உமக்கு விருப்பம் இல்லாத எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மை விட்டுப் பிரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இருதயத்தில் புதுப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக நான் எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இருதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்:
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திரு இருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயை புரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. உமது விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச் சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். ஆமென்

இயேசுவின் திரு இருதயமே! என் நம்பிக்கை எல்லாம் உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே! என் நம்பிக்கை எல்லாம் உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே! என் நம்பிக்கை எல்லாம் உமது பெயரில் வைக்கிறேன்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம்:
எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யத் துணிகிறோம்.

ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சிப் பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.

எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இருதயங்களைக் கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமாக்கியருளும், எங்கள் வாழ்வின் இறுதி வரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும். ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு கழுவாய் செபம்:
(திருத்தந்தை 11ம் பத்திநாதரின் செபம்)
மனுக்குலத்தின் மட்டில் உமக்குள்ள அணை கடந்த அன்புக்குக் கைம்மாறாக, மிகுந்த மறதியையும் அசட்டைத்தனத்தையும் நிந்தையையும் பெறுகிற இனிய இயேசுவே! உமது அன்பு இருதயம் எல்லா இடங்களிலும் அனுபவிக்கிற மறதி, நிந்தைகளுக்கொல்லாம் சிறப்பான தொழுகையால் கழுவாய் புரிய ஆவல் கொண்டு, உமது பீடத்தின் முன்பாக இதோ, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடக்கிறோம்.

அத்தகைய பெரிய அவமானங்களுக்கு, ஐயையோ, நாங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, எங்கள் முழு உள்ளத்தோடு அவைகளை வெறுத்து, எங்களை மன்னிக்கும்படி உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம். எங்கள் துரோகங்களுக்காக மட்டுமல்ல, மீட்புப் பாதையை விட்டுத் தொலைவில் விலகிப் போய், தங்கள் பிடிவாதம் பற்றுறுதிக்குறைவை முன்னிட்டு, மேய்ப்பரும் வழிகாட்டியுமான உம்மைப் பின்பற்ற மாட்டோம். என்பவர்களின் பாவங்களுக்காகவும், திருமுழுக்கு வாக்குறுதிகளை மீறி, உமது சட்டத்தின் இனிய நுகத்தடியை உதறிவிட்டவர்களின் பாவங்களுக்காகவும் மனதார கழுவாய் தேடிட தயாராயிருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்.

உமக்கு விரோதமாய்ச் செய்த அருவருப்புக்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும் கழுவாய் புரிந்திட இப்போது தீர்மானித்திருக்கிறோம். மரியாதையற்ற உடையாலும், நடத்தையாலும் கிறிஸ்துவத் தன்னடக்கத்துக்கு விரோதமாய்ச் செய்த கணக்கற்ற துரோகங்களுக்காகவும், மாசற்றவர்களை மயக்கி வலையிலிட்ட அசுத்த துர்மாதிரிகைகளுக்காகவும், ஞாயிறு ஓய்வு நாள் கடமைகளை அடிக்கடி மீறியதற்காகவும், உமக்கும் உம் புனிதர்களுக்கும் விரோதமாகச் சொன்ன வெட்கமற்ற பழித்துரைகளுக்காகவும் கழுவாய் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். உலகில் உம் பதிலாளியான திருத்தந்தைக்கும், உம்முடைய குருக்களுக்கும் செய்யும அவமானங்களுக்காகவும், உம் அன்பின் திருவருட் சாதனத்தையே மனம்பொருந்தி அலட்சியத்தால் அல்லது கனமான தேவதுரோகங்களால் பங்கப் படுத்தியதற்காகவும், இறுதியாக நீர் நிறுவிய திருச்சபையின் உரிமைகளையும் போதக அதிகாரத்தையும் எதிர்க்கிற மக்களின் பகிரங்க அக்கிரமங்களுக்காகவும் கழுவாய் செய்ய விரும்புகிறோம்.

ஒ, இறைவனாகிய இயேசுவே, இத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள் இரத்தத்தினாலே தூய்மைப் படுத்த இயலும் என்றால், எவ்வளவோ பாவிகளை! உமது இறைமகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்ககெல்லாம் கழுவாயாக, நீர் சிலுiவியல் உம் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்து நாள்தோறும் எங்கள் பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.

உம்முடைய கன்னித் தாயும், புனிதர்கள் அனைவரும், பக்தியுள்ள எல்லா பற்றுறுதியாளர்களும்; செய்கிற கழுவாய் முயற்சிகளோடு ஒன்றித்து, அவற்றை ஒப்புக் கொடுக்கிறோம். உமது அணை கடந்த அன்பை அலட்சியம் செய்ததற்காகவும், கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் செய்த பாவங்களுக்காகவும் உமது அருள்துணையால் எங்களால் இயன்ற மட்டும் கழுவாய் தேட முழுமனத்துடன் வாக்களிக்கிறோம். இனிமேலாக, நாங்கள் பற்றுறுதியின் தளராமல் தூய நடத்தையுள்ளவர்களாய் வாழ்ந்து, நற்செய்திக் கட்டளைகளையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் அனுசரித்து வருவோம். பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால் ஆனமட்டும் தடுப்போம். பலர் உம்மைப் பின்பற்றும்படி எங்களால் இயன்ற அளவு முயலுவோம் என வாக்களிக்கிறோம்.

ஒ, அன்பு இயேசுவே! கழுவாய் புரிவதற்கு எங்கள் மாதிரியாய் இருக்கிற புனித கன்னிமரியாவின் வழியாக, நாங்கள் செய்யும் கழுவாய் முயற்சி எனும் முழுமனக் காணிக்கையை ஏற்றருளும். நீர் தந்தையோடும் தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் புனித வீட்டுக்கு நாங்கள் எல்லோருக்கும் ஒரு நாள் வந்து சேரும்படி, எங்களுக்கு இறுதி வரை உமதருளில் நிலைத்திருக்கும் வரம் ஈந்து, எங்கள் கடமையிலும் உமக்குப் புரிய வேண்டிய பணியிலும் சாவு மட்டும் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தருளும். ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்தை நோக்கிச் செபம்:
(திருத்தந்தை 9ம் பத்திநாதரின் செபம்)
இனிய இயேசுவே! எங்களை உமது கிருபைக் கண்களால் நோக்கியருளும். அன்று வெரோணிக்கம்மாளை கிருபாகடாட்சமாய் பார்த்தருளினது போல எங்களில் ஒவ்வொருவரையும் தயவாய் பார்த்தருளும். உமது பிரத்தியட்ச தரிசனத்தை அடியோர்கள் இச் சரீரக் கண்களால் காண அபாத்திரவான்களாகையால் என் இருதயத்தை நோக்கி உமது திருமுகத் தரிசனத்தால் திருப்பியருளும். இந்த திவ்விய தரிசனத்தால் என் இருதயம் உற்சாகமடைந்து இப்பிரபஞ்ச சீவ ஞானயுத்தத்தில் கிருபாகடாட்ச ஊரணியால் அடையச் செய்தருளும் சுவாமி. ஆமென்.

செபிப்போமாக:
சமஸ்த விசுவாசிகளின் சிருஷ்டிகரும் இரட்சகருமாயிய இறைவா! உம்முடைய மகிமை பூலேகமெங்கும் நிறைந்திருக்கிறது. உமது அடியானுக்கு பாவப் பொறுத்தல் தந்து என் அவசரங்களில் வேண்டிய வரங்களைப் அடையச் செய்தருளும் சுவாமி. ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

இயேசுவின் திரு இருதய நவநாள் செபம்:
“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்” என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…

(உங்கள் மன்றாட்டுக்களை மௌனமாக நினைவு கூறவும் )

சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்தாலன்றி வெறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறேங்கே நான் தட்டிக் கேட்கப் போகிறேன். ஆகையால் என் நேச இயேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே; சோதனைக் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன்.

தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிராத்தனைகள் அனுகூலமாகும். திவ்விய இயேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான்தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றி புகழ்ந்து சேவிக்க நான் ஒருகாலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்க முழுவதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேள்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

இயேசுவின் திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள். உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சுவாமி! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை. வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார் பேரிலும் இரக்கமாயிரும். இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒரு போதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப் பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக. இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக. எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.

ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப்பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், “நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக” என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. ஆமென்.

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை:
அப: ஆண்டவரே இரக்கமாயிரும்…
மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
மக்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அப: ஆண்டவரே இரக்கமாயிரும்.
மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மக்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

அப: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: தூய ஆவியாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: மூவொரு கடவுளாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொல்லவும்)

அப: என்றும் வாழும் இறைவனின் திரு மகனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: தூய கன்னித் தாயின் கருவில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: இறை வார்த்தையான மகனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: அளவற்ற மகத்துவமும் மாட்சியும் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: இறைவனுடைய தூய ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: அன்புத் தீ பிரகாசித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: நீதியும் அன்பும் தங்கியிருக்கும் நல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எல்லா புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எல்லா ஆராதனைக்கும் புகழ்ச்சிக்கும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எல்லா இருதயங்களுக்கு அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: இறை தன்மை முழுமையாக நிறைந்து வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: இறைவனாகிய தந்தைக்கு உகந்த அன்புள்ள இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: பொறுமையும் மிகுந்த இரக்கமும் கொண்ட இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: வாழ்வுக்கும் தூய நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்திய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: இறப்பு வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: உம்மிடத்தில் நம்பிக்கை கொள்வோரின் மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே…
அப: எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே…

அப: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
அப: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

அப: திரு இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே…
மக்: எங்கள் இருதயத்தை உமது இருதயத்தைப் போல் மாற்றியருளும்.

அப: செபிப்போமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இருதயத்தையும், அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும், ஆராதனைப் புகழ்ச்சிகளையும் இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்: ஆமென்

இயேசுவின் திரு இருதயச் செபமாலை:
கிறிஸ்துவின் ஆன்மாவே என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே என்னை எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே என்னைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே என்னைத் தேற்றிடுமே.
ஓ நல்ல இயேசுவே எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.
தீயப் பகைவரிடம் இருந்து என்னைக் காத்தருளும்.
எனது இறப்பின் வேளையினில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களுடன் எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். ஆமென்.

கருத்துக்கள்:
1. பிற மதத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.

பெரிய மணியில்:
அப: திரு இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே…
மக்: எங்கள் இருதயத்தை உமது இருதயத்தைப் போல் மாற்றியருளும்.

சிரிய மணியில்:
அப: இயேசுவின் மதுரமான திரு இருதயமே…
மக்: என் சிநேகமாயிரும்.

பத்து மணி முடிவில்:
அப: மரியாவின் மாசற்ற இருதயமே…
மக்: என் இரட்சணியமாயிரும்

ஐம்பது மணி முடிவில்:
அப: இயேசுவின் திரு இருதயமே…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

அப: பிறப்பு நிலைப் பாவமில்லாமல் உதித்த தூய மரியாவின் மாசற்ற திரு இருதயமே…
மக்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அப: இயேசுவின் திரு இருதயமானது…
மக்: எங்கும் போற்றப்படுவதாக.

அப: திரு இருதயத்தின் அன்பரான தூய யோசேப்பே…
மக்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப: இயேசுவின் திரு இருதயமே ! உமது ஆட்சி வருக. எங்கள் பாவங்ளை மன்னித்தருளும். எனது செபம், தபம், அனுதின செயல்கள், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது இறுதி மூச்சு வரை உம்மை அன்பு செய்யவும், உம்மை மாட்சிப்படுத்தவும் வரம் தாரும்.
மக்: ஆமென்.

இயேசுவின் திருப்பெயரின் மன்றாட்டு மாலை:
அப: ஆண்டவரே இரக்கமாயிரும்…
மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
மக்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அப: ஆண்டவரே இரக்கமாயிரும்.
மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மக்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

அப: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: தூய ஆவியாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: மூவொரு கடவுளாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொல்லவும்)

அப: இறைவனின் திருமகனாகிய இயேசுவே…
அப: தந்தையின் பேரொளியாகிய இயேசுவே…
அப: முடிவில்லா ஒளியின் சுடரான இயேசுவே…
அப: மகிமையின் மன்னரான இயேசுவே…
அப: நீதியின் கதிரவனான இயேசுவே…
அப: புனித கன்னிமரியாவின் மைந்தராகிய இயேசுவே…
அப: அன்புக்குரிய இயேசுவே…
அப: வியப்புக்குரிய இயேசுவே…
அப: வல்லமையுள்ள இறைவனாகிய இயேசுவே…
அப: இறுதிக்கால தந்தையாகிய இயேசுவே…
அப: பேராலோசனையின் தூதராகிய இயேசுவே…
அப: ஆற்றல் மிகுந்த இயேசுவே…
அப: பொறுமை நிறைந்த இயேசுவே…
அப: கீழ்ப்படிதலுள்ள இயேசுவே…
அப: சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ள இயேசுவே…
அப: கற்பை விரும்பும் இயேசுவே…
அப: எங்களை அன்பு செய்யும் இயேசுவே…
அப: அமைதியின் இறைவனாகிய இயேசுவே…
அப: உயிரின் ஊற்றாகிய இயேசுவே…
அப: புண்ணியங்களின் மாதிரியான இயேசுவே…
அப: அன்பார்வம் கொண்ட இயேசுவே…
அப: எங்கள் இறைவனாகிய இயேசுவே…
அப: எங்கள் அடைக்கலமாகிய இயேசுவே…
அப: வறியவரின் தந்தையாகிய இயேசுவே…
அப: இறைமக்களுக்குக் கருவூலமான இயேசுவே…
அப: நல்லாயனாகிய இயேசுவே…
அப: உண்மை ஒளியாகிய இயேசுவே…
அப: முடிவற்ற ஞானமாகிய இயேசுவே…
அப: அளவற்ற நன்மைத்தனமாகிய இயேசுவே…
அப: எங்கள் வாழ்வும் வழியுமாகிய இயேசுவே…
அப: வானத்தூதரின் மகிழ்ச்சியாகிய இயேசுவே…
அப: குலமுதுவரின் அரசராகிய இயேசுவே…
அப: இறைவாக்கினரின் ஞானமாகிய இயேசுவே…
அப: அப்போஸ்தலரின் ஆசிரியராகிய இயேசுவே…
அப: நற்செய்தியாளரின் போதகராகிய இயேசுவே…
அப: மறைச்சாட்சியருக்குத் திடமாகிய இயேசுவே…
அப: இறையடியார்களின் ஒளிவிளக்காகிய இயேசுவே…
அப: கன்னியரின் தூய்மையாகிய இயேசுவே…
அப: புனிதர் அனைவரின் மணிமுடியான இயேசுவே…

அப: கருணை கூர்ந்து…
மக்: எங்களை மன்னித்தருளும் இயேசுவே.
அப: கருணை கூர்ந்து…
மக்: எங்களுக்குச் செவிசாய்த்தருளும் இயேசுவே.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்களை மீட்டருளும் இயேசுவே என்று சொல்லவும்)

அப: தீமை அனைத்திலுமிருந்து…
அப: பாவம் அனைத்திலுமிருந்து…
அப: உமது சினத்திலிருந்து…
அப: பேயின் சூழ்ச்சியிலிருந்து…
அப: சிற்றின்பப் பற்றுதலினின்று…
அப: முடிவில்லா அழிவிலிருந்து…
அப: உமது மனுவுடலேற்பின் மறைபொருளைக் கண்ணோக்கி…
அப: உமது பிறப்பைக் கண்ணோக்கி…
அப: உமது குழந்தைப் பருவத்தைக் கண்ணோக்கி…
அப: உமது தெய்வீக வாழ்வைக் கண்ணோக்கி…
அப: உமது உழைப்பைக் கண்ணோக்கி…
அப: நீர் ஏற்படுத்திய நற்கருணையைக் கண்ணோக்கி…
அப: உம்முடைய வேதனைகளையும் பாடுகளையும் கண்ணோக்கி…
அப: உமது சிலுவையையும் கைநெகிழப்பட்ட நிலையையும் கண்ணோக்கி…
அப: உம்முடைய துன்ப துயரங்களைக் கண்ணோக்கி…
அப: உமது இறப்பையும் அடக்கத்தையும் கண்ணோக்கி…
அப: உமது உயிர்த்தெழுதலைக் கண்ணோக்கி…
அப: உமது விண்ணேற்றத்தைக் கண்ணோக்கி…
அப: உமது மகிழ்ச்சியையும் மகிமையையும் கண்ணோக்கி…

அப: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மக்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

அப: செபிப்போமாக! ஆண்டவரே! நீர் உமது அன்பில் நிலைத்திருக்கச் செய்பவர்களைப் பராமரித்து ஆள ஒரு போதும் தவறுவதில்லை. ஆகவே, உமது திருப்பெயரின் மீது நாங்கள் எப்பொழுதும் பயபக்தியும் அன்பும் கொண்டிருக்கச் செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.
மக்: ஆமென்.

இயேசுவின் திரு இரத்தத்தின் மன்றாட்டு மாலை:
அப: ஆண்டவரே இரக்கமாயிரும்…
மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
மக்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அப: ஆண்டவரே இரக்கமாயிரும்.
மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மக்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

அப: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: தூய ஆவியாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: மூவொரு கடவுளாகிய இறைவா…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொல்லவும்)

அப: என்றும் வாழும் தந்தையின் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் இரத்தமே…
அப: மனிதனாய்ப் பிறந்த இறைவாக்காகிய கிறிஸ்துவின் இரத்தமே…
அப: புதிய, முடிவில்லா உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவின் இரத்தமே…
அப: வியர்வையாகத் தரையில் வழிந்தோடிய கிறிஸ்துவின் இரத்தமே…
அப: கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டபோது சிந்திய கிறிஸ்துவின் இரத்தமே…
அப: முள்முடி சூட்டியபோது வெளியான கிறிஸ்துவின் இரத்தமே…
அப: சிலுவையில்; சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமே…
அப: எங்கள் மீட்பின் விலையான கிறிஸ்துவின் இரத்தமே…
அப: பாவமன்னிப்புக்கு இன்றியமையாத கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அப: நற்கருணையில் அருந்தப்படும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: ஆன்மாக்களைக் கழுவித் துடைக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: இரக்கம் ஆறாகப் பெருகும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: பிசாசை வென்ற கிறிஸ்துவின் இரத்தமே…
அப: மறைச்சாட்சியருக்குத் திடமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: இறையடியார்க்குப் பலமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: கன்னியர்களுக்கு வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: ஆபத்தில் தவிப்போர்க்கு உதவும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: துன்புறுவோரின் துயர்துடைக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: அழுகையில் ஆறுதல் அளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: மனம் வருந்துவோரின் நம்பிக்கையான கிறிஸ்துவின் இரத்தமே…
அப: இறப்போருக்கு மனநிறைவளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: உள்ளங்களுக்கு அமைதியும் இனிமையுமான கிறிஸ்துவின் இரத்தமே…
அப: முடிவில்லா வாழ்வின் பிணையான கிறிஸ்துவின் இரத்தமே…
அப: உத்தரிக்கிற நிலையிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே…
அப: மதிப்புக்கெல்லாம் உரிய கிறிஸ்துவின் இரத்தமே…

அப: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
அப: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

அப: ஆண்டவரே, உமது திரு இரத்தத்தால் எம்மை மீட்டீர்.
மக்: இறைவனுடைய அரசாக எங்களை அமைத்தீர்.

அப: செபிப்போமாக! என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய ஒரே மகனை உலக மீட்பராக ஏற்படுத்தி, அவரது இரத்தத்தைப் பாவக் கழுவாயாக ஏற்கத் திருவுளமானீரே. எங்கள் மீட்பின் விலையாகிய அந்தத் திரு இரத்தத்தை வணங்கி தொழுகிறோம். அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து எங்களைப் பாதுகாத்து, விண்ணக வாழ்வை நாங்கள் பெற்று மகிழ அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்: ஆமென்.

No comments:

Post a Comment