புனித அம்புரோசு - மிலன் நகரின் பேராயர்
ஆட்சி பீடம் | மேதியோலானும், மிலன் மறைமாவட்டம் |
---|---|
நியமனம் | 374 கி.பி |
ஆட்சி முடிவு | ஏப்ரல் 4, 397 |
முன்னிருந்தவர் | அக்சென்துஸ் |
பின்வந்தவர் | சிம்பிலிசியன் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | டிசம்பர் 7, 374 |
பிற தகவல்கள் | |
பிறப்பு | சுமார். 340 கி.பி ஆகஸ்ட்a Treverorum, Gallia Belgica, உரோமைப் பேரரசு (தற்கால செருமனி) |
இறப்பு | ஏப்ரல் 4, 397 Mediolanum, Italia annonaria, உரோமைப் பேரரசு (தற்கால இத்தாலி) |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | டிசம்பர் 7 |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை ஆங்கிலிக்க ஒன்றியம் லூதரனியம் |
பகுப்பு | ஆயர் மற்றும் திருச்சபையின் மறைவல்லுநர் |
சித்தரிப்பு வகை | தேன்னீக்கூடு, பிள்ளைகள், சாட்டை, எலும்புகள் |
பாதுகாவல் | தேனீ வளர்ப்பு; தேன்னீக்கள்; மெழுகுவர்த்தி செய்பவர்கள்; வீட்டு விலங்குகள்; கல்வி; மிலன்; மாணவர்கள்; |
திருத்தலங்கள் | Basilica of Sant'Ambrogio |
374இல் மிலன் நகரின் அப்போதைய ஆயர் இறந்தார். அப்போது அடுத்து அப்பதிவியினை ஏற்கப்போவது யார் என்பது குறித்து ஆரியனிச கொள்கையுடையவர்களுக்கும் பிற கிறித்தவர்களுக்கும் இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆலோசகராக அம்புரோசு கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின் போது அனைவராலும் அம்புரோசு ஆயராக தேர்வு செய்யப்பட்டார். ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோசு அரச ஆணையினால் ஆயர்பதவியினை ஏற்றார். அப்போது அவர் திருமுழுக்குகூட பெற்றிருக்கவில்லை என்பதும் திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிக்கத்தக்கது. திருமுழுக்கு பெற்று எட்டு நாட்களுக்குப்பின் 7 டிசம்பர் 374இல் ஆயர்நிலை திருப்பொழிவு பெற்றார். இன்னாளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு கிறித்தவ பிரிவுகள் இவரின் விழா நாளை கொண்டாடுகின்றனர்.
இவர் ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ளார். இவரின் மறையுரைகள் மற்றும் விவிலிய விளகக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. இவர் புனித அகுஸ்தீனுக்கு திருமுழுக்கு அளித்தவர். இவரை அகுஸ்தீன் தன்வரலாற்று நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். ஆரியனிச பதித்தக்கொள்கையினை இவர் சீராக்க பாடுபட்டார். ஏப்ரல் 4, 397 இவர் இறந்தார். இவரின் மீப்பொருட்கள் அம்புரோசு பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment