திருச்சபையின் மறைவல்லுநர் என்னும் பதம் பல்வேறு திருச்சபைகளால் தனிநபர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது அந்த நபர்களின் பங்களிப்பின் (பொதுவாக இறையியலில்) முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த வழங்கப்படுவதாகும்.
கத்தோலிக்க திருச்சபையில் இப்பட்டம், தன் எழுத்துக்களாலும், சேவையினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பெறும் நன்மை விளைவித்த, கல்வியிலும், புனிதத்திலும் உயர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும். இந்த மரியாதை மிக அரிதாகவே வழங்கப்படும், அவ்வாறு வழங்கப்படும் போதும், புனிதர் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது திருத்தந்தையாலோ அல்லது கத்தோலிக்க பொதுச்சங்கங்களினாலோ வழங்கப்படலாம். ஆனாலும் இதுவரை எப்பொதுச்சங்கமும் மறைவல்லுநர் பட்டம் வழங்கியது இல்லை என்பது குறிக்கத்தக்கது.
2011-இன் படி, கத்தோலிக்க திருச்சபை 34 பேரை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் பதினெழுவர் கிழக்கு-மேற்கு திருச்சபைகளின் பிளவின் முக்காலத்தவர்களாதலால் அவர்களை மறைவல்லுநர்களாக கிழக்கு மரபுவழி திருச்சபையும் ஏற்கின்றது. மேலும் இப்படியலில் 8 பேர் கிழக்கிலும், 26 பேர் மேற்கிலும் வாழ்ந்தவர்கள். அவர்களுள் 3 பெண்கள் அடங்குவர். அம்மூவருள் அவிலாவின் புனித தெரேசா, லிசியே நகரின் புனித தெரேசா ஆகிய இருவரும் கார்மேல் சபைத் துறவியர் ஆவர். புனித சியன்னா நகர கத்ரீன் அர்ப்பணிக்கப்பட்ட கன்னி ஆவார். மேலும் அவர்களுள் 1 திருதொண்டர், 10 குருக்கள், 12 ஆயர்கள், 4 பேராயர்கள் (இவர்களில் ஒருவர் கர்தினால் ஆயர்), 2 மறைமுதுவர், 2 திருத்தந்தையர்களும் அடங்குவர்.
25 நபர்கள் ஐரோப்பாவையும், 3 பேர் ஆபிரிக்காவையும், 6 பேர் ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment