திருமணம்- தெய்வீகத்தில் பங்கு
அன்று ஆணும் பெண்ணுமாகப் படைத்த நிமிடத்திலிருந்தே தொடங்கிய இந்த திருமண முறிவு பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், சம்பிரதாயங்கள் கடைபிடித்தாலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ விளக்கங்கள், வியாக்கியானங்கள் கொடுத்தும் நிறைவடைந்தபாடில்லை.
இந்த கெடுபிடி தொடர்வதற்குக் காரணம், எல்லா மதமும் மனித கலாச்சாரமும் திருமணத்தை தெய்வீக அனுபவமாகப் பார்க்கின்றன. "இதில் (திருமணத்தில்)அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்" (எபேசி 5'32) என பவுலடியார் மூலம் தரும் இந்த இறை வெளிப்பாடு, திருமணத்தின் தெய்வீகத்தன்மைக்குத் தெழிவானச் சான்று.
இத்தெய்வீகத்தன்மை திருமணத்தில் ஊடுருவிப் பரவி படர்ந்திருப்பதால்,தன் திருமணத்தால் இந்த தெய்வீ;கநிலையை எட்டிப்பிடிக்கும் கட்டாயத்தில் இருக்கிறான். அதே வேளையில், மனித பலவீனம், உலக ஆசைகள், நவீன பொருளாதாரம், நுகர்;வு கலாச்சாரம்,பண்பற்ற பாலியல் அறிவு இவற்றால் பாதிக்கப்பட்டு, இருதலைக் கொள்ளி எரும்பாக திருமணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான்.
இந்நிலையில்,"ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?" என்று பரிசேயத்தனமாக சிந்திப்பதற்குப் பதிலாக வாழ வைப்பதற்கான வழியைச் சிந்திப்பது நல்லது.
"உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்." (எபேசி 5'19-21)
--அருட்திரு ஜேசப் லீயோன்
அன்று ஆணும் பெண்ணுமாகப் படைத்த நிமிடத்திலிருந்தே தொடங்கிய இந்த திருமண முறிவு பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், சம்பிரதாயங்கள் கடைபிடித்தாலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ விளக்கங்கள், வியாக்கியானங்கள் கொடுத்தும் நிறைவடைந்தபாடில்லை.
இந்த கெடுபிடி தொடர்வதற்குக் காரணம், எல்லா மதமும் மனித கலாச்சாரமும் திருமணத்தை தெய்வீக அனுபவமாகப் பார்க்கின்றன. "இதில் (திருமணத்தில்)அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்" (எபேசி 5'32) என பவுலடியார் மூலம் தரும் இந்த இறை வெளிப்பாடு, திருமணத்தின் தெய்வீகத்தன்மைக்குத் தெழிவானச் சான்று.
இத்தெய்வீகத்தன்மை திருமணத்தில் ஊடுருவிப் பரவி படர்ந்திருப்பதால்,தன் திருமணத்தால் இந்த தெய்வீ;கநிலையை எட்டிப்பிடிக்கும் கட்டாயத்தில் இருக்கிறான். அதே வேளையில், மனித பலவீனம், உலக ஆசைகள், நவீன பொருளாதாரம், நுகர்;வு கலாச்சாரம்,பண்பற்ற பாலியல் அறிவு இவற்றால் பாதிக்கப்பட்டு, இருதலைக் கொள்ளி எரும்பாக திருமணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான்.
இந்நிலையில்,"ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?" என்று பரிசேயத்தனமாக சிந்திப்பதற்குப் பதிலாக வாழ வைப்பதற்கான வழியைச் சிந்திப்பது நல்லது.
"உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்." (எபேசி 5'19-21)
--அருட்திரு ஜேசப் லீயோன்
No comments:
Post a Comment