பீட் (/ˈbiːd/ BEED-'; 672/673 – 26 மே 735) அல்லது வணக்கத்திற்குரிய புனித பீட் (இலத்தீன்: Bēda Venerābilis) என்பவர் ஆங்கிலேயத் துறவியும், அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவரின் ஆங்கிலேயத் திருச்சபையின் வரலாறு (Historia ecclesiastica gentis Anglorum) என்னும் படைப்பு இவருக்கு ஆங்கிலேய வரலாற்றின் தந்தை என்னும் பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
1899இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.
மேற்கோள்கள்
Ray 2001, pp. 57–59
Colgrave & Mynors 1969, p. xix
Campbell 2004
No comments:
Post a Comment