நற்கருணையே.. எம் வாழ்வே....
வெண்ணிற வடிவில் வந்திடும் எம் ஆன்ம உணவே
சோர்ந்த வேளையில் நலிந்த நிலையில் ஊக்கம் தரும் அருமருந்தே
தெய்வீகத் திருப்பலியில் எமக்காக பிளவுண்ட விண்ணக அன்பே
நலமடையவும் வளமடையவும் தினமும் காத்திருக்கும் வானுணவே
சின்னஞ்சிறியோர் உள்ளத்திலும் எழுந்தருளத் துடிக்கும் நற்கருணையே
மெய்யாகவே உடலாகவும் உதிரமாகவும் வந்து எம்மில் வாசமான
கல்வாரி வளமே
பயபக்தியோடும் மன ஒடுக்கத்தோடும் பணிவோரின் அருட்பொழிவே
அருகிருக்கும் அற்புதமாக,
ஆற்றலின் ஊற்றாக,
இயங்கு சக்தியாக,
உன்னத உணவாக,
ஊக்கந்தரு மருந்தாக
வந்த வானகமே !
தலை சாய்த்து
தாள் பணிவோமே !
பக்தியோடு பெறுவோமே !
தயாரிப்போடு தாங்குவோமே !
அகமெல்லாம் மகிழ்வோமே !
அன்புடன்
கஸ்மீர் ரோச்
வெண்ணிற வடிவில் வந்திடும் எம் ஆன்ம உணவே
சோர்ந்த வேளையில் நலிந்த நிலையில் ஊக்கம் தரும் அருமருந்தே
தெய்வீகத் திருப்பலியில் எமக்காக பிளவுண்ட விண்ணக அன்பே
நலமடையவும் வளமடையவும் தினமும் காத்திருக்கும் வானுணவே
சின்னஞ்சிறியோர் உள்ளத்திலும் எழுந்தருளத் துடிக்கும் நற்கருணையே
மெய்யாகவே உடலாகவும் உதிரமாகவும் வந்து எம்மில் வாசமான
கல்வாரி வளமே
பயபக்தியோடும் மன ஒடுக்கத்தோடும் பணிவோரின் அருட்பொழிவே
அருகிருக்கும் அற்புதமாக,
ஆற்றலின் ஊற்றாக,
இயங்கு சக்தியாக,
உன்னத உணவாக,
ஊக்கந்தரு மருந்தாக
வந்த வானகமே !
தலை சாய்த்து
தாள் பணிவோமே !
பக்தியோடு பெறுவோமே !
தயாரிப்போடு தாங்குவோமே !
அகமெல்லாம் மகிழ்வோமே !
அன்புடன்
கஸ்மீர் ரோச்
No comments:
Post a Comment