அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 18, 2017

ஏழைகள்

👥👥👥👥👥ஏழைகள்👥👥👥👥👥

லூக்கா 16:22
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.ஏழைகள் எல்லா இடத்திலும் புறக்கணிக்க படுகிறார்கள் சிலர் வேலை செய்கிற இடங்களில் கடுமையாக பாதிக்க படுகிறார்கள்வீட்டு வேலை செய்கிற இடத்தில், பள்ளிகளில் ,ஆலயத்தில்,பல நிருவனங்களில் இந்த அப்பாவி ஏழைகள் புறக்கணிக்க படுகிறார்கள்

ஒரு ஏழை சிறுமியை வேலைக்காக ஒரு கிராமத்தில் இருந்து ஒரு பணக்கார குடும்பம் அழைத்து சென்றது .ஆனால் அங்கெ அந்த சிறுமிக்கு சரியான உணவு, உடை,மற்றும் தூங்குவதற்கு ஒரு பாய் கூட கொடுக்காமல் கொடுமை படுத்தினார்கள் அதோடு அந்த சிறுமியை பொய் திருட்டு குற்றம் சாட்டி விரட்டி விட்டனர் ஆனால் அந்த சிறுமியின் கண்ணீரை கண்டு கடவுள் அந்த செல்வந்தர் குடும்பத்திற்கு தகுந்த தண்டனை கொடுத்தார்

லூக்கா அதிகாரத்தில் வரும் ஒரு ஏழை லாசரின் வாழ்க்கை அவன் சரீரம் முழுதும் புண் அதில் வடியும் அசடுகளை நாய்கள் வந்து நக்கும் .அவன் எப்போதும் ஒரு செல்வந்தர் வீட்டு முன் தான் படுத்து இருப்பார் ஒருவேளை அந்த செல்வந்தர் இலாசரை அரட்டி இருக்கலாம், அவனை அடித்து இருக்கலாம் .ஒருநாள் இலாசரும் இறந்தான், அந்த செல்வந்தரும் இறந்தான் .இறந்த அந்த ஏழை இலாசரை கடவுளின் தூதர்கள் ஆபிரகாம் மடியில் கொண்டு சேர்த்தார்கள் .அந்த செல்வந்தர் பாதாளத்தில் தள்ளப்பட்டார் அங்கே சித்திரவதை பட்டார்


இந்த உலகத்தில் வாழுகிற ஏழைகளுக்கு வானதூதரின் துணை உண்டு
அவர்கள் படும் துன்பத்திற்கு கடவுள் நியாயம் கேட்ப்பார் அவர்களின் கண்ணீர் பரலோகத்தை எட்டும் அவர்களை விடுவிக்க அந்த தேவனே இறங்கி வருவார்

அதற்க்காக பணம் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று செல்லவில்லை .அவர்களின் வறுமை,ஏழ்மை,இயலாமை ஆகியவற்றை பயன்படுத்தி அடிமையாக்க வேண்டாம், அவர்களுக்கும் இதயம் உண்டு நாம் பேசும் கடுமையான சொற்கள் அவர்கள் மனதை பாதிக்கும் என்று மனத்தால் உணர்வோம் .அதையும் மீறினால் அந்த செல்வந்தன் கதி தான் உங்களுக்கும் அப்புறம் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

ஆபிரகாம் மடி என்பது ஆறுதலின் இடம், பேரின்ப வீடு

நீதிமொழிகள் 19:17
ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment