புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus)
இவர் 430 ஆம் ஆண்டு இராவென்னா என்ற நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நகரில் புகழ்மிக்க பணக்காரர்கள் வசி த்து வந்தனர். இதனால் உரோமை பேரரச ரால் அந்நகர் சுற்றி வளைக்கப்பட்ட கைப் பற்றப்பட்டது. அரசர் ஹோனோரியுஸ் (Honorius) என்பவரால் இராவென்னா மக்கள் துன்பப்படுத்த ப்பட்டார்கள். 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 50ஆண் டுகள் கொன்ஸ்டானிநோபிளில் வாழ்ந்த அரசன் ஒருவன், திருச்சபையைப்பற்றி தவறாக போதித்தான். இதனால் ஆயர் பீட்டர் இதனை சுட்டிக்காட்டி, தவற்றை திருத்திக்கொள்ள வேண்டுமென்று எச்சரித்தார். ஆயர் தன் மறைமாநிலம் முழுவ தும் மிக எளிமையான முறையில் திருப்பலி நிறைவேற்றி, பொருள் தரும் வகையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனங் களில் இடம்பிடித்தார். பின்னர் மிலான் மறைமாநிலத்திற்கு சென்று அங்கிருந்த சில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். மீண்டும் இராவென்னா வந்த பிறகு, உரோமை அரசரின் கீழிரு ந்த தன்னுடைய மறைமாநிலத்தை, திருத்தந்தையின் அதிகார த்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அந்தியோக்கியா நகரிலிரு ந்த இறையியல் பள்ளிக்கு தேவையான சில புத்தகங்களை எழுதினார். இவரின் நூல்கள் அனைத்திலும் மரியன்னைக்கெ ன்று சிறப்பிடத்தை தந்துள்ளார். இதன் வழியாக இவர் அன்னை யின் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பதை அறியலாம்.
இவர் ஆயராக பணிசெய்த ஆண்டுகளில் கிறிஸ்துவத்தை பணக்கார மக்களிடையே பரப்பி, அவர்களை இறைவன்பால் ஈர்த்தார். பலரால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் மிக எளிதாக தீர்த்துவைத்தார். பல நாடுகளிடையே சமாதானத்தை கொண்டுவந்தார். ஒற்றுமையின்றி இருந்த அரசர்களை சேர்த்து வைத்து, கிறிஸ்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். தான் எழுதிய பல இறையியல் நூல்களின் வழியாக பல குருக்களின் வாழ்வை மாற்றி, இறையழைத்தலை பெருகச் செய்தார். இவர் தன் மறைமாநிலம் முழுவதும் பல ஆலயங்களை எழுப்பினார். பல கல்விக்கூடங்களையும், இறையியல் கல்லூரிகளையும் நிறுவினார். தான் சென்ற இடமெல்லாம் மக்களை ஒன்றுகூட்டி போதித்தார். ஒவ்வொரு போதனைகளிலும் " மனிதனுக்கு பட்டம், பதவி, பணம் இவற்றைவிட செபம் என்பது மிகவும் அவசியமானது. செபிக்காதவன் இறந்தவன்; நம் செபம் இவ்வுலகில் மணம் வீச வேண்டும்" என்று தவறாமல் கூறுவார். அவ்வாறு ஒருநாள் போதித்து முடித்தபிறகு, மிக அமைதியாக அமர்ந்தபோது, எவ்வித சலசலப்புமின்றி ஆழ்ந்த அமைதியில் இறைவனடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment