கவிதை...
மாற்றங்கள் அவசியமே…
பொதுக்காலம் 18வது வாரம்
(
மாறிவரும்
இவ்வுலகில்
மாற்றங்களுக்குப் பஞ்சமில்லை
எதிலும் மாற்றம்
எதற்கெடுத்தாலும் மாற்றம்
நிலையான வாழ்வு வாழ்வதில்
அக்கறையில்லாமல்
நிதானமாய் வாழ்வைப்
பேணாமல்
நிமிடநேர மகிழ்ச்சியில்
வாழ்வை அனுபவிக்கும்
எத்தனையோ மனிதர்கள்
நிழல்களுக்கு ஆராதனை செய்துவிட்டு
நிஜங்களை ஓரங்கட்டும்
ஊனக் கலாச்சாரத்தில்
உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
வறுமையை ஒழிக்க
வழித்தேடாமல்
அடுத்தவரை வசைபாடுவதும்
துன்பத்தை விலக்கிட
துணிவை நாடாமல்
மற்றவர்களைத் தூற்றுவதும்
வதங்கிகளைப் புறந்தள்ளாமல்
குளிர்காய்வதும்
அன்றாட வாழ்வில்
தோன்றிவிட்ட அவசியமற்ற செயல்கள்…
காலத்தின் அறிகுறி அறிந்து
நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து
மாற்றங்களைக் கொண்டுவர
பாதையமைக்கிறது
இன்றைய இறைவாக்கு வழிபாடு!
மாற்றங்களுக்கு மத்தியில்
மகத்துவத்தைக் கண்டு மகிழ
மாற்றங்களுக்கு இடையில்
மாண்பினை உணர்ந்து வாழ
இறைவன் நம்மை அழைக்கிறார்…
தன்னுடைய வாழ்வு
எதற்காக
அது எப்படிப்பட்ட என்பதை
தெளிவாய் சொல்கிறார் இறைமகன்….
இத்தகைய தெளிவுதான்
உருமாற்ற விழா எடுத்துரைக்கும்
முதல் பாடம்!
தெளிவற்ற மனநிலை மாறி
தெளிவு நம்மில் உதிக்க வரம் வேண்டும்
மிகுதியான செயல்களைச்
செய்வதில் அல்ல சரியானவற்றை
அணுகுவதில்தான் வாழ்வின் சாரமுண்டு
இத்தகு தன்மையே
இன்றைய விழாவின் இரண்டாவது பாடம்!
தேர்ந்தெடுப்பதில் எப்போதுமே
சரியானவற்றை அணுகுவது
உருமாற்றத்தின் அடையாளம்
இயேசுவும் தன்னுடைய
சரியான பாதையைத்
தன் சீடர்களிடம் காண்பிக்கிறார்…
இவ்விழா சுட்டிக்காட்டும்
மூன்றாவது பாடம்!
கடவுளின் பிள்ளையாய் வாழ்தல்
துன்பங்கள் சூழ்;ந்தாலும்
மகிழ்ச்சி மேலிட்டாலும்
வருத்தத்தங்கள் வந்தாலும்
துயரங்கள் அழுத்தினாலும்
நம் வாழ்க்கை இறைவனுக்கு
உகந்ததாய் அமைகையில்
அது தந்தையின் விருப்பமாய் மாறுகிறது
அவரின் திட்டத்தில் நுழைகிறது
அவரின் செயலில் உதிக்கிறது
ஆகவே நம் செயல்பாடுகள்கூட
இறைத்தந்தையின் இல்லிடமாய் மாறுகிறது
இதுவே நம்மை அவர் பிள்ளையாக்குகிறது!
உண்மை தென்படாதவரை
பொய்மையையே
உண்மையென்று நம்புவது
நம் வழக்கமாயிற்று!
இதை மாற்றவே
இன்றைய விழா
நான்காவது பாடத்தை அறிமுகப்படுத்துகிறது
அது – உண்மையை அறிந்து கொள்ளுதல்
அரசாட்சியில் பங்கேற்கலாம்
இயேசுவின் ஆட்சியில்
பதவி வகிக்கலாம் என்ற
ஆசையில் அவனியில் வலம் வந்தவர்
இறைமகனின் நிலையை
அவரின் உண்மைநிலையை அறிந்துகொள்கிறார்
இதுவே தாபோர் மலை அனுபவம்!
நாமும் உண்மையை அறிந்திட
படைக்கப்பட்டவர்கள்
ஆனால் உண்மையைவிடுத்து
உறவுகளை நேசிப்பதும்
உணர்வுகளை சோதிப்பதும்
நம் எதார்த்தமாகிவிட்டது!
காலத்தின் கட்டாயம்
நாம் தாபோர் மலைக்குச் செல்வது
விரைவாய் புறப்படுவோம்
இகமதில் உறுதி எடுப்போம்
உண்மையை அறிந்து
சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து
தெளிவு பெறுவோம்
கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வோம்
அப்போது
நமக்கும் கேட்கும்:
‘இவரே என் அன்பார்ந்த மகன்ஃமகள்’
- ஆமென்!
மாற்றங்கள் அவசியமே…
பொதுக்காலம் 18வது வாரம்
(
மாறிவரும்
இவ்வுலகில்
மாற்றங்களுக்குப் பஞ்சமில்லை
எதிலும் மாற்றம்
எதற்கெடுத்தாலும் மாற்றம்
நிலையான வாழ்வு வாழ்வதில்
அக்கறையில்லாமல்
நிதானமாய் வாழ்வைப்
பேணாமல்
நிமிடநேர மகிழ்ச்சியில்
வாழ்வை அனுபவிக்கும்
எத்தனையோ மனிதர்கள்
நிழல்களுக்கு ஆராதனை செய்துவிட்டு
நிஜங்களை ஓரங்கட்டும்
ஊனக் கலாச்சாரத்தில்
உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
வறுமையை ஒழிக்க
வழித்தேடாமல்
அடுத்தவரை வசைபாடுவதும்
துன்பத்தை விலக்கிட
துணிவை நாடாமல்
மற்றவர்களைத் தூற்றுவதும்
வதங்கிகளைப் புறந்தள்ளாமல்
குளிர்காய்வதும்
அன்றாட வாழ்வில்
தோன்றிவிட்ட அவசியமற்ற செயல்கள்…
காலத்தின் அறிகுறி அறிந்து
நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து
மாற்றங்களைக் கொண்டுவர
பாதையமைக்கிறது
இன்றைய இறைவாக்கு வழிபாடு!
மாற்றங்களுக்கு மத்தியில்
மகத்துவத்தைக் கண்டு மகிழ
மாற்றங்களுக்கு இடையில்
மாண்பினை உணர்ந்து வாழ
இறைவன் நம்மை அழைக்கிறார்…
தன்னுடைய வாழ்வு
எதற்காக
அது எப்படிப்பட்ட என்பதை
தெளிவாய் சொல்கிறார் இறைமகன்….
இத்தகைய தெளிவுதான்
உருமாற்ற விழா எடுத்துரைக்கும்
முதல் பாடம்!
தெளிவற்ற மனநிலை மாறி
தெளிவு நம்மில் உதிக்க வரம் வேண்டும்
மிகுதியான செயல்களைச்
செய்வதில் அல்ல சரியானவற்றை
அணுகுவதில்தான் வாழ்வின் சாரமுண்டு
இத்தகு தன்மையே
இன்றைய விழாவின் இரண்டாவது பாடம்!
தேர்ந்தெடுப்பதில் எப்போதுமே
சரியானவற்றை அணுகுவது
உருமாற்றத்தின் அடையாளம்
இயேசுவும் தன்னுடைய
சரியான பாதையைத்
தன் சீடர்களிடம் காண்பிக்கிறார்…
இவ்விழா சுட்டிக்காட்டும்
மூன்றாவது பாடம்!
கடவுளின் பிள்ளையாய் வாழ்தல்
துன்பங்கள் சூழ்;ந்தாலும்
மகிழ்ச்சி மேலிட்டாலும்
வருத்தத்தங்கள் வந்தாலும்
துயரங்கள் அழுத்தினாலும்
நம் வாழ்க்கை இறைவனுக்கு
உகந்ததாய் அமைகையில்
அது தந்தையின் விருப்பமாய் மாறுகிறது
அவரின் திட்டத்தில் நுழைகிறது
அவரின் செயலில் உதிக்கிறது
ஆகவே நம் செயல்பாடுகள்கூட
இறைத்தந்தையின் இல்லிடமாய் மாறுகிறது
இதுவே நம்மை அவர் பிள்ளையாக்குகிறது!
உண்மை தென்படாதவரை
பொய்மையையே
உண்மையென்று நம்புவது
நம் வழக்கமாயிற்று!
இதை மாற்றவே
இன்றைய விழா
நான்காவது பாடத்தை அறிமுகப்படுத்துகிறது
அது – உண்மையை அறிந்து கொள்ளுதல்
அரசாட்சியில் பங்கேற்கலாம்
இயேசுவின் ஆட்சியில்
பதவி வகிக்கலாம் என்ற
ஆசையில் அவனியில் வலம் வந்தவர்
இறைமகனின் நிலையை
அவரின் உண்மைநிலையை அறிந்துகொள்கிறார்
இதுவே தாபோர் மலை அனுபவம்!
நாமும் உண்மையை அறிந்திட
படைக்கப்பட்டவர்கள்
ஆனால் உண்மையைவிடுத்து
உறவுகளை நேசிப்பதும்
உணர்வுகளை சோதிப்பதும்
நம் எதார்த்தமாகிவிட்டது!
காலத்தின் கட்டாயம்
நாம் தாபோர் மலைக்குச் செல்வது
விரைவாய் புறப்படுவோம்
இகமதில் உறுதி எடுப்போம்
உண்மையை அறிந்து
சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து
தெளிவு பெறுவோம்
கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வோம்
அப்போது
நமக்கும் கேட்கும்:
‘இவரே என் அன்பார்ந்த மகன்ஃமகள்’
- ஆமென்!
No comments:
Post a Comment