அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?'

''பேதுரு இயேசுவை அணுகி, 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?' எனக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம் கூறியது: 'ஏழுமுறை மட்டுமல்ல;
எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்' (மத்தேயு 18:21-22)

நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால் நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிப்பதைப் பொறுத்தே நமக்குக் கடவுளின் மன்னிப்பும் கிடைக்கும் என இயேசு நமக்குக் கற்றுத் தந்த இறைவேண்டலில் கூறுகிறார் (காண்க: மத் 6:14-15). இருப்பினும், எத்தனை முறை பிறரை மன்னிக்க வேண்டும் என்னும் கேள்வியைப் பேதுரு எழுப்புகிறார். மன்னிப்புக்கு எல்லையே இல்லையா? ஏழு முறை மன்னித்தால் போதுமா? இவ்வாறு பேதுரு கேட்ட கேள்வியில் அடங்கியுள்ள பொருளைப் பார்ப்போம். நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மூன்று முறை மன்னிக்க வேண்டும் என்பது யூத அறிஞர்கள் தந்த வழிமுறை. அப்பின்னணியில் ''ஏழு முறை மன்னித்தால் போதுமா?'' என பேதுரு கேட்டது அவருடைய தாராள உள்ளத்தையே காட்டுகிறது. மன்னிப்பின் தேவையையும் சிறப்பையும் உணர்த்த இயேசு பேதுருவுக்கு ஒரு கதை சொல்லி விளங்கவைக்கிறார். பெரும் தொகையை ஓர் அரசரிடமிருந்த கடனாகப் பெற்ற பணியாளர் தன் கடனைச் செலுத்த இயலாதிருந்தபோது அவருக்குக் கடன்கொடுத்த அரசர் அதைத் தாராள மனம் கொண்டு மன்னித்துவிடுகிறார். ஆனால் இவ்வாறு மன்னிக்கப்பட்ட அந்த மனிதர் வேறு ஒருவருக்கு ஒரு சிறிய தொகையையே கடனாகக் கொடுத்திருந்தார். அச்சிறிய கடனைத் திருப்பிக்கொடுக்க இயலாத மனிதரை ஏற்கெனவே பெரும் கடன் நீக்கப்பட்ட மனிதர் மன்னிக்க முன்வரவில்லை. இதைக் கேள்விப்பட்ட அரசர் கோபமடைகிறார்; மன்னிக்க மறுத்த பணியாளருக்குத் தாமும் மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறிவிடுகிறார். இக்கதை வழியாக இயேசு உணர்த்தகின்ற உண்மைகள் இரண்டு. முதலில், கடவுள் நம் பாவம் என்னும் கடனைத் தாராள உள்ளத்தோடு மன்னித்திருக்கின்றார். எனவே, நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும் மனிதரை மனதார மன்னிக்க வேண்டும்.

-- இவ்வாறு மன்னிப்பதற்கு நாம் எவ்வித எல்லைக் கோடுகளையும் இடலாகாது. எத்தனை தடவை மன்னிப்பது என்று கேட்பதே பொருத்தமற்றது. ஏனென்றால் கடவுள் நம் பாவங்களை எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்பதில்லை. மாறாக, அவர் நம் பாவங்களை எப்போதுமே மன்னிக்கிறார். அதுபோல, நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை எப்போதுமே மன்னிக்க வேண்டும். ''ஏழு முறை மன்னிப்பதா?'' என்று பேதுரு நல்ல மனத்தோடுதான் கேட்டார். ஆனால் இயேசு ''எழுபது தடவை ஏழுமுறை மன்னிக்க வேண்டும்'' என்று கூறி, மன்னிப்பின் தேவையை உணர்த்தினார். அதாவது, எத்தனை தடவை மன்னித்தேன் என்று கணக்குப் போடுவதே சரியல்ல என்பது இயேசுவின் போதனை. மேலும் இயேசு மன்னிப்பின் தேவை பற்றிக் கூறிய கதையில் வருகின்ற இரு கடன் தொகைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. அரசரிடமிருந்து பணியாளர் பெற்ற கடன் மிக மிகப் பெரிது. இக்கால வழக்கில் கூறுவதாக இருந்தால் அது கோடிக் கணக்கான ரூயஅp;பாய் கடன் எனலாம். இரண்டாவது மனிதர் செலுத்த வேண்டிய கடன் தொகை நுறு நாள் வேலைக் கூலிக்குச் சமம். எனவே பிறர் நமக்கு எதிராகச் செய்கின்ற சிறிய குற்றத்தை நாம் மன்னிக்காவிட்டால் நாம் கடவுளுக்கு எதிராகச் செய்கின்ற பெரும் குற்றத்தைக் கடவுளும் மன்னிக்க மாட்டார் என்பது பொருள். இது ஒருசில தடவை வழங்கப்படுகின்ற மன்னிப்பு அல்ல. மாறாக, கடவுள் நம் பாவங்களை ஏற்கெனவே மன்னித்துவிட்டதால் நாமும் பிறருடைய குற்றங்களை ஒருசில முறை மட்டுமன்றி, எப்போதுமே மன்னிக்க வேண்டும். கடவுள் நம்மீது ''பரிவு'' கொண்டது போல (மத் 18:27) நாமும் பிறர்மீது பரிவுகொண்டு, அவர்களை ''மனமார'' மன்னிக்க அழைக்கப்படுகிறோம் (மத் 18:35).

மன்றாட்டு
இறைவா, பிறர் குற்றங்களை நாங்கள் எப்போதும் மன்னிக்க எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

No comments:

Post a Comment