அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, July 24, 2024

புனித சிம்மாக்குஸ்

புனித சிமாக்கஸ்

பிறப்பிடம் : சார்டினியா, இத்தாலி

விழா: ஜூலை 19

ஆட்சி துவக்கம்22 நவம்பர் 498
ஆட்சி முடிவு19 ஜூலை 514

ஒரு தலைவராக:

ஐந்தாம் நுற்றாண்டில் சார்டினிய தீவினில் சிம்மக்கஸ் பிறந்தார். புற சமயத்தைச் சார்ந்தவரான இவர், உரோமையில் திருமுழுக்குப் பெற்றார். பின்னர் அங்கே உரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பெருவாரியான சமயக் குருமார்கள், இரண்டாம் அனஸ்தாசியாஸ் திருத்தந்தையைத் தொடர்ந்து, இவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். என்றாலும், அதே நாளில் பிரிவினை சகோதார்கள் லாரன்ஸ் என்ற தூய பிராக்ஸிதஸ் பெரிய குருவை திருத்தந்தையாகத் தேர்தெடுத்தனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர, இந்த இரண்டு எதிர் வாரிசுகளும் இராவன்னாவின் தியோடோரிக் அரசரிடம் முறையிடடனர். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் பெரும்பான்மை பெற்றிருந்ததாலும் சிம்மாகஸை அராச தியோடோரிக் தேர்ந்தெடுத்தார்.

சிம்மாக்ஸ் உடனே உரோமையில்ஒரு குருமார் பேரவைவைக் கூட்டி, ஒரு திருத்தந்தை அவருடைய வாரிசை தெரிவு செய்யவில்லையென்றால், புதிய திருத்தந்தை குருக்களின் பேரவை தெரிவு செய்யும். மேலும் கோபமடைந்த லாரன்ஸின் ஆதரவாளர்கள் புதிய திருத்தந்தையை ஒழுக்கக்கேடு முதலான குற்றச்சாட்டுகளால் அவமதித்தனர்.

பதவிக்காக போராட்டம்:

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் சிம்மாக்கஸ் புனித பீட்டர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தார். இன்னுமொரு போப்பாண்டவர் பேரவை கூடும் வரைக்கும், அந்த அரசருக்கு வேறொறு தற்காலிக போப்பாணவரைத் நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. 502ஆம் ஆண்டு, நீண்ட விவாதத்திற்குப் பின்னர், சிம்மாக்கஸ் தவறுசெய்யவில்லையென்று குருக்கள் பேறவை விடுவித்தது என்றாலும் இந்தக் குழப்பம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடித்தது அவரது எதிரிகளால் புரட்சி ஏற்படும் சூழலில், சிம்மாக்கஸ் புனித பீட்டர் ஆலயத்தில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியாக 506ஆம் ஆண்டு, சிமாக்கஸ் குற்றமற்றவர் என்று அந்த அரசர் ஒப்புக்கொண்டு அவரைத் திரும்பவும் திருத்தந்தையாக நியமரித்தார்.

சிம்மாகஸ் தொடர்ந்து திருத்தந்தபுறுத்தப்பட்ட கத்தோலிக்கருக்கும், சொத்துக்களை இழந்த சிறைக் கைதிகளுக்கும் அவர் இழப்பீடுகள் வழங்கினார். உரோமில் பழுதடைந்த ஆலயங்களை சீர்படுத்தினார். அகதிகளுக்கு உறைவிடம் அமைத்துக்கொடுத்தார். 514ஆம் ஆண்டு உயிர்நீத்தார். உரோமில் பீட்டர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

செபம்:

அன்புள்ள ஆண்டவரேஈ இந்த உலகின் அநீதிகள் என்னைச் சூழ்ந்துள்ள நிலையில், எனது நம்பிக்கையையும் மனஉறுதியையும் நிலைநிறுத்கத்ககொள்ள திடன் அளித்தருளும். என்னை தடைகள் வந்தாலும் உமது நிறைந்த அருளால், நான் உமது திட்டத்தை நிறைவேற்றுவேன. எனது ஆன்ம பலத்தை அதிகரிக்க நீர் எமது ஆழ மனதில் தங்கியிருந்து உமது மாண்பை வெளிப்படுத்தும்.

அவர்களது அடிச்சுவடில்:

எதிர்ப்புகள் பலவற்றை எதிர்கொண்டாலும், சமமாகஸ் தேவையிலிருப்போருக்கு உதவிகள் செய்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, உலகில் நோயுற்றிருப்போருக்கு உதவிகள் செய்யவேண்டிய அவசியத்தை ஜெர்ரி பிரோ என்பவர் உணர்நதார். பொம்மைக் கடை ஒன்றில் வேலைசெய்தால், வெனிசுலாவுக்கு அடிக்கடி அவர் செல்ல வேண்டியதாயிருந்தது. அங்குள்ள உறுமை நிலையைக் கண்டு அவர் நடு நடுக்கினர். ஒரு பயணத்தின்போது எட்வின் கார்சியா என்ற ஒரு இளம் மருத்துவரை சந்தித்தார். இவர் மருத்துவ கருவிகள், மருந்துகள் அதிகம் இல்லாத மருத்துவக்கூடம் வைத்திருந்தார். பணஉதவி மட்டும் செய்யாமல் 1995ஆம் ஆண்டு ஜெர்ரி ஒரு மருத்துவ பள்ளியில் இணைந்து, மனித உரிமை மருத்துவ இடர் காப்புதவி என்ற தன்னார்வ உதவி மையத்தை ஏற்படுத்தி பின்தங்கிய நாடுகளில் மருத்துவ சேவையாற்றினார்.

No comments:

Post a Comment