திருவருகை காலத்தில் ஆண்டவரின் வருகையை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இயேசுவின் வருகையில் மகிழ்ச்சியையும், அவர் உலகிற்கு கொண்டு வந்த அமைதியையும் பெறுகின்றனர். எனவே, இது அமைதியின் காலம் ஆகும்.
திருவருகைக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம் ஆகும். இயேசுவின் முதலாம் வருகையைக் கொண்டாடுவதற்கும், அவரது இரண்டாம் வருகையை எதிர்நோக்குவதற்கும் உரிய தயாரிப்பு காலமாக இது அமைந்துள்ளது. இது கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று தொடங்கி, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முன்தினம் அன்று முடிவடைகிறது.
கிறிஸ்து பிறப்புக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது கிறிஸ்து பிறப்பு பெருவிழா அன்று தொடங்கி, ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுக்கு முன்தினம் முடிவடைகிறது.
No comments:
Post a Comment