கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கங்கள்
கிறித்தவத்தின் தொடக்க காலம் (284–476)
முதலாம் நிசேயா பொதுச்சங்கம்
முதலாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
எபேசு பொதுச்சங்கம்
கால்செதோன் பொதுச்சங்கம்
முந்திய நடுக் காலம் (476–1000)
இரண்டாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
மூன்றாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
இரண்டாம் நிசேயா பொதுச்சங்கம்
நான்காம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
இடை நடுக் காலம் (1000–1300)
முதலாம் இலாத்தரன் பொதுச்சங்கம்
இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம்
மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்க்ம்
நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம்
முதலாம் இலயன்ஸ் பொதுச்சங்கம்
இரண்டாம் இலயன்ஸ் பொதுச்சங்கம்
பிந்திய நடுக் காலம் (1300–1500)
வியென்னா பொதுச்சங்கம்
காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்
பெர்ராரா-புளோரன்சு பொதுச்சங்கம்
முந்திய நவீன காலம் (1500–1600)
ஐந்தாம் இலாத்தரன் பொதுச்சங்கம்
திரெந்து பொதுச்சங்கம்
19ஆம் 20ஆம் நூற்றாண்டுகள்
முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
கத்தோலிக்க திருச்சபை
முதல் எட்டு பொதுச்சங்கங்கள்
திரெந்து பொதுச்சங்கம்
முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்
கிறித்தவத்தின் தொடக்க காலம் (284–476)
முதலாம் நிசேயா பொதுச்சங்கம்
முதலாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
எபேசு பொதுச்சங்கம்
கால்செதோன் பொதுச்சங்கம்
முந்திய நடுக் காலம் (476–1000)
இரண்டாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
மூன்றாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
இரண்டாம் நிசேயா பொதுச்சங்கம்
நான்காம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம்
இடை நடுக் காலம் (1000–1300)
முதலாம் இலாத்தரன் பொதுச்சங்கம்
இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம்
மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்க்ம்
நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம்
முதலாம் இலயன்ஸ் பொதுச்சங்கம்
இரண்டாம் இலயன்ஸ் பொதுச்சங்கம்
பிந்திய நடுக் காலம் (1300–1500)
வியென்னா பொதுச்சங்கம்
காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்
பெர்ராரா-புளோரன்சு பொதுச்சங்கம்
முந்திய நவீன காலம் (1500–1600)
ஐந்தாம் இலாத்தரன் பொதுச்சங்கம்
திரெந்து பொதுச்சங்கம்
19ஆம் 20ஆம் நூற்றாண்டுகள்
முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள் என்பவை, கிறிஸ்தவ சமயத்தின் நம்பிக்கையைப் பற்றி உலகளாவிய திருச்சபையின் ஆயர்கள் மற்றும் இறையியல் அறிஞர்கள் ஒன்று கூடி விவாதித்து தீர்வு காணும் நிகழ்வுகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபையின் கணிப்புப்படி, இதுவரை மொத்தம் 21 பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன.
கத்தோலிக்க திருச்சபை
பொதுச்சங்கம் என்பது திருச்சபை வாழ்வு பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்க, உலகளாவிய திருச்சபையின் ஆயர்கள் ஒன்று கூடும் செயலாகும். கிறிஸ்தவ வரலாற்றில் நடைபெற்ற 21 திருச்சங்கங்களை, பொதுவாக கத்தோலிக்க திருச்சபை பொதுச்சங்கங்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. தொடக்க காலப் பொதுச்சங்கங்களைத் தவிர்த்து, கத்தோலிக்க வரலாற்றில் முக்கியமானவையாக கருதப்படுபவை இரண்டு பொதுச்சங்கங்கள். அவை, 1. திரெந்து பொதுச்சங்கம், 2. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்.
முதல் எட்டு பொதுச்சங்கங்களும் (325-870) உரோமைப் பேரரசின் தலைநகராக கீழைப் பகுதியில் விளங்கிய கான்ஸ்தாந்திநோபுளைச் சூழ்ந்த இடங்களில் உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. நிசேயா நம்பிக்கை அறிக்கை தவிர மூவொரு கடவுளின் இயல்பு, கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள், தூய ஆவியின் இறை இயல்பு, மரியா கடவுளின் தாயாக இருக்கிறார் போன்ற நம்பிக்கை உண்மைகள் இந்த பொதுச்சங்கங்களில்தான் கிரேக்க மெய்யியல் பின்னணியில் துல்லியமாக வரையறுக்கப்பட்டது. இந்த எட்டு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும் கீழே தரப்படுகின்றன.
வரிசை | பொதுச்சங்கம் | ஆண்டு | முக்கிய விவாதப்பொருள் - முடிவு |
---|---|---|---|
1 | நிசேயா 1 | 325 | கிறிஸ்துவின் இறை இயல்பு |
2 | கான்ஸ்தாந்திநோபுள் 1 | 381 | தூய ஆவியின் இறை இயல்பு |
3 | எபேசு | 431 | மரியா கடவுளின் தாய் |
4 | கால்செதோன் | 451 | கிறிஸ்துவின் மனித - இறை இயல்புகள் |
5 | கான்ஸ்தாந்திநோபுள் 2 | 553 | நெஸ்தோரியு கண்டனம் செய்யப்படல் |
6 | கான்ஸ்தாந்திநோபுள் 3 | 680-681 | கிறிஸ்துவின் மனித - இறை இயல்புகள் |
7 | நிசேயா 2 | 797 | சொரூப வணக்கம் |
8 | கான்ஸ்தாந்திநோபுள் 4 | 869-870 | ஃபோசியுஸ் கண்டனம் செய்யப்படல் |
அடுத்த ஏழு பொதுச்சங்கங்கள்
அடுத்து நடைபெற்ற ஏழு பொதுச் சங்கங்களும் (1113-1312) உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்தன. கிரேக்க மொழியின் இடத்தை இலத்தீன் மொழி பிடித்துக்கொண்டது. திருச்சபையும் அரசு சமூகமும் ஒன்றோடொன்று நெருங்கிய விதத்தில் பிணைந்திருந்த காலமது. திருத்தந்தையர் இச்சங்கங்களைக் கூட்டினர். இவை பெரும்பாலும் திருச்சபையில் நிலவிய சீர்கேடுகளைத் திருத்தவும் ஒழுங்கு கொணரவும் கூட்டப்பெற்றன. இந்த ஏழு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும் கீழேத் தரப்படுகின்றன.
வரிசை | பொதுச்சங்கம் | ஆண்டு | முக்கிய விவாதப்பொருள் - முடிவு |
---|---|---|---|
9 | இலாத்தரன் 1 | 1123 | திருச்சபை சீர்திருத்தம் |
10 | இலாத்தரன் 2 | 1139 | பிளவு தவிர்த்தல் |
11 | இலாத்தரன் 3 | 1179 | திருத்தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் நிர்ணயிக்கப்படல் |
12 | இலாத்தரன் 4 | 1215 | பாஸ்கா கடன் |
13 | இலயன்ஸ் 1 | 1245 | மன்னர் 2 ஆம் ஃபிரடெரிக் பதவி நீக்கம் |
14 | இலயன்ஸ் 2 | 1274 | கிரேக்கர்களோடு ஒன்றிப்பு |
15 | வியென்னா | 1312 | திருச்சபை சீர்திருத்தம் |
தொடர்ந்து நிகழ்ந்த மூன்று பொதுச் சங்கங்கள் (1414-1517) திருச்சபையில் ஏற்பட்ட பெரும்பிளவைச் சீர்படுத்த முனைந்தன. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பேர் தம்மையே திருத்தந்தையாகக் கருதியதால் திருச்சபையில் பெரும் பிளவு தோன்றியது. மேலும், திருச்சபையை ஒரு குடியரசு போலக் கருதிய சிலர் பொதுச் சங்கம் திருந்தந்தையைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என்று வாதாடியதால் குழப்பங்கள் ஏற்படலாயின. இத்தகைய குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் இச்சங்கங்கள் நடைபெற்றன. இந்த மூன்று பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும் கீழே தரப்படுகின்றன.
வரிசை | பொதுச்சங்கம் | ஆண்டு | முக்கிய விவாதப்பொருள் - முடிவு |
---|---|---|---|
16 | கான்ஸ்தான்சு | 1414-1418 | மேலைப் பெரும்பிளவுக்கு முற்றுப்புள்ளி |
17 | பெர்ராரா-புளோரன்ஸ் | 1437-1445 | கீழைச்சபையினரோடு ஒன்றிப்பு |
18 | இலாத்தரன் 5 | 1512-1517 | திருச்சபை சீர்திருத்தம் |
16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற திரிதெந்து பொதுச்சங்கம் (1545-1563) பல அரசியல் சிக்கல்களுக்கும் லூத்தர், கால்வின், ஸ்விங்கிலி போன்ற சீர்திருத்தவாதிகளின் தாக்குதல்களுக்குமிடையே நிகழ்ந்தது. இச்சங்கத்தின் வெவ்வேறு அமர்வுகளில் எல்லா ஆயர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் சங்கமோ திருச்சபை அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது. சீர்திருத்தவாதிகள் விவாதத்துக்கு உட்படுத்திய கருத்துகளை, குறிப்பாக அருளடையாளங்கள், அருள், திருச்சபை ஆட்சி அமைப்பு, மீட்பு, நம்பிக்கை போன்றவற்றைச் சங்கம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஆயினும் சீர்திருத்தவாதிகளின் உண்மையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிய சங்கத்தில் அவ்வளவு முயற்சி செய்யப்படவில்லை. குறைகாணும் மனப்பான்மை மேலோங்கி காணப்பட்டது. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாத-முடிவுகளாக இவற்றைக் குறிப்பிடலாம்:
வரிசை | பொதுச்சங்கம் | ஆண்டு | முக்கிய விவாதப்பொருள் - முடிவு |
---|---|---|---|
19 | திரெந்து | 1545-1563 | சீர்திருத்தச் சபையினருக்கு எதிர்ப்பு, திருச்சபை சீர்திருத்தம் |
திரிதெந்துப் பொதுச் சங்கம் முடிவடைந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னரே முதலாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. 'திருச்சபை' என்ற பொருள்பற்றி விவாதிக்க கூடிய, இச்சங்கம் திருத்தந்தையின் முதன்மை மற்றும் வழுவாவரம் என்பவற்றை வரையறுத்ததோடு நின்றுவிட்டது. முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஒருசில மாதங்களே நிகழ்ந்தது. (8 டிச 1869-18 ஜூலை 1870). பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஒத்திப் போடப்பட்டது. அதிகாரப் பூர்வமாக அது முடிவுக்குக் கொணரப்படவில்லை. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாத-முடிவுகளாக இவற்றைக் குறிப்பிடலாம்:
வரிசை | பொதுச்சங்கம் | ஆண்டு | முக்கிய விவாதப்பொருள் - முடிவு |
---|---|---|---|
20 | வத்திக்கான் 1 | 1869-1870 | உரோமை ஆயரின் முதன்மை, வழுவா வரம் |
2ஆம் வத்திக்கான் பொதுச்சங்கம்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் 1962-1965 ஆண்டுகளில் வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்த பொதுச்சங்கப் பேரவைக் கூட்டத்தில் உலகனைத்திலுமிருந்து வந்த கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர். இம்மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பொதுச்சங்கம், எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை உண்மையை வரையறுக்கவோ தப்பறைகளைக் கண்டனம் செய்யவோ கூட்டப்படவில்லை. மாறாக, பிற கிறிஸ்தவச் சபைகளோடு உறவு ஏற்படுத்தல், உலக சமயங்களோடும் எல்லா மக்களோடும் இன்றைய உலகோடும் உரையாடலில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூட்டப்பட்டது. இப்பொதுச்சங்கத்தின் செயல்திட்டம் திருச்சபையின் உள்வாழ்வு பற்றியும் உலகோடு திருச்சபைக்குள்ள உறவு பற்றியும் அமைந்தது. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாதப்பொருளாக இதைக் குறிப்பிடலாம்:
வரிசை | பொதுச்சங்கம் | ஆண்டு | முக்கிய விவாதப்பொருள் |
---|---|---|---|
21 | வத்திக்கான் 2 | 1962-1965 | உலகோடு உரையாடும் திருச்சபை |
1. திருவழிபாடு, 2. சமூகத் தொடர்புக் கருவிகள், 3. திருச்சபை, 4. கத்தோலிக்கக் கீழைச் சபைகள், 5. கிறிஸ்தவ ஒன்றிப்பு, 6. திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி, 7. துறவற வாழ்வைப் புதுப்பித்தல், 8. திருப்பணிப் பயிற்சி, 9. கிறிஸ்தவக் கல்வி, 10. கிறிஸ்தவமல்லாச் சமயங்ளோடு திருச்சபைக்குள்ள உறவு, 11. இறை வெளிப்பாடு, 12. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி, 13. சமயச் சுதந்திரம், 14. திருச்சபையின் நற்செய்திப்பணி, 15. திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும், 16. இன்றைய உலகில் திருச்சபை ஆகிய பதினாறு பொருள்கள் ஆராயப்பட்டு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானத் தொகுப்புகளாக செயலாக்கப்பட பதினாறு ஏடுகள் வெளியிடப்பட்டன. சங்க ஏடுகள் என்று அழைக்கப்படும் அவை, நவீன உலகத் திருச்சபைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக அமைந்துள்ளன.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கிறித்தவ வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பெயர்களும், அவை நடைபெற்ற காலமும் இடமும் அவற்றில் விவாதிக்கப்பட்ட முக்கிய பொருள்களும் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.
வரிசை எண்
|
பொதுச்சங்கத்தின் பெயர்/
நடைபெற்ற இடம் |
காலம்
|
முக்கிய விவாதப் பொருள்/முடிவு
|
1.
|
325
|
இயேசு கிறிஸ்து உண்மையிலேயே கடவுளும் மனிதருமாவார். இயேசுவின்
இறைத்தன்மையை மறுத்த ஆரியுசு என்பவரின் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. கிறித்தவ நம்பிக்கை அறிக்கை தொகுக்கப்பட்டது.
|
|
2.
|
381
|
நிசேயா
சங்கம் தொகுத்த நம்பிக்கை அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. தூய
ஆவி இறைத்தன்மை
கொண்டவர் என்னும் உண்மை அறிவிக்கப்பட்டது.
|
|
3.
|
431
|
||
4.
|
451
|
ஒரே "ஆள்" என விளங்கும் இயேசு கிறிஸ்து கடவுள் தன்மையும்
மனிதத் தன்மையும் கொண்டவர்.
|
|
5.
|
553
|
||
6.
|
680-681
|
||
7.
|
797
|
இதற்கு முன் நிகழ்ந்த 6 பொதுச்சங்கங்களின் தொகுப்பு.
கடவுளுக்கு மட்டுமே வழிபாடு (adoration) உரித்தானது; புனிதருக்கு "வணக்கம்" (veneration) செலுத்தப்படுகிறது.
|
|
8.
|
869-870
|
||
9.
|
1123
|
நாட்டு அதிகாரிகள் திருச்சபை ஆயர்களை நியமித்தல் தடைசெய்யப்பட்டது.
குருக்களின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொணரப்பட்டது.
|
|
10.
|
1139
|
இறைவழிபாடு சார்ந்த ஆன்மிக நலன்கள் விலைபேசுதலும், அநியாய வட்டி வாங்கலும் கண்டிக்கப்பட்டன.
|
|
11.
|
1179
|
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரு பகுதி
கர்தினால்மாரின் வாக்குகள் தேவை என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
|
|
12.
|
1215
|
திருத்தந்தையின் உலகுசார் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் பல
சீர்திருத்தங்கள் கொணரப்பட்டன.
|
|
13.
|
1245
|
திருச்சபையின் உள்ளாட்சியில் தலையிட்ட மன்னர் 2ஆம் பிரடெரிக் பதவி நீக்கப்பட்டார்.
|
|
14.
|
1274
|
மேற்கு சபையும் கிழக்கு சபையும் ஒன்றிக்க முயற்சி.
|
|
15.
|
1311-1312
|
திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட் உரோமை நகரை விட்டுத் திருச்சபைத் தலைமையகத்தை
அவிஞ்ஞோன் என்னும் நகருக்கு மாற்றியதோடு பிரான்சில் உள்ள வீயேன் நகரில்
பொதுச்சங்கத்தைக் கூட்டினார். சிலுவைப் போர்ச் செலவுக்காக வரிவிதிக்கப்பட்டது.
குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பதன் தேவை வலியுறுத்தப்பட்டது.
|
|
16.
|
1414-1418
|
மேற்குத் திருச்சபையில் ஏற்பட்ட பெரும்
பிளவை (1378-1417) நீக்க இச்சங்கம் கூட்டப்பட்டது. இதைக் கூட்டிய எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் உட்பட திருத்தந்தையாக உரிமை
பாராட்டிய வேறு இருவரும் பதவியிறக்கப்பட்டனர். இச்சங்கம் ஜான் விக்ளிஃப், ஜான் ஹுஸ் என்னும் கிறித்தவ சீர்திருத்தவாதிகளைக் கண்டனம் செய்தது. சில
தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து, இயேசு
கிறித்து அப்ப இரச வடிவங்களில் உண்மையாகவே உடனிருக்கின்றார் என்னும் கிறித்தவக்
கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு, அறிக்கையிடப்பட்டது.
|
|
17.
|
1438-1445
|
இச்சங்கம் முதலில் பெர்ராரா நகரிலும், பின்னர்
புளோரன்சு நகரிலும் அதன்பின் உரோமையிலும் கூடியது. கிரேக்க சபை உட்பட கீழைச்
சபைகள் பலவற்றோடு உரோமைச் சபை ஒன்றிப்பு ஏற்படுத்தியது. திருத்தந்தை
அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது வழுவாவரம் கொண்டுள்ளார் என்னும் கொள்கை
பொதுவான முறையில் அறிவிக்கப்பட்டது.
|
|
18.
|
1512-1517
|
அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பெரும்பாலும் நடைமுறையில் வரவில்லை. 1517இல் மார்ட்டின்
லூதர் திருச்சபையில் சீர்திருத்தம் வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
|
|
19.
|
1545-1563
|
மார்ட்டின்
லூதர் போன்ற சீர்திருத்தவாதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இப்பொதுச்சங்கம் பதில்
வழங்கியது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்ந்தது. சங்கம் மூன்று அமர்வுகளாக (1545-47; 1551-52; 1562-63) நிகழ்ந்தது. இச்சங்கம் கொணர்ந்த
சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் பலனளித்தது.
|
|
20.
|
1869-1870
|
இச்சங்கத்தை திருத்தந்தை
ஒன்பதாம் பயஸ் கூட்டினார். இத்தாலிய
இராணுவம் உரோமை நகரைக் கைப்பற்றியதால் சங்கம்
ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கூடவில்லை. மனிதர் கண்களால்
காண்கின்ற படைப்பிலிருந்து படைத்தவர் ஒருவர் உண்டு எனும் உண்மையை அறிந்துகொள்ள
இயலும் என்று இச்சங்கம் கற்பித்தது. இறைநம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு
எதிரானதல்ல என்றும், பகுத்தறிவின் வழியாக மனிதர் கடவுள்
பற்றி ஓரளவாவது அறிய முடியும் என்றும் அறிக்கையிட்டது. திருத்தந்தை இறைநம்பிக்கை பற்றியும் ஒழுக்கம்
பற்றியும் அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது தவறா
வரம் கொண்டுள்ளார்
என்பது அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடப்பட்டது. இச்சங்கம் விவாதத்திற்கு
எடுத்துக்கொள்ளாமல் விடுத்த பொருள்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம்
வத்திக்கான் சங்கத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
|
|
21.
|
வத்திக்கான் 2
|
1962 அக்டோபர்
11 முதல் 1965 டிசம்பர் 8 வரை
|
இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபை உலகோடு உரையாடலில் ஈடுபட வேண்டும்
என்றும், இயேசுவின்
பெயரால் பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை வளர வேண்டும்
என்றும், சமயங்களோடு நல்லுறவு ஏற்படுத்த
வேண்டும் என்றும், திருச்சபையில் புத்துணர்ச்சி கொணரவேண்டும் என்றும்
இச்சங்கம் ஆய்ந்து பல முடிவுகளை அறிவித்தது.
|
No comments:
Post a Comment