தலையான ஏழு பாவங்கள் :
1. ஆங்காரம்
2. கோபம்
3. மோகம்
4. லோபித்தனம் ( கஞ்சத்தனம்)
5. போசனப்பிரியம்
6. காய்மாகாரம் (வஞ்சம் )
7. சோம்பல்
தலையான பாவங்களுக்கு எதிரான ஏழு புண்ணியங்கள்:
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. உதாரம் (தாராளம்)
5. மட்டசனம் ( குறைவாக சாப்பிடுதல்)
6. பிறர்சினேகம்
7. சுறுசுறுப்பு
தலையான ஏழு பாவங்களில் முதல் தலையான பாவமான ஆங்காரம்தான் அன்று லூசிபரை நரகத்தில் வீழ வைத்தது. இன்று பலபேரை ஆட்டிபடைக்கிறது. நான் யார் தெரியுமா ? என்பது மட்டும் அகங்காரம் இல்லை. தனக்குத்தான் எல்லாம் தெறியும் என்பதும் அகங்காரமே. நிறைய பேருக்கு தன்னிடம் இருப்பது ஆங்காரம் என்று தெறியாமலே அதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காரத்தை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு எதிரான தலையான புண்ணியமான தாழ்ச்சி என்பது வேண்டும். தாழ்ச்சிக்கு மிகப்பெரிய உதாரணங்கள் இருவர்.
ஒருவர் நம் ஆண்டவர் இயேசு சுவாமி : ஆண்டவரும் கடவுளுமான இயேசு மனுமக்களை மீட்க தன்னையே தாழ்த்தி, தன்னையே ஒரு பலிபொருளாக்கி, மிகக் கொடிய அவமானங்களைபட்டு, யாரும் அனுபவிக்கமுடியாத சொல்லென்னா பாடுகளை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு பாவிகளுக்கு இடையில் பாவியாக எண்ணப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்து நம்மை மீட்டார்.
இன்னொருவர் நம் தேவதாய் மாதா : தாழ்ச்சிக்கு மிகப்பெரிய உதாரணம். தன்னையே பலிப்பொருளாக்கி வாழ்ந்த இரண்டாவது நபர். கடவுளுக்காக கடவுளின் திட்டத்திற்காக எதையும் சந்திக்க, எதையும் ஏற்க எப்போதும் தயாராக இருந்தார். கடவுளின் தாயாகும் வாய்ப்பையே “ இதோ ஆண்டவரின் அடிமை” என்று கூறியே ஏற்றார். தனக்காக ஒரு நொடிப்பொழுது கூட வாழாமல் கடவுளுக்கும், கடவுளின் சித்தத்திற்கும் தன்னையே முழுவதுமாக ஒப்புக்கொடுத்தவர். எப்பேற்பட்ட பாக்கியமான நிலையில் வாழ்ந்தாலும் தன்னுடைய அபரிதமான தாழ்ச்சியினால் தன்னையே மறைத்து வாழ்ந்தவர். நம் இயேசு சுவாமியையும், நம் மாதாவையும் ரோல் மாடலாக ஏற்று அவர்களைப்போல் வாழ்ந்தால் தலையான ஏழு புண்ணியங்களை கடைப்பிடித்தல் நமக்கு மிக சுலபம்.
ஆண்டவரை அனுக, ஆண்டவரை நோக்கி நம் பாதங்கள் நடக்க,
அடுத்து புனிதர்கள் : நம்மைப்போல் சாதாரண மனிதர்களாக பிறந்து, பல பேர் பாவியாக வாழ்ந்து அவர்கள் தங்களுடைய தாழ்ச்சி என்ற மிகப்பெரிய புண்ணியத்தை கடைபிடித்ததால்தான், மற்ற புண்ணியங்களையும் பெற்று புனிதர்களானார்கள்.
ஆகையால் நமக்கு தடையாக இருக்கும் தலையில் இருக்கும் பாரங்களை இறக்குவோம். உள்ளத்திலும், சிந்தையிலும் தாழ்ச்சி என்ற மனிமகுடத்தை சூடுவோம். அதுவே மிக எளிதாக நம்மை நம் பரமனிடம் சேர்க்கும். கடவுளை அடைய மற்ற புண்ணியங்களையும் நமக்குப் பெற்றுத்தரும்.
இயேசுவுன் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
1. ஆங்காரம்
2. கோபம்
3. மோகம்
4. லோபித்தனம் ( கஞ்சத்தனம்)
5. போசனப்பிரியம்
6. காய்மாகாரம் (வஞ்சம் )
7. சோம்பல்
தலையான பாவங்களுக்கு எதிரான ஏழு புண்ணியங்கள்:
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. உதாரம் (தாராளம்)
5. மட்டசனம் ( குறைவாக சாப்பிடுதல்)
6. பிறர்சினேகம்
7. சுறுசுறுப்பு
தலையான ஏழு பாவங்களில் முதல் தலையான பாவமான ஆங்காரம்தான் அன்று லூசிபரை நரகத்தில் வீழ வைத்தது. இன்று பலபேரை ஆட்டிபடைக்கிறது. நான் யார் தெரியுமா ? என்பது மட்டும் அகங்காரம் இல்லை. தனக்குத்தான் எல்லாம் தெறியும் என்பதும் அகங்காரமே. நிறைய பேருக்கு தன்னிடம் இருப்பது ஆங்காரம் என்று தெறியாமலே அதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காரத்தை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு எதிரான தலையான புண்ணியமான தாழ்ச்சி என்பது வேண்டும். தாழ்ச்சிக்கு மிகப்பெரிய உதாரணங்கள் இருவர்.
ஒருவர் நம் ஆண்டவர் இயேசு சுவாமி : ஆண்டவரும் கடவுளுமான இயேசு மனுமக்களை மீட்க தன்னையே தாழ்த்தி, தன்னையே ஒரு பலிபொருளாக்கி, மிகக் கொடிய அவமானங்களைபட்டு, யாரும் அனுபவிக்கமுடியாத சொல்லென்னா பாடுகளை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு பாவிகளுக்கு இடையில் பாவியாக எண்ணப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்து நம்மை மீட்டார்.
இன்னொருவர் நம் தேவதாய் மாதா : தாழ்ச்சிக்கு மிகப்பெரிய உதாரணம். தன்னையே பலிப்பொருளாக்கி வாழ்ந்த இரண்டாவது நபர். கடவுளுக்காக கடவுளின் திட்டத்திற்காக எதையும் சந்திக்க, எதையும் ஏற்க எப்போதும் தயாராக இருந்தார். கடவுளின் தாயாகும் வாய்ப்பையே “ இதோ ஆண்டவரின் அடிமை” என்று கூறியே ஏற்றார். தனக்காக ஒரு நொடிப்பொழுது கூட வாழாமல் கடவுளுக்கும், கடவுளின் சித்தத்திற்கும் தன்னையே முழுவதுமாக ஒப்புக்கொடுத்தவர். எப்பேற்பட்ட பாக்கியமான நிலையில் வாழ்ந்தாலும் தன்னுடைய அபரிதமான தாழ்ச்சியினால் தன்னையே மறைத்து வாழ்ந்தவர். நம் இயேசு சுவாமியையும், நம் மாதாவையும் ரோல் மாடலாக ஏற்று அவர்களைப்போல் வாழ்ந்தால் தலையான ஏழு புண்ணியங்களை கடைப்பிடித்தல் நமக்கு மிக சுலபம்.
ஆண்டவரை அனுக, ஆண்டவரை நோக்கி நம் பாதங்கள் நடக்க,
அடுத்து புனிதர்கள் : நம்மைப்போல் சாதாரண மனிதர்களாக பிறந்து, பல பேர் பாவியாக வாழ்ந்து அவர்கள் தங்களுடைய தாழ்ச்சி என்ற மிகப்பெரிய புண்ணியத்தை கடைபிடித்ததால்தான், மற்ற புண்ணியங்களையும் பெற்று புனிதர்களானார்கள்.
ஆகையால் நமக்கு தடையாக இருக்கும் தலையில் இருக்கும் பாரங்களை இறக்குவோம். உள்ளத்திலும், சிந்தையிலும் தாழ்ச்சி என்ற மனிமகுடத்தை சூடுவோம். அதுவே மிக எளிதாக நம்மை நம் பரமனிடம் சேர்க்கும். கடவுளை அடைய மற்ற புண்ணியங்களையும் நமக்குப் பெற்றுத்தரும்.
இயேசுவுன் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
No comments:
Post a Comment