"கிறிஸ்து ஒருவரே உங்கள்
ஆசிரியர்"
மத்தேயு 23:1-12 ல் வருகின்ற ஆசிரியர்கள் சரியான வழியை மக்களுக்குக் காட்டவில்லை.
தாங்கள் புகழ்பெறவும் மதிக்கப்படவுமே விரும்பினர். சுருங்கச் சொன்னால் 'பந்தா' பேர்வழிகள்.
இவர்களிடம் உண்மை இல்லை, நீதி
நிலைபெறவில்லை, மக்கள் மேல் அக்கறை இல்லாத பேர்வழிகள்,
சொல்வது ஒன்று செய்வது வேறோன்று. இதுவே வெளிவேடம். கிறிஸ்து நமக்கு
ஒரு நல்ல ஆசிரியர் தேவை என்கிறார்.
இன்றய உலகில் நமக்கும் சரியான வழிகாட்டிகள்
தேவைப்படுகின்றனர். மலிந்து கிடக்கும் முறைகேடுகள் நிறைந்த சமுதாயத்தில் நமக்கு
வழிகாட்ட நல்ல ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். சிலருக்குப் பெற்றோர் வழிகாட்டிகள்.
சிலருக்கு நண்பர்கள் வழிகாட்டிகள். சிலருக்கு நடிகர்கள் வழிகாட்டிகள். சிலருக்கு
அரசியல் தலைவர்கள் வழிகாட்டிகள். பள்ளி ஆசிரியர்கள் பாடத்தை (ளலடடயடிரள)
முடிப்பதிலும், தேற்சி விகிதத்திலுமே கருத்தாய்
இருக்கின்றனர். மாணவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருக்கின்றார்களா என்பது கேள்விக்
குறி.
கிறிஸ்துவே நம் சிறந்த வழிகாட்டி,
அவரே வாழ்வும் வழியும். கிறிஸ்து காட்டும் வழியில் நாம் நடந்தால்
நிச்சயம் நமக்கு வாழ்வு உண்டு. எக்காலத்திலும் குறிப்பாக இத்தவக்காலத்தில்
கிறிஸ்து காட்டிய வழியில் வாழ முற்படுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
--பணி. மரியதாஸ்
No comments:
Post a Comment