அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, September 20, 2017

தொடக்கத் திருச்சபையின் வாழ்க்கை முறையும் இன்றைய அன்பியமும்:

தொடக்கத் திருச்சபை வாழ்க்கை முறையில் இரு முக்கிய அம்சங்கள் உண்டு
        1. சமய வாழ்வு                  2.  சமூக வாழ்வு

     1.    சமய வாழ்வு :

நம்பிக்கை கொண்டோரின் சமய வாழ்வின் நான்கு படிகளாக :
·     இறைவேண்டல்

·     கற்பித்தல்


·     பகிர்தல்


·     நட்புறவு

ஆகியவற்றை காண்கிறோம். இவை நான்கும் அன்பியத்தின் முக்கிய தூண்களாகும்.

இறைவேண்டல் :
யூதர்களின் வழக்கப்படி செபக்கூடங்களில் சென்று சென்று செபிக்கவேண்டும். அங்கு 300க்கு மேற்பட்ட செபக் கூடங்கள் இருந்ததாகவும், தினந்தோறும் மூன்றுமுறை இறைவேண்டல் நடைபெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த இறைவேண்டலில் இறைவார்த்தையும், அதற்கான விளக்கவுரையும் இடம் பெற்றன. இவ்வாறு நமது அன்பியங்களிலும் இத்தகைய இறைவேண்டல் சிறப்பாக இடம் பெற வேண்டும்.

கற்பித்தல் பணி :
இயேசுவின் போதனைகள் “டிடாக்கே” என்று அழைக்கப்படுகிறது. இதன் மையம் இயேசு பாடுபட்டார், இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்பதாகும். இந்தப் போதனையின்படி இன்றைய சமுதாயத்தின் ஆக்கிரமிப்பு சக்தியை எதிர்க்கவும், நீதியை நிலைநாட்ட தேவையான உண்மை, அன்பு சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்க உதவுவதே கற்பித்தல் பணியின் நோக்கமாகும்.

பகிர்தல் :
அன்றைய யூத கலாச்சாரத்தில் எல்லோரும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே இடத்தில் கூடி உணவை பகிர்ந்து உண்பது வழக்கம். இதுவே அன்பியத்தின் பிறப்பிடமாக அமைகிறது. மேலும் நம்மிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் மறந்து, சாதி, சமயம், மொழி கடந்து பகிர்து வாழ அன்பியம் அறைகூவல் விடுக்கிறது.

நட்புறவு பணி :

சாதி, சமயம் கடந்து நட்புறவுடன் உரையாடுவது இயேசு கற்றுத்தந்த உன்னத போதனை. சாமரியப் பெண்ணோடு உறவாடி “இயேசுவே மெசியா” என்ற செய்தியை உணரச் செய்ய இயேசு பயன்படுத்திய வழிமுறையே நட்புறவு. இதுவே அன்பியத்தின் பணி. இச்சமாரியப் பெண்ணின் நிகழ்ச்சி அன்பியம் உருவாக்கத் தேவையான அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது.

    *   இறைவார்த்தையை அறிதல் :

சமாரியப் பெண் இயேசுவை மெசியா என்று அறிகிறாள்.

    *   உரையாடல் :
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் சமாரியப் பெண் என்றாலும், அவளோடு இயேசு உரையாடி உறவை ஏற்படுத்துகிறார்.
       
   *   ஏற்றுக்கொள்ளுதல் :
சமாரியப் பெண், இயேசு மெசியா என்று அறிந்தபோது, அவரை மீட்பராக ஏற்றுக்கொண்டு தன் வாழ்வை மாற்றுகிறாள்.
     
  *   செயல்பாடு :
அவள் ஊருக்குள் சென்று, மெசியாவை வந்து பாருங்கள் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாள்..

   *   புதுவாழ்வு பெறுதல் :
மேலும் அவள் மற்றவர்களுக்கு மீட்பரை அறிமுகம் செய்த பின், பழைய பாவவாழ்வை விட்டு சான்று பகரும் புதுவாழ்வு வாழ்ந்தாள். அவ்வாறே அன்பியங்களில் நட்புறவுடன் நாம் உறவாடுவது, புதியதோர் சமுதாயம் உருவாக உதவுகிறது.


      2. சமுக வாழ்வு :

·   தேவைகளை அறிதல் :
இளம் திருச்சபையில் பாதிக்கப்பட்ட கிரேக்க கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லை என்று முறையிடப்பட்டது. அக்குறையை நிறைவு செய்ய 7 நபர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நாமும் நமது பகுதியில் தேவையில் உள்ளவர்களை கண்டறிந்து அன்பியங்கள் வழியாக உதவி செய்ய முயற்சி செய்யவேண்டும்.

·   ஏழைகளுக்கு உதவுதல் :
ஏழைகளின் தேவை அறிந்து உதவி செய்தல் அவசியம். இவ்வழியில் தூய பவுல் அடிகளார் தாமும் தொடர்ந்து ஏழைகள் வாழ்வு மேம்படவே உழைத்ததாகக் கூறுகிறார். இவ்வாறே நமது அன்பியம் வழியாக நாம் வாழும் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் தேவையை கண்டறிந்து அவர்களது வாழ்வு மேம்படவும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவும், மாண்பு மதிக்கப்படவும் நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய முயற்சியேடுப்போம்..

·    தாராளகுணம் :
சைப்பிரசு தீவை சேர்ந்த யோசேப்பு தனக்கு உள்ளதெல்லாம் மனநிறைவோடு பகிர்ந்தார். தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து, திருத்தூதர்களது காலடியில் வைத்தார் (தி. ப. 4: 37). இவ்வாறே நாம் நமக்குள்ளவற்றை பிறரோடு பகிர, அன்பிய வாழ்வு நம்மை அழைக்கிறது.

நேர்மறை விளைவுகள் :
i)     எல்லாம் பொது உடைமையாய் மாறியது (தி.ப 4 : 32).
ii)    தேவையின் அடிப்படையில் பங்கீடு அமைந்தது (தி. ப 2 : 45, 4 : 35).
iii)    பகிர்ந்ததால் பசியில்லாத நிலை உருவானது (தி.ப 2 : 46).
iv)   மக்கள் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாய் வாழ்ந்தனர் (தி.ப 4 : 32).
v)    மக்கள் மீட்பு பெற்றனர் (தி.ப 2 : 47).

மீட்பு என்பது தனிமனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. ஒருவன் மீட்புப் பெறும்போது, ஒரு குழுமமே மீட்புப் பெறுகிறது. மேலும் ஒரு சமூதாயமே வாழ்வு பெறுகிறது. சமூதாயத்தில் காண்கின்ற அநீதியான ஆட்சிமுறை, முதாளித்துவ ஆட்சி அமைப்பு, ஊதியக் குறைவு, ஏற்றத்தாழ்வு, மதநல்லிணக்கமின்மை, சாதிய சாசனங்கள், அடிமைத்தன வாழ்வு போன்றவை மாற்றப்பட்டு, மக்கள் அனைவரும் ஒன்றேயென்ற இலக்கு உருவாகிறது. இதுவே உண்மையான அன்பியத் திருச்சபையின் வாழ்வாகும்.

No comments:

Post a Comment