அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 14, 2018

தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள்

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபை 18 மறைமாவட்டங்களாக அமைந்து இயங்கிவருகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயர் (bishop) அல்லது பேராயர் (archbishop) தலைமையில், குருக்களின் நேரடி ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. குருக்களுள் பெரும்பான்மையோர் மறைமாவட்டக் குருக்கள் என்னும் வகையினர். இவர்கள் பெரும்பாலும் பங்குத்தந்தையராகப் பணிபுரிகின்றார்கள். மேலும், இயேசு சபை,கப்புச்சின் சபை,சலேசிய சபை போன்ற துறவறசபைக்குருக்கள் மறைப்பணி,கல்விப்பணி,சமூகப்பணி போன்ற பணிகளை மிகசிறப்பாக தமிழகமெங்கும் சிறப்பாக ஆற்றிவருகின்றனர்.

ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பெண்துறவியர் பலர் பல துறவற சபைகளில் உள்ளனர். இவர்கள் அருட்சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். கல்விக்கூடங்களை நடத்துவதோடு, மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற பிறரன்புப்பணி நிறுவனங்களையும் இவர்கள் நடத்தி, சாதி மத வேறுபாடின்றி பணியாற்றுகின்றனர்.

மதுரை உயர்மறைமாவட்டம்
கோட்டாறு மறைமாவட்டம்
திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
தூத்துக்குடி மறைமாவட்டம்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்
சிவகங்கை மறைமாவட்டம்
திண்டுக்கல் மறைமாவட்டம்
குழித்துறை மறைமாவட்டம்
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
வேலூர் மறைமாவட்டம்
செங்கல்பட்டு மறைமாவட்டம்
உதகை மறைமாவட்டம்
கோவை மறைமாவட்டம்
புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்
குடந்தை மறைமாவட்டம்
சேலம் மறைமாவட்டம்
தர்மபுரி மறைமாவட்டம்
தஞ்சை மறைமாவட்டம்
மேற்கூறிய 18 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தவிர, கீழ்வரும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்களும் தமிழகத்தில் செயல்படுகின்றன. அவை:

சீரோ-மலபார் தக்கலை மறைமாவட்டம்
சீரோ-மலபார் இராமநாதபுரம் மறைமாவட்டம்
சீரோ-மலங்கரை மார்த்தாண்டம் மறைமாவட்டம்

No comments:

Post a Comment